என் மலர்tooltip icon

    கிச்சன் கில்லாடிகள்

    காடை முட்டை குழம்பு சாப்பிட்டு இருக்கீங்களா. சூப்பரான இருக்கும். இன்று காடை முட்டையில் குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    காடை முட்டை - 20
    எண்ணெய் - தேவையான அளவு
    சீரகம் - 1 தேக்கரண்டி
    வெங்காயம் - 1
    கறிவேப்பிலை - ஒரு கைப்பிடியளவு
    இஞ்சி-பூண்டு விழுது - 1 மேஜைக்கரண்டி
    மஞ்சள்தூள் - 1 தேக்கரண்டி
    தக்காளி - 2 (விழுதாக அரைத்தது)
    பச்சை மிளகாய் - 2
    உப்பு - தேவையான அளவு
    மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
    மல்லித் தூள் - 1 மேஜைக்கரண்டி
    கரம்மசாலா தூள் - 1 மேஜைக்கரண்டி
    நீர் - தேவையான அளவு
    கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடியளவு

    செய்முறை :

    * தக்காளியை விழுதாக அரைத்து கொள்ளவும்.

    * வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * காடை முட்டையை வேக வைத்து கொள்ளவும். அவற்றை குளிர்ந்த நீரில் கழுவி அதன் ஓடுகளை உடைத்து தனியே வைக்கவும்

    * கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகத்தை போட்டு தாளித்த பின் வெங்காயம், ப.மிளகாய், கறிவேப்பிலை போட்டு நன்றாக வதக்கவும்.

    * அடுத்து மஞ்சள் தூள் சேர்க்கவும்

    * வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    * அடுத்து அதில் மசாலா தூள்களை சேர்த்து நன்கு கிளறவும்

    * மசாலா வாசனை போனவுடன் தக்காளி விழுது சேர்த்து நன்கு கிளறவும். எண்ணெய் தனியாக பிரிந்து வரும் வரை நன்கு கிளறவும்

    * அடுத்து அதில் 1 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

    * கொதிக்க ஆரம்பித்தவுடன் காடை முட்டைகளை போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து 10 நிமிடம் கொதிக்க விடவும்.

    * குழம்பு திக்கான பதம் வந்தவுடன் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

    * காடை முட்டை குழம்பு ரெடி!!

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சளி பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் சிக்கன் சூப் வைத்து குடிக்கலாம். இன்று செட்டிநாடு முறையில் சிக்கன் சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கோழி(எலும்புடன்) - 1/2  கிலோ
    சின்ன வெங்காயம் - 50 கிராம்
    சீரகத்தூள் - 1 தேக்கரண்டி
    மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி
    பச்சை மிளகாய் - 1
    தக்காளி - 1
    இஞ்சி - 1  துண்டு
    பூண்டு - 5 பல்
    பட்டை, லவங்கம் - தலா 1
    மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
    தனியாத்தூள் - 1 தேக்கரண்டி
    மஞ்சள்தூள் - 1 /2  தேக்கரண்டி
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
    கொத்தமல்லி தழை - சிறிதளவு
    எலுமிச்சை சாறு - தேவைக்கு

    செய்முறை :

    * சிக்கனை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

    * இஞ்சி, கொத்தமல்லி, பூண்டை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

    * தக்காளி, ப.மிளகாய், சின்ன வெங்காயத்தை தோல் உரித்து இரண்டாக நறுக்கி கொள்ளவும்.

    * குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, லவங்கம் போட்டு தாளித்த பின் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

    * வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.

    * அடுத்து அதில் தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு மசியுமாறு வதக்கிக் கொள்ளவும்.

    * அனைத்தும் நன்றாக வதங்கியதும், மிளகுத்தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள், உப்பு, கோழிக்கறி சேர்த்து நன்கு கலக்கி, 6 விசில் வரும் வரை வேக விடவும்.

    * பின்பு இநத் சிக்கன் சூப்பில் கொத்தமல்லி, எலுமிச்சைசாறு பிழிந்து பரிமாறவும்.

