என் மலர்tooltip icon

    கிச்சன் கில்லாடிகள்

    சாம்பாரில் வெண்டைக்காய் போட்டு செய்தால் சூப்பரான இருக்கும். இப்போது வெண்டைக்காய் சாம்பார் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    துவரம்பருப்பு - 150 கிராம்
    வெண்டைக்காய் - 1/4 கிலோ
    பெ.வெங்காயம் - 1
    ப.மிளகாய் - 3
    தக்காளி - 3 (மீடியம் சைஸ்)
    புளி - 25 கிராம்
    சாம்பார் பொடி - 2 டேபிள் ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    கொத்தமல்லி - தேவையான அளவு

    தாளிக்க :

    சி.வெங்காயம் - 5
    எண்ணெய் - தேவையான அளவு
    கடுகு, உளுந்து - தேவையான அளவு
    கறிவேப்பிலை - தேவையான அளவு

    செய்முறை :

    * கொத்தமல்லி, சி.வெங்காயம், வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * பருப்பை நன்றாக கழுவி சுத்தம் செய்து குக்கரில் போட்டு வேக வைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.

    * வெண்டைக்காயை பெரிய துண்டுகளாக நறுக்கி, கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு வதக்கி வைத்துக்கொள்ளவும்.

    * வேக வைத்த பருப்பில் சாம்பார் பொடியை போட்டு புளிக்கரைசலை விட்டு தக்காளி, வெங்காயம், ப.மிளகாய் ஆகியவைகளை சேர்த்து 15 நிமிடம் கொதிக்க வைக்கவும்.

    * பிறகு அதில் வெண்டைக்காய் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.

    * கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, சி.வெங்காயம், ஆகியவைகளை சேர்த்து தாளித்து சாம்பாரில் ஊற்றி 2 நிமிடம் கொதிக்க விடவும்.

    * பிறகு அடுப்பிலிருந்து இறக்கி வைத்து கொத்தமல்லியை சேர்க்கவும்.

    * கமகமக்கும் சுவையான வெண்டைக்காய் சாம்பார் ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பேச்சிலர் சமையலில் இன்று எளிய முறையில் செய்யக்கூடிய வெஜிடபிள் பிரியாணியை எப்படி செய்வது என்று கீழே விரிவாக பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பாசுமதி அரிசி - 1 கப்
    தேங்காய் பால் - 1/4 கப்
    தண்ணீர் - 1 3/4 கப்
    வெங்காயம் - 1
    தக்காளி - 1
    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
    தயிர் - 2 டீஸ்பூன்
    நெய் - 1 டேபிள் ஸ்பூன் + 2 டீஸ்பூன்
    எண்ணெய் - 1/2 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு

    தாளிப்பதற்கு...

    கிராம்பு - 2
    பட்டை - 1/2 இன்ச்
    ஏலக்காய - 1
    பிரியாணி இலை - 1

    காய்கறிகள்...

    கேரட் - 2
    பீன்ஸ் - 6
    பட்டாணி - 1/4 கப்

    அரைப்பதற்கு...

    புதினா - 1/4 கப்
    கொத்தமல்லி - 1/4 கப்
    பச்சை மிளகாய் - 2

    செய்முறை :

    * தக்காளி, பீன், கேரட், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * புதினா, கொத்தமல்லியை சுத்தம் செய்து வைத்து கொள்ளவும்.

    * அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.

    * குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் பிரியாணி இலை சேர்த்து தாளித்த பின் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    * வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் தக்காளி சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

    * பின்பு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கிய பிறகு அத்துடன் அரைத்து வைத்துள்ள புதினா பேஸ்ட், தயிர் மற்றும் உப்பு சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கி விட வேண்டும்.

    * அடுத்து அதில் காய்கறிகளை சேர்த்து 5 நிமிடம் வதக்கிய பின்னர் அதில் அரிசியை கழுவி போட்டு சிறிது நேரம் கிளறி விட வேண்டும்.

