என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    குழந்தைகளுக்கு விருப்பமான கிரிஸ்பி பனானா
    X

    குழந்தைகளுக்கு விருப்பமான கிரிஸ்பி பனானா

    குழந்தைகள் தினமும் வாழைப்பழம் சாப்பிடுவது உடலுக்கு நல்லது. இன்று நேந்திரம் பழத்தை வைத்து இனிப்பான ஸ்நாக்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    நேந்திரன் பழம் - 2,
    மைதா - ஒரு கப்,
    சர்க்கரை - 5 டீஸ்பூன்,
    மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை,
    எண்ணெய், ஓட்ஸ் - தேவைக் கேற்ப,
    உப்பு - கால் டீஸ்பூன்.

    செய்முறை:

    மைதாவை நன்றாக சலித்து கொள்ளவும்.

    நேந்திரன் பழத்தை தோல் உரித்து, நடுவில் இரண்டாக வெட்டி, பிறகு பஜ்ஜிக்கு நறுக்குவதுபோல் நீளவாக்கில் நறுக்கி வைக்கவும்.

    ஓட்ஸை ஒரு தட்டில் பரப்பி வைக்கவும்.

    ஒரு பாத்திரத்தில் சலித்த மைதாவை போட்டு அதனுடன் உப்பு, மஞ்சள் தூள், சர்க்கரை, நீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கரைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கொதிக்க விடவும்.

    வெட்டிய நேந்திரம் பழ துண்டுகளை மாவில் முக்கி எடுத்து தட்டில் வைத்துள்ள ஓட்ஸ் மீது புரட்டி எடுத்து, சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்து பரிமாறவும்.

    சூப்பரான கிரிஸ்பி பனானா ரெடி!

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×