    * சூப்பரான செட்டிநாடு ஸ்டைல் சிக்கன் சூப் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கேரளா முறையில் செய்யும் கொண்டைகடலை குழம்பு சூப்பராக இருக்கும். இப்போது கேரளா ஸ்டைல் கொண்டைக்கடலை குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கொண்டைக்கடலை  - 1 கப்
    சின்ன வெங்காயம்  -  50 கிராம்
    சிகப்பு மிளகாய்  - 4
    மஞ்சள்தூள்  - 1 /2 தேக்கரண்டி
    தனியா  - 1  தேக்கரண்டி
    சீரகம்  - 1 /2 தேக்கரண்டி
    துருவிய தேங்காய்  -  1 /2 கப்
    இஞ்சி  - 1 அங்குலத்துண்டு
    பச்சை மிளகாய்( நீளமாக அரிந்தது)  -  2
    புளி  -  எலுமிச்சை அளவு

    தாளிக்க :

    கடுகு -  1 /4 தேக்கரண்டி
    கறிவேப்பிலை  - 2 இணுக்கு
    சின்ன வெங்காயம் (பொடியாக நறுக்கிக் கொள்ளவும்)  - 3  மேசைக்கரண்டி
    பெருங்காயத்தூள்
    எண்ணெய்  - 1 மேசைக்கரண்டி

    செய்முறை :

    * கொண்டைக்கடலையை 10  மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்த பின் வேக வைத்து கொள்ளவும்.

    * புளியை ஊற வைத்து கரைத்து கொள்ளவும்

    * சின்ன வெங்காயத்தை தோல் உரித்து வைக்கவும்.

    * கடாயில் எண்ணெய் விடாமல் சிகப்பு மிளகாய், தனியா, சீரகம், இஞ்சி, சின்ன வெங்காயம், கடைசியில் துருவிய தேங்காய் என ஒவ்வென்றாக தனித்தனியாக போட்டு சிவக்க வறுத்து ஆற விடவும்.

    * வறுத்த பொருட்களுடன், மஞ்சள்தூள் சேர்த்து மிக்சியில் போட்டு நைசாக அரைக்கவும்.

    * அடிகனமாக பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் வேகவைத்த கொண்டைக்க்கடலை, அரைத்த விழுது, பச்சைமிளகாய், புளிக்கரைசல், உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். குழம்பு திக்ககும் வரை கொதிக்க விடவும்.

    * குழம்பு திக்கான பதம் வந்தவுடன் கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், வெங்காயம் சேர்த்து வதக்கி, குழம்பில் ஊற்றவும்.

    * கேரளா ஸ்டைல் கொண்டைக்கடலை குழம்பு ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு பன்னீரால் செய்யும் சமையல் மிகவும் பிடிக்கும். இன்று பன்னீரை வைத்து எப்படி சூப்பரான பன்னீர் பிரியாணி செய்யலாம் என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பாஸ்மதி அரிசி - 1 கப்
    நீர் - 1 1/2 கப்
    பன்னீர் - 200 கிராம்
    இஞ்சி - பூண்டு விழுது - 2 ஸ்பூன்
    வெங்காயம் - 1
    தக்காளி - 2
    நெய் - தேவையான அளவு
    தக்காளி சாஸ் - 2 மேஜைக்கரண்டி
    சீரகம் - 1 தேக்கரண்டி
    உப்பு - தேவையான அளவு
    தயிர் - கால் கப்

    அரைக்க :

    கொத்தமல்லித்தழை - 1 கப்
    பச்சை மிளகாய் - 4
    பட்டை - 1 சிறிய துண்டு
    ஏலக்காய் - 4
    கிராம்பு - 4
    நட்சத்திர சோம்பு - 1

    செய்முறை :

    * தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * அரிசியை நன்றாக கழுவி வைக்கவும்.

    * பன்னீரை சதுரமான துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.

    * அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும்.

    * எண்ணெயில் பன்னீர் துண்டுகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து கொள்ளவும்.

    * குக்கரை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் அதில் சீரகத்தை போட்டு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.

    * வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி - பூண்டு விழுதை போட்டு நன்றாக வதக்கவும்.

    * அடுத்து அதில் அரைத்த விழுதையும், தக்காளியையும் சேர்த்து வதக்கவும்.

    * அனைத்தும் நன்றாக வதங்கியதும் அடுத்து தக்காளி சாஸ் சேர்த்து கிளறவும்.