    * இறுதியில் தேங்காய் பால் மற்றும் தண்ணீர் சேர்த்து, ஊற்றி குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கவும்.

    * விசில் போனதும் மீதமுள்ள நெய் சேர்த்து கிளறி பரிமாறினால், வெஜிடபிள் பிரியாணி ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சிக்கன், மட்டன் உருண்டை குழம்பு சாப்பிட்டு இருப்பீர்கள். மீன் உருண்டை குழம்பு சூப்பராக இருக்கும். இதை எப்படி செய்வது என்று விரிவாக கீழே பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    மீன் - 1/2 கிலோ (துண்டு மீன்)
    பச்சை மிளகாய் - 4
    வெங்காயம் - 2
    தக்காளி - 2
    இஞ்சி, பூண்டு விழுது - 1 ஸ்பூன்
    கொத்தமல்லித்தழை - 2 கைப்பிடி
    புதினா தழை - சிறிதளவு
    கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன்
    மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
    தனியா தூள் - அரை ஸ்பூன்
    சீரக தூள் - டீஸ்பூன்
    முட்டை - 1
    பிரட் தூள் - தேவைக்கு
    தேங்காய் துருவல் - அரை கப்
    முந்திரி - 15
    எண்ணெய், உப்பு - தேவைக்கு

    உருண்டை செய்ய :

    முட்டையை ஒரு கிண்ணத்தில் ஊற்றி நன்றாக அடித்து கொள்ளவும்.

    மீனை வேகவைத்து தோல், முள் நீக்கி உதிர்த்த பின் மிக்சியில் போட்டு அரைத்து சிறு உருண்டைகளாக உருட்டி  முட்டையில் முக்கி ரொட்டித் துண்டுகளில் பிரட்டி சூடான எண்ணெயில் போட்டு பொரித்துக் எடுத்து தனியாக வைத்து கொள்ளவும்.

    செய்முறை :

    * வெங்காயம், தக்காளி, புதினா, கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * தேங்காய் துருவல், முந்திரியை மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.

    * வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் வெங்காயம் போட்டு நன்றாக வதக்கவும்.

    * வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    * இஞ்சி, பூண்டு பச்சை வாசனை போனவுடன் அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    * எண்ணெய் பிரிந்து வரும் போது கரம்மசாலா தூள், மிளகாய் தூள், தனியா தூள், சீரகத்தூள் சேர்த்து வதக்கவும்.

    * அடுத்து அதில் சுடுதண்ணீர் ஒரு கப் விட்டு அது கொதிக்கும்போது பொரித்து வைத்துள்ள மீன் உருண்டைகளை போட்டு சிறுதீயில் கொதிக்கவிடவும்.

    * நெய் மேலே மிதக்கும்போது அரைத்த தேங்காய் விழுதை போட்டு 5 நிமிடங்களுக்கு கொதிக்கவிடவும்.

    * கடைசியாக கொத்தமல்லி, புதினா இலை போட்டு இறக்கி பரிமாறவும்.

    * சூப்பரான செட்டிநாடு மீன் உருண்டை குழம்பு ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    விருந்தினர் திடீரென வீட்டிற்கு வந்தால் விரைவில் செய்யக்கூடிய தேங்காய் பால் ஸ்வீட் கீர் செய்து கொடுத்து அசத்தலாம். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    தேங்காய் பால் - 1 கப் முதல் 2 கப்
    சர்க்கரை - 1/2 கப்
    தேங்காய் துருவல் - 1/2 கப்
    பாதாம் பருப்பு, முந்திரி பருப்பு - 2 டீஸ்பூன்
    திராட்சை பழம் - 1/2 கப்
    குங்குமப்பூ - 1 சிட்டிகை
    சோள மாவு - 2 ஸ்பூன்

    செய்முறை :

    * பாதாம், முந்திரியை பொடியாக நறுக்கி வைக்கவும்.

