என் மலர்
பெண்கள் உலகம்

காரைக்குடி மட்டன் நெய் ரோஸ்ட்
காரைக்குடி மட்டன் நெய் ரோஸ்ட் சூடான சோற்றில் போட்டு சாப்பிடவும், இட்லி, சப்பாத்தி போன்றவற்றுக்கு தொட்டுக்கொள்ளவும் மிக மிக சுவையாக இருக்கும்.
தேவையான பொருட்கள் :
மட்டன் - 1 கிலோ
நெய் - 100 கிராம்
வரமிளகாய் - 10
மல்லி - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
சோம்பு - 1 தேக்கரண்டி
மிளகு - 2 தேக்கரண்டி
முந்திரி பருப்புகள் - 15
பூண்டு இஞ்சி பேஸ்ட் - 1 மேஜைக்கரண்டி
[பாட்டி மசாலா] மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
பட்டை - இரண்டு விரல் அளவு
கிராம்பு - 4
ஏலக்காய் - 4
தயிர் - 150 மிலி
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு.
எலுமிச்சம் சாறு - 1 டீஸ்பூன்

செய்முறை :
மட்டனை நன்கு கழுவி துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
குக்கரை அடுப்பில் வைத்து 50 கிராம் நெய் ஊற்றி சூடானதும் அதில் 1 டேபிள் ஸ்பூன் பூண்டு இஞ்சி பேஸ்ட் மற்றும் [பாட்டி மசாலா] மஞ்சள் தூள், விரல் அளவு பட்டை போட்டு லேசாக வதக்கவும்.
பூண்டு இஞ்சி பேஸ்ட் வதங்கியதும் வெட்டிய மட்டன் துண்டுகளை அதில் போட்டு மேலும் ஐந்து நிமிடங்கள் நன்றாக வதக்கவும்.
போட்டு இறக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் வரமிளகாய்களுடன் முந்திரி பருப்பு மற்றும், மல்லி, சீரகம், சோம்பு, மிளகு, கிராம்பு, ஏலக்காய் ஒவ்வொன்றாக போட்டு வறுத்து ஆற வைக்கவும்.
பின்னர் வறுத்த பொருட்களை மிக்சியில் போட்டு சிறிது தண்ணீர் எலுமிச்சை பழ சாறு கலந்து அரைத்துக்கொள்ளவும்.
குக்கரின் உள்ள கறியை தனியாக எடுத்துக்கொண்டு கறி வெந்த தண்ணீரை தனியாக எடுத்து வைக்கவும்.
அகன்ற பாத்திரம் ஒன்றை அடுப்பில் வைத்து சூடாக்கவும்.
அதில் மீதி இருக்கும் 50 கிராம் நெய் விட்டு சூடாக்கவும், சூடாகிய பின் இப்போது வறுத்து அரைத்த மசாலாவை அதில் போட்டு மேற்கொண்டு தயிர் ஊற்றி வதக்கவும்.
பச்சை வாசனை எல்லாம் போய் மசாலா நன்றாக வதங்கி வந்த பின் அதில் வேக வைத்த கறியை போட்டு பிரட்டவும்.
பின்னர் கறி வெந்த தண்ணீரை ஊற்றி அடுப்பை மீடியத்தில் வைத்து 10 நிமிடங்கள் அவ்வப்போது வதக்கியப்படி இருக்கவும். பிறகு கறிவேப்பிலை, கொத்தமல்லி போட்டு கிளறி இறக்கவும்.
சூப்பரான காரைக்குடி மட்டன் நெய் ரோஸ்ட் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
மட்டன் - 1 கிலோ
நெய் - 100 கிராம்
வரமிளகாய் - 10
மல்லி - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
சோம்பு - 1 தேக்கரண்டி
மிளகு - 2 தேக்கரண்டி
முந்திரி பருப்புகள் - 15
பூண்டு இஞ்சி பேஸ்ட் - 1 மேஜைக்கரண்டி
[பாட்டி மசாலா] மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
பட்டை - இரண்டு விரல் அளவு
கிராம்பு - 4
ஏலக்காய் - 4
தயிர் - 150 மிலி
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு.
எலுமிச்சம் சாறு - 1 டீஸ்பூன்

செய்முறை :
மட்டனை நன்கு கழுவி துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
குக்கரை அடுப்பில் வைத்து 50 கிராம் நெய் ஊற்றி சூடானதும் அதில் 1 டேபிள் ஸ்பூன் பூண்டு இஞ்சி பேஸ்ட் மற்றும் [பாட்டி மசாலா] மஞ்சள் தூள், விரல் அளவு பட்டை போட்டு லேசாக வதக்கவும்.
பூண்டு இஞ்சி பேஸ்ட் வதங்கியதும் வெட்டிய மட்டன் துண்டுகளை அதில் போட்டு மேலும் ஐந்து நிமிடங்கள் நன்றாக வதக்கவும்.
போட்டு இறக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் வரமிளகாய்களுடன் முந்திரி பருப்பு மற்றும், மல்லி, சீரகம், சோம்பு, மிளகு, கிராம்பு, ஏலக்காய் ஒவ்வொன்றாக போட்டு வறுத்து ஆற வைக்கவும்.
பின்னர் வறுத்த பொருட்களை மிக்சியில் போட்டு சிறிது தண்ணீர் எலுமிச்சை பழ சாறு கலந்து அரைத்துக்கொள்ளவும்.
குக்கரின் உள்ள கறியை தனியாக எடுத்துக்கொண்டு கறி வெந்த தண்ணீரை தனியாக எடுத்து வைக்கவும்.
அகன்ற பாத்திரம் ஒன்றை அடுப்பில் வைத்து சூடாக்கவும்.
அதில் மீதி இருக்கும் 50 கிராம் நெய் விட்டு சூடாக்கவும், சூடாகிய பின் இப்போது வறுத்து அரைத்த மசாலாவை அதில் போட்டு மேற்கொண்டு தயிர் ஊற்றி வதக்கவும்.
பச்சை வாசனை எல்லாம் போய் மசாலா நன்றாக வதங்கி வந்த பின் அதில் வேக வைத்த கறியை போட்டு பிரட்டவும்.
பின்னர் கறி வெந்த தண்ணீரை ஊற்றி அடுப்பை மீடியத்தில் வைத்து 10 நிமிடங்கள் அவ்வப்போது வதக்கியப்படி இருக்கவும். பிறகு கறிவேப்பிலை, கொத்தமல்லி போட்டு கிளறி இறக்கவும்.
சூப்பரான காரைக்குடி மட்டன் நெய் ரோஸ்ட் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story