    * அடுத்து தயிர் சேர்த்து நன்கு கலக்கவும்

    * அடுத்து அதில் பொரித்த பன்னீர் துண்டுகளை சேர்க்கவும்

    * எல்லாம் நன்றாக சேர்ந்து வரும் போது 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கும் போது அரிசி, கொத்தமல்லி தழை சேர்க்கவும்

    * இப்போது குக்கரை மூடி 2 விசில் போட்டு இறக்கவும்.

    * சூப்பரான பன்னீர் பிரியாணி ரெடி.

    * சூடான பன்னீர் பிரியாணியை தயிர் பச்சடியுடன் பரிமாறுங்கள்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பன்னீரை பலரும் மசாலா, கிரேவி என்று செய்து சுவைத்திருப்போம். ஆனால் இன்று பன்னீர் பஹடி செய்து வீட்டில் உள்ளவர்களை எப்படி அசத்தலாம் என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பன்னீர் - 500 கிராம்
    குடமிளகாய் - 1
    வெங்காயம் - 1
    புதினா - 1/4 கப்
    கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன்
    சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன்
    பச்சை மிளகாய் - 6
    பூண்டு - 4 பற்கள்
    தயிர் - கால் கப்
    உப்பு - தேவையான அளவு
    மல்லித் தூள் - 1 டீஸ்பூன் + 1 டீஸ்பூன்
    சீரகப் பொடி - 1 டீஸ்பூன் + 2 டீஸ்பூன்
    சாட் மசாலா - 1 டீஸ்பூன் + 2 டீஸ்பூன்
    தந்தூரி மசாலா - 1 டீஸ்பூன்
    மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
    மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
    எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

    செய்முறை :

    * பன்னீர், வெங்காயம், குடமிளகாயை சதுரமான துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.

    * புதினா, கொத்தமல்லியை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * மிக்ஸியில் புதினா, கொத்தமல்லி, மிளகாய், பூண்டு, மல்லித் தூள், சீரகப் பொடி, தயிர் மற்றும் உப்பு சேர்த்து கெட்டியாக அரைத்து, அதில் பாதியை தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    * மீதமுள்ள பாதியில் சோள மாவு, தந்தூரி மசாலா, சாட் மசாலா, மிளகுத் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

    * கலந்த மசாலாவில் பன்னீர், குடமிளகாய், வெங்காயம் சேர்த்து பிரட்டி, க்ரில் கம்பியில் பன்னீர், குடமிளகாய், வெங்காயம், என்று வரிசைப்படுத்தி 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

    * அடுப்பை மிதமான தீயில் வைத்து க்ரில் கம்பியை நீட்டி பன்னீரை பொன்னிறமாக க்ரில் செய்து ஒரு தட்டில் வைக்க வேண்டும்.

    * அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தனியாக எடுத்து வைத்துள்ள பேஸ்ட்டை சேர்த்து சிறிது நேரம் நிறம் மாறும் வரை வதக்கி, பின் அதில் 2 டீஸ்பூன் சீரகப் பொடி, 1 டீஸ்பூன் சாட் மசாலா மற்றும் மல்லித் தூள சேர்த்து 5 நிமிடம் இறக்கவும்.

    * இந்த மசாலாவை பன்னீரின் மேல் ஊற்றினால், பன்னீர் பஹடி ரெடி!

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வேலைக்கு செல்பவர்கள் மிகவும் எளிதாகவும், சுவையுடனும் சமைத்து அலுவலகத்திற்கு கொண்டு செல்ல கொண்டைக்கடலை புலாவ் சூப்பராக இருக்கும்.
    தேவையான பொருட்கள் :

    கொண்டைக்கடலை - 1 கப்
    நெய் - 2 டேபிள் ஸ்பூன்
    சீரகம் - 1 டீஸ்பூன்
    மிளகு - 6
    கிராம்பு - 5
    பட்டை - 1 இன்ச்
    கருப்பு ஏலக்காய் - 1
    பாசுமதி அரிசி - 2 கப்
    வெங்காயம் - 1
    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
    தக்காளி - 1
    பச்சை மிளகாய் - 2
    மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
    கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்

    செய்முறை :

    * தக்காளி, வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * அரிசியை நன்றாக கழுவி வைக்கவும்.