    * தேங்காய் பாலின் முதல் பாலை தனியாக எடுத்து வைக்கவும்.

    * அடி கனமாக பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் இரண்டாவது பாலை ஊற்றி 2 நிமிடம் கொதிக்க விடவும்.

    * பிறகு அதில் சோளமாவை போட்டு கரைத்து விட்டு சர்க்கரை போடவும்.

    * ஒரு கொதி வந்து சற்று திக்கான பதம் வந்ததும் இறக்கி தேங்காய் துருவல், பாதாம், முந்திரி, திராட்சை பழங்களை போட்டு கலந்து பிரிட்ஜில் வைக்கவும்.

    * இப்போது தேங்காய் பால் ஸ்வீட் கீர் ரெடி.

    * தேவையான போது, எடுத்து ஜில்லென்று பரிமாறவும்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சளித்தொல்லையால் அவதிப்படுபவர்கள் இந்த செட்டிநாடு மிளகு நண்டு குழம்பை செய்து சாப்பிட்டால் நிவாரணம் கிடைக்கும். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.


    chettinad milagu nandu kulambu






    தேவையான பொருட்கள் :

    நண்டு - அரை கிலோ
    பெரிய வெங்காயம் - 2
    சின்ன வெங்காயம் - 25 கிராம்
    தக்காளி - 4
    காய்ந்த மிளகாய் - 3
    பூண்டு - 5 பல்
    புளி - சிறிதளவு
    இஞ்சி - சிறிது
    மிளகாய்த்தூள்- 1 ஸ்பூன்
    மல்லித்தூள் - 2 ஸ்பூன்
    மஞ்சள்தூள் - 1 ஸ்பூன்
    சோம்பு - 1 ஸ்பூன்
    சீரகம் - 1ஸ்பூன்
    மிளகு - 3 ஸ்பூன்
    தேங்காய் - 1 மூடி
    நல்லெண்ணெய் - குழிக்கரண்டி அளவு
    உப்பு - தேவையான அளவு
    கொத்தமல்லி - சிறிதளவு

    தாளிக்க :

    பட்டை - சிறிதளவு
    கிராம்பு - சிறிதளவு
    சோம்பு - சிறிதளவு

    செய்முறை :

    * நண்டைச் சுத்தம் செய்து சுடுநீரில் மஞ்சள் தூள் போட்டு பிரட்டி வைக்கவும்.

    * பெரிய வெங்காயம், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * புளியை சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து வைக்கவும்.

    * தேங்காய், சோம்பு, சீரகம், மிளகு, பூண்டு, இஞ்சி ஆகியவற்றுடன் சின்ன வெங்காயம் சேர்த்து அரைக்கவும்.

    * கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க வேண்டிய பொருட்கள் சேர்த்துத் தாளித்த பின் அதில் நறுக்கிய வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.

    * வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் தக்காளி, மிளகாய் போட்டு வதக்கவும்.

    * அடுத்து அதில் சுத்தம் செய்து வைத்த நண்டை சேர்த்துக் கிளறவும்.

    * பின்பு சிறிதளவு புளிக்கரைசலை ஊற்றவும்.

    * அடுத்து அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லித் தூள் சேர்த்துக் கிளறி விடவும்.

    * பச்சை வாசனை போனவுடன் இதில் அரைத்து தேங்காய் விழுது சேர்த்து, தேவையான உப்பு சேர்த்து நன்றாகக் கொதிக்க விடவும். நண்டு நன்றாக வெந்தவுடன் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

    * சூப்பரான செட்டிநாடு மிளகு நண்டு குழம்பு ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    செட்டிநாடு சமையலில் மிகப்பிரபலமானது மட்டன் எலும்பு குழம்பு. நாளை ஞாயிற்றுக்கிழமை மட்டன் எலும்பு குழம்பு செய்து வீட்டில் உள்ளவர்களை அசத்துங்கள்.
    தேவையான பொருட்கள் :