    * கொண்டைக்கடலையை இரவில் படுக்கும் போது நீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின் காலையில் எழுந்து, குக்கரை அடுப்பில் வைத்து, அதில் ஊற வைத்துள்ள கொண்டைக்கடலையை கழுவிப் போட்டு, தண்ணீர் ஊற்றி, 5 விசில் விட்டு இறக்கவும்.

    * மற்றொரு குக்கரை அடுப்பில் வைத்து அதில் நெய்யை ஊற்றி, சீரகம், மிளகு, கிராம்பு, பட்டை மற்றும் ஏலக்காய் சேர்த்து தாளித்த பின் நறுக்கி வைத்துள்ள பச்சை மிளகாய் மற்றும் வெங்காயத்தை சேர்த்து, தீயை குறைவில் வைத்து நன்றாக வதக்க வேண்டும்.

    * பிறகு அத்துடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, 2 நிமிடம் வதக்கிய பின் தக்காளி மற்றும் உப்பை சேர்த்து, தக்காளி நன்கு வேகும் வரை வதக்க வேண்டும்.
    * அடுத்தாக வேக வைத்துள்ள கொண்டைக்கடலை, மிளகாய் தூள், கரம் மசாலா சேர்த்து, மீண்டும் 5 நிமிடம் வதக்க வேண்டும்.

    * அனைத்தும் நன்கு வதங்கியதும், கழுவிய அரிசியை சேர்த்து, 3 கப் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி, தீயை குறைவில் வைத்து 2 விசில் விட்டு இறக்க வேண்டும்.

    * இப்போது சுவையான கொண்டைக்கடலை புலாவ் ரெடி!!!

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கு, சீஸ் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று உருளைக்கிழங்கு, சீஸ் வைத்து சூப்பரான கட்லெட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    உருளைக்கிழங்கு - கால் கிலோ
    பிரெட் ஸ்லைஸ்கள் - 4,
    பச்சை மிளகாய் - இஞ்சி அரைத்த விழுது - ஒரு டேபிள்ஸ்பூன்,
    பிரெட் தூள் - சிறிதளவு,
    சாட் மசாலா - அரை ஸ்பூன்
    கரம் மசாலா - கால் ஸ்பூன்
    மைதா மாவு - அரை கப்,
    சீஸ் துருவல் - கால் கப்
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

    செய்முறை :


    * உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்து கொள்ளவும்.

    * மைதா மாவை சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு, நீரில் நனைத்து பிழிந்தெடுத்த பிரெட் ஸ்லைஸ்கள், சாட் மசாலா, கரம் மசாலா, பச்சை மிளகாய் - இஞ்சி விழுது, சீஸ் துருவல், உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு பிசைந்து விரும்பிய வடிவத்தில் தட்டிக் கொள்ளவும்.

    * தட்டிய கட்லெட்களை மைதா கரைசலில் தோய்த்து, பிரெட் தூளில் புரட்டி வைக்கவும்.

    * கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பிரெட் தூளில் பிரட்டி வைத்தத கட்லெட்டுகளை எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

    * டொமெட்டோ சாஸுடன் பரிமாறவும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மிகவும் சுலபமாக செய்யக்கூடியது திரட்டு பால். இதன் சுவை அபாரமாக இருக்கும். இப்போது இந்த திரட்டுப்பாலை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வெண்ணை நிறைந்த பால் (full cream milk) - 1 லிட்டர்
    நெய் - 10௦ கிராம்
    சர்க்கரை - 200 கிராம்
    ஏலப்பொடி - சிறிதளவு (வேண்டுமானால்)

    செய்முறை :

    * ஒரு பெரிய அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் பாலை ஊற்றி, கொதிக்க விடவும்.

    * அடுப்பை மிதமான தீயில் எரியவிடவும். அடிக்கடி கிளறி விட்டுக்கொண்டே இருக்கும். பால் திக்காக நிறைய ஏடு சேர்ந்து வரும்.

    * பால் நிறைய ஏடுடன் திக்காக வரும் போது, சர்க்கரையை போட்டு நன்றாக கலக்கவும்.



    * சிம்மில் வைத்து நன்றாக கிளறனும். திரட்டிப்பால் ஒன்றாக சேர்ந்து வரும்.