    மட்டன் எலும்பு கறி - அரைக்கிலோ
    சின்ன வெங்காயம் - 100 கிராம்
    தக்காளி - 2
    மட்டன் மசாலா தூள் - 3 டீஸ்பூன்
    ப. மிளகாய் - 3
    மஞ்சள் தூள் - சிறிதளவு
    இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
    மிளகு, சீரகம், கசகசா அரைத்தது - 2 டீஸ்பூன்
    தேங்காய் பால் - 1 கப்
    எண்ணெய் - 1 1/2 ஸ்பூன்
    பட்டை - 1 அங்குலம் அளவு
    கிராம்பு - 4
    கறிவேப்பிலை - ஒரு கொத்து
    கொத்தமல்லி - சிறிதளவு

    செய்முறை  :

    * சின்ன வெங்காயம், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * மட்டன் எலும்பு கறியை நன்றாக கழுவி வைக்கவும்.

    * குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்த உடன் கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் ப.மிளகாய், சின்ன வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    * வெங்காயம் நன்றாக வதக்கியவுடன் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    * தக்காளி நன்றாக மசிந்தவுடன் கழுவி வைத்துள்ள எலும்பு கறியை போட்டு கிளறவும்.

    * அடுத்து அதில் உப்பு, மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது போட்டு சிறிது நேரம் குக்கரை மூடி வைத்து அடுப்பை மிதமாக வைக்கவும்.

    * பின்னர் குக்கரை திறந்து அதில் அரைத்த சீரக விழுது, மட்டன் மசாலா தூள் சேர்த்து கிளறி எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.

    * பின்னர் இத்துடன் தேங்காய் பால் ஊற்றி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குக்கரை விசில் போட்டு மூடி வைத்து 5 விசில் வரை விடவும். அப்பொழுதுதான் எலும்பு நன்றாக வேகும்.

    * விசில் இறங்கியவுடன் கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.

    * சூப்பரான சன்டே ஸ்பெஷல் மட்டன் எலும்பு குழம்பு ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சேமியாவில் பிரியாணி செய்தால் சூப்பராக இருக்கும். குழந்தைகளுக்கும் மிகவும் பிடிக்கும். அதை எப்படி செய்வது என்று கீழே விரிவாக பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சேமியா - 200 கிராம்
    தக்காளி - 2
    பெரிய வெங்காயம் - 1
    ப.மிளகாய் - 2
    கேரட் - 25 கிராம்
    பீன்ஸ் - 25 கிராம்
    பட்டாணி - 25  கிராம்
    இஞ்சி, பூண்டு விழுது - 1 ஸ்பூன்
    பட்டை - 2  துண்டு
    கிராம்பு - 3
    கசகசா - 1/2  தேக்கரண்டி
    மிளகாய் தூள் - அரை ஸ்பூன்
    தனியா தூள் - கால் ஸ்பூன்
    மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
    கொத்தமல்லி - சிறிதளவு
    கறிவேப்பிலை - சிறிதளவு
    உப்பு, நெய் - தேவைக்கு
    சோம்பு - அரை ஸ்பூன்

    செய்முறை :

    * கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் சேமியாவை போட்டு லேசாக வறுத்துக் கொள்ளவும்.

    * இஞ்சி பூண்டு விழுது, பட்டை, கிராம்பு, கசகசா முதலியவற்றை நைசாக அரைத்துக் கொள்ளவும்.

    * வெங்காயம், ப.மிளகாய், தக்ககாளி, கொத்தமல்லி, கேரட், பீன்ஸை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * காய்கறிகளை முக்கால் பாகம் வேக வைத்து கொள்ளவும்.

    * வாணலியில் நெய் விட்டு சூடானதும் சோம்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் ப.மிளகாய், வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.

    * வெங்காயம் நன்றாக வதங்கியவுடன் தக்காளி சேர்த்து வதக்கவும்.

    * இதனுடன் அரைத்து வைத்த இஞ்சி பூண்டு மசாலா, மிளகாய் தூள், மஞ்சள் தூள், தனியா தூள் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    * பிறகு அதில் தேவையான அளவு உப்பு, 200 கிராம் சேமியாவுக்கு 400 கிராம் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.

    * தண்ணீர் கொதி வந்தவுடன் சேமியாவை அதில் கொட்டி தண்ணீர் வற்றும் வரை மூடி வைக்கவும்.

    * தண்ணீர் வற்றி உதிரியாக வந்தவுடன் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

    * சூப்பரான சேமியா பிரியாணி ரெடி.

    * இந்த சேமியா பிரியாணியில் சிக்கன், மட்டன், முட்டை சேர்த்தும் செய்யலாம்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பள்ளியில் இருந்து வரும் குழந்தைகள் மாலையில் சூடாக சாப்பிட சுவையான வெங்காய போண்டா செய்வது எப்படி என்று கீழே விரிவாக பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கடலை மாவு - 1 கப்
    பெரிய வெங்காயம் - 2
    பச்சை மிளகாய் - 2
    சோம்பு - 1 ஸ்பூன்
    மிளகாய்தூள் - 1 ஸ்பூன்
    மைதா மாவு - 4 ஸ்பூன்
    அரிசி மாவு - 2 ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

    செய்முறை :

    * வெங்காயத்தை தோல் நீக்கி நீளமாக மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்.

    * ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * கடலை மாவுடன் சோம்பு, மிளகாய்த்தூள், அரிசி மாவு, மைதா மாவு, உப்பு, வெங்காயம், ப.மிளகாய் சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து பிசைந்து வைக்கவும். மாவு உருண்டை பிடிக்கிற அளவு பக்குவமாக இருக்குமாறு பார்த்து கொள்ளவும்.

    * கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி போட்டு அடுப்பை சிம்மில் வைத்து நன்கு வேக வைத்து எடுக்கவும்.

    * சுவையான மாலை நேர ஸ்நாக்ஸ் வெங்காய போண்டா ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு சிக்கன் மிகவும் பிடிக்கும். சிக்கன், உருளைக்கிழங்கை வைத்து சூப்பரான கட்லெட் செய்வது எப்படி என்று விரிவாக கீழே பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சிக்கன் - 500 கிராம்
    உருளைக்கிழங்கு - 2
    வெங்காயம் - 2
    இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்
    பச்சை மிளகாய் - 2
    மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
    மல்லித் தூள் - 1 ஸ்பூன்
    மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
    சீரகத் தூள் - 1 ஸ்பூன்
    கரம் மசாலா தூள் - 1 ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    கொத்தமல்லித் தழை - சிறிதளவு
    எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்
    மைதா மாவு - 3 ஸ்பூன்
    பிரட் தூள் - தேவைக்கு
    எண்ணெய் - பொரிக்க

    செய்முறை :

    * எலும்பில்லாத சிக்கனை சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக நறுக்கி மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும்.

    * உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும்.

    * வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயம் சேர்த்து சிறிது நேரம் வதக்கிய பின்னர் இஞ்சி பூண்டு விழுது, ப.மிளகாய் சேர்த்து கிளறவும்.

    * பின்பு மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள், சீரகத்தூள், கரம் மசாலா தூள், உப்பு சேர்க்கவும்.

    * அடுத்து அதில் சிக்கனை சேர்த்து பொன்னிறமாகும் வரை வேக வைக்கவும்.

    * கடைசியாக கொத்தமல்லித்தழை, எலுமிச்சை சாறு, மசித்த வைத்த உருளைக்கிழங்கை சேர்த்து நன்கு சுருள வதக்கி இறக்கவும்.

    * ஆறியதும் அதிலிருந்து சிறிய பகுதி எடுத்து அதனை பந்து போன்று உருட்டி வேண்டிய வடிவில் தட்டி வைக்கவும்.