    * அடுத்து நெய், ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி ஒரு கிண்ணத்தில் நெய் தடவி அதில் கொட்டி பரிமாறவும்.

    * தித்திப்பான திரட்டிப்பால் ரெடி....

    குறிப்பு :

     * பால் ஸ்வீட் என்பதால், அதிகமாக சக்கரை சேர்க்க வேண்டாம்.

    * திரட்டுப்பால் செய்யும் போது அடிக்கடி பார்த்து, அடி பிடிக்காமல், கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    செட்டிநாடு ஸ்டைலில் அசைவம் தவிர சைவ உணவுகளும் உள்ளன. அதில் ஒன்றான செட்டிநாடு பூண்டு - சின்ன வெங்காய குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பூண்டு - அரை கப்
    சின்ன வெங்காயம் - 50 கிராம்
    தக்காளி - 1
    கடுகு - 1/2 டீஸ்பூன்
    வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
    வரமிளகாய் - 1
    கறிவேப்பிலை - சிறிது
    புளி - 1 எலுமிச்சை அளவு
    மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
    சாம்பார் பொடி - 1/2 டீஸ்பூன்
    பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
    எண்ணெய் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு

    வறுத்து அரைப்பதற்கு...

    சீரகம் - 1/2 டீஸ்பூன்
    மிளகு - 1/2 டீஸ்பூன்
    மல்லி - 1/2 டீஸ்பூன்
    கடலைப்பருப்பு - 1/2 டேபிள் ஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிது
    சின்ன வெங்காயம் - 3
    பூண்டு - 5 பற்கள்
    வரமிளகாய் - 1
    தக்காளி - 1/2

    செய்முறை :

    * தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * சின்ன வெங்காயத்தை தோல் உரித்து தனியாக வைக்கவும்.

    * புளியை வெதுவெதுப்பான நீரில் 10 நிமிடம் ஊற வைத்து, சாறு எடுத்துக் கொள்ளவும்.

    * ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து வதக்கி இறக்கி, குளிர வைத்து மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து கொள்ளவும்.

    * மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மீதமுள்ள எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை, வரமிளகாய், வெந்தயம், பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்த பின் அதில் பூண்டு மற்றும் சின்ன வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

    * வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் அதில் தக்காளியை சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்க வேண்டும்.

    * அடுத்து அதில் புளிச்சாற்றினை சேர்த்து கொதிக்க விடவும்.

    * குழம்பு கொதிக்க ஆரம்பித்தவுடன் அரைத்து வைத்துள்ள மசாலாவுடன் அரை கப் தண்ணீர் சேர்த்து பச்சை வாசனை போக நன்கு கொதிக்க விட வேண்டும்.

    * அடுத்து அதில் அத்துடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், சாம்பார் பொடி மற்றும் உப்பு சேர்த்து கிளறி 10 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு இறக்கினால், செட்டிநாடு பூண்டு - சின்ன வெங்காய குழம்பு ரெடி!!!

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    எத்தனையோ பிரியாணியை செய்திருப்பீர்கள். ஆனால் மீன் பிரியாணியை யாரும் செய்திருக்கமாட்டோம். இன்று பெங்காலி ஸ்டைலில் மீன் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    இந்த ஸ்டைல் பிரியாணியானது வித்தியாசமான செய்முறையைக் கொண்டது. இந்த பிரியாணியை செய்வதற்கு நேரம் சற்று அதிகமானாலும், இது மிகவும் சுவையுடன் இருக்கும்.

    தேவையான பொருட்கள் :

    பாசுமதி அரிசி - 2 1/2 கப்
    துண்டு மீன் - 1 கிலோ
    வெங்காயம் - 2
    உருளைக்கிழங்கு - 2
    பட்டை - 1
    கருப்பு ஏலக்காய் - 1
    பச்சை ஏலக்காய் - 2
    கிராம்பு - 3
    பிரியாணி இலை - 3
    ஜாதிக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
    சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன்
    எலுமிச்சை சாறு - 3 டேபிள் ஸ்பூன்
    பால் - 1 கப்
    குங்குமப்பூ - 1 சிட்டிகை
    உப்பு - தேவையான அளவு
    நெய் - தேவையான அளவு
    சர்க்கரை - 1 ஸ்பூன்
    எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
    கொத்தமல்லி - சிறிதளவு (நறுக்கியது)
    தண்ணீர் - 5 கப்

    செய்முறை :

    * வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * உருளைக்கிழங்கை வேக வைத்து துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.

    * மீன் துண்டுகளை நன்கு சுத்தமாக நீரில் கழுவி, பின் அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகப் பொடி, உப்பு சேர்த்து பிரட்டி 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

    * அரிசியை கழுவி வைத்துக் கொள்ள வேண்டும்.

    * பாலில் குங்குமப்பூவை போட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    * வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், பிரியாணி இலை, பட்டை, கருப்பு மற்றும் பச்சை ஏலக்காய், கிராம்பு போட்டு நன்றாக வதக்கிய பின்னர் கவி வைத்துள்ள அரிசியை போட்டு கிளறி விட வேண்டும்.

    * பிறகு அதில் தண்ணீர் ஊற்றி, மூடி வைத்து 10 நிமிடம் குறைவான தீயில் வேக வைத்து, அரிசி முக்கால் பதம் வெந்ததும், அதனை இறக்கி, ஒரு தட்டில் பரப்பி குளிர வைக்க வேண்டும்.

    * ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் வேக வைத்த உருளைக்கிழங்கை போட்டு 5 நிமிடம் நன்கு வதக்கி தனியாக வைத்து கொள்ளவும்.  

    * பின்னர் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ஊற வைத்துள்ள மீனை போட்டு, தீயை குறைவில் வைத்து 8 நிமிடம் முன்னும் பின்னும் வேக வைத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.

    * பின் அதே எண்ணெயில் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி வைக்கவும்..

    * அடுத்து அடி கனமான அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி காய்ந்ததும், குளிர வைத்துள்ள சாதத்தை இரண்டாக பிரித்து, அதில் ஒரு பாதியை மட்டும் வாணலியில் போட்டு, அதன் மேல் சர்க்கரை, ஜாதிக்காய் பொடி, உப்பு, 1 டேபிள் ஸ்பூன் குங்குமப்பூ பால், சிறிது வறுத்து வைத்துள்ள உருளைக்கிழங்கு மற்றும் வறுத்த வெங்காயத்தைப் பரப்பி விட வேண்டும்.

    * பின்பு அதன் மேல் மீதமுள்ள சாதம், உருளைக்கிழங்கு, வெங்காயம், குங்குமப்பூ பால் மற்றும் உப்பு ஆகியவற்றை பரப்பி, பின் அதன் மேல் மீன் துண்டுகளை வைத்து, வாணலியை மூடி, 15 நிமிடம் குறைவான தீயில் வேக வைக்கவும்.

    * இறுதியில் எலுமிச்சை சாறு, கொத்தமல்லி தழை தூவி ஒரு கிளறு கிளறி இறக்கவும்.

    * சூப்பரான பெங்காலி ஸ்டைல் மீன் பிரியாணி ரெடி!!!

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கேரளாவில் மத்தி மீன் குழம்பு மிகவும் பிரபலம். இன்று சூப்பரான கேரளா ஸ்டைல் மத்தி மீன் குழம்பை எப்படி எளிய முறையில் செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருள்கள் :

    மத்தி மீன் - 1/2 கிலோ
    கறிமசாலா - 1
    வெங்காயம் - 2
    தக்காளி - 3
    பச்சை மிளகாய் -2
    மிளகாய் தூள் -2 ஸ்பூன்
    மல்லி தூள் -1  ஸ்பூன்
    மஞ்சள் தூள் - 1  ஸ்பூன்
    சோம்பு -1 1 /2 ஸ்பூன்
    புளி - எலுமிச்சை அளவு
    தேங்காய் - 1 /2 மூடி
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை :

    * மத்தி மீனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    * தேங்காயுடன், சோம்பு சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்.

    * புளியை நன்றாக கரைத்து கொள்ளவும்.

    * வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கறிமசாலா போட்டு தாளித்த பின் வெங்காயம், பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும்.

    * வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.

    * தக்காளி நன்றாக வதங்கியதும் எல்லா மசாலாக்களையும் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.

    * அடுத்து அதில் கரைத்து வைத்துள்ள புளி கரைசலை ஊற்றி கொதிக்