    * மைதா மாவை சிறிது தண்ணீர் ஊற்றி கரைத்து கொள்ளவும்.

    * பின்பு செய்து வைத்திருக்கும் கட்லெட்டை மைதா மாவில் முக்கி எடுத்து புரட் தூளில் பிரட்டி எடுத்து வைக்கவும். அனைத்து கட்லெட்டுகளையும் மாவில் முக்கி எடுத்து அவற்றை 30 நிமிடம் பிரிட்ஜில் வைக்கவும்.

    * பின்பு கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் கட்லெட்டை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

    * சூப்பரான சிக்கன் - உருளைக்கிழங்கு கட்லெட் ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சிலருக்கு காரசாரமாக சாப்பிட மிகவும் பிடிக்கும். அவர்களுக்கு மிகவும் சிம்பிளான காரசாரமான இறால் மசாலா எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
    இறால் - 250 கிராம்
    பட்டை - 1 துண்டு
    சோம்பு - 1 டீஸ்பூன்
    ஏலக்காய் - 2
    வெங்காயம் - 1
    பச்சை மிளகாய் - 1
    கறிவேப்பிலை - சிறிது
    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
    மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
    கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
    மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
    தக்காளி - 2
    உப்பு - தேவையான அளவு
    தண்ணீர் - 1/2 கப்

    ஊற வைப்பதற்கு...

    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
    மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
    கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
    மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை :

    * வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * இறாலை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.

    * சுத்தம் செய்த இறாலை ஒரு பௌலில் போட்டு, அத்துடன் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து நன்கு பிரட்டி, 30 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

    * ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் ஊற வைத்துள்ள இறாலை சேர்த்து 7 நிமிடம் வறுத்து தனியாக ஒரு பௌலில் வைத்துக் கொள்ள வேண்டும்.

    * அதில் உள்ள எண்ணெயில் பட்டை, சோம்பு சேர்த்து தாளித்த பின் வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து 5 நிமிடம் வதக்க வேண்டும்.

    * பிறகு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி, உப்பு மற்றும் அனைத்து மசாலா பொடிகளையும் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

    * அடுத்து தக்காளி சேர்த்து மென்மையாகும் வரை வதக்கவும்.

    * பின் அதில் சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விட வேண்டும்.

    * நன்றாக கொதித்து கிரேவி திக்கானதும் இறுதியில் இறால் சேர்த்து நன்கு கிளறி, 8 நிமிடம் வேக வைத்து இறக்கினால், காரசாரமான இறால் மசாலா ரெடி!!!

    * இதை சப்பாதி, தோசைக்கு தொட்டு கொள்ள சுவையாக இருக்கும்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சப்பாத்திக்கு தொட்டு கொள்ள காராபூந்தி ரைத்தா செய்து சாப்பிட்டால் சூப்பரான இருக்கும். இப்போது காராபூந்தி ரைத்தா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    காராபூந்தி - கால் கப்
    கெட்டியான தயிர் - ஒரு கப்
    உப்பு - தேவைகேற்ப
    வெங்கயம் - ஒன்று
    சாட் மசாலா - கால் டீஸ்பூன்
    கொத்தமல்லி - சிறிதளவு

    செய்முறை :

    * வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * ஒரு கிண்ணத்தில் தயிர் ஊற்றி நன்றாக அடித்து கொள்ளவும்.

    * பிறகு, அதில் சாட் மசாலா, வெங்காயம், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.

    * கடைசியாக காராபூந்தி மற்றும் கொத்தமல்லி தூவி ஸ்பூன் வைத்து பரிமாறவும்.

    * சூப்பரான காராபூந்தி ரைத்தா ரெடி.

    * இது அனைத்து வகை சப்பாத்தி, பிரியாணி, மற்றும் புலாவ்களுக்கு பொருத்தமாக இருக்கும். காராபூந்தியை கடைசியாக சேர்த்தால் தான் நன்றாக இருக்கும்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மட்டன் புலாவ் பிரியாணியில் இருந்து மாறுபட்டது. உங்கள் வீட்டிலும் மட்டன் புலாவ் சமைத்து அசத்துங்கள். மட்டன் புலாவ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பாசுமதி அரிசி - அரைக் கிலோ
    ஆட்டுக்கறி - அரைக் கிலோ
    பெரிய வெங்காயம் - இரண்டு
    பச்சைமிளகாய் - நான்கு
    இஞ்சி, பூண்டு விழுது - 4 டீஸ்பூன்
    மிளகு - அரை டீஸ்பூன்
    தனியாத்தூள் - இரண்டு டீஸ்பூன்
    மிளகாய்த்தூள்- ஒரு டீஸ்பூன்
    மஞ்சத்தூள் - ஒரு டீஸ்பூன்
    கரம் மசாலா - அரை டீஸ்பூன் முந்திரி,
    கிஸ்மிஸ்பழம் : கால் கப்
    கொத்தமல்லி - ஒரு கைப்பிடி
    புதினா- ஒரு கைப்பிடி
    எலுமிச்சை சாறு - ஒரு பழம்
    பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா நான்கு
    மராட்டி மொக்கு - இரண்டு
    எண்ணெய் - தேவையான அளவு
    உப்பு தேவையான அளவு

    செய்முறை :

    * வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்

    * பாஸ்மதி அரிசியை கழுவி ஊறவைக்கவும்.

    * ஆட்டுக்கறியை சுத்தமாக கழுவி சற்று பெரிய துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

    * குக்கரில் மட்டனை போட்டு அதில் இஞ்சி பூண்டு விழுதில் பாதியளவு மற்றும் மிளகு, சிறிது உப்பு, ஆகியவற்றைச் சேர்த்து 5 வில் விட்டு வேகவைக்கவும். விசில் இறங்கிய உடன் மட்டன் துண்டுகளை தனியே எடுத்துவைக்கவும்.

    * குக்கரில் எண்ணெயை காயவைத்து பட்டை, கிராம்பு, மராட்டி மொக்கு உள்ளிட்ட வாசனைப் பொருட்களைப் போட்டு தாளித்த பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

    * வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் மீதமுள்ள இஞ்சி - பூண்டு விழுது பச்சைமிளகாய் புதினா, கொத்தமல்லி ஆகியவற்றைப் போட்டு வதக்கவும்.

    * இஞ்சி - பூண்டு விழுது நன்றாக வதங்கியதும் அதில் மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலா உள்ளிட்ட மசாலா பொடிகளை போட்டு வதக்கவும்.

    * அடுத்து அதில் வேகவைத்த மட்டன் துண்டுகளைப் போட்டு நன்கு கிளறவும்.

    * பின்பு அதில் மட்டன் வேகவைத்த தண்ணீர் உடன் ஒரு கப் அரிசிக்கு ஒன்றே கால் கப் வீதம் தண்ணீரை அளந்து ஊற்றி உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

    * மசாலா நன்கு கொதித்ததும் ஊற வைத்துள்ள அரிசியை கொட்டி குக்கரை மூடவும். விசில் போடவேண்டாம். ஆவி வரும் போது விசில் போட்டு அடுப்பை மிதமாக எரிய விடவும். சரியாக 10 நிமிடத்தில் அடுப்பை நிறுத்தி விடலாம். நன்றாக புலாவ் பொல பொலவென சூப்பராக வெந்திருக்கும்.

    * குக்கர் மூடியை திறந்து எலுமிச்சை சாற்றை மேலாக தெளிக்கவும்.

    * கடைசியில் முந்திரி, கிஸ்மிஸ் பழத்தை நெய்யில் பொரித்து அலங்கரித்து பரிமாறவும்.

    * சூப்பரான மட்டன் புலாவ் ரெடி.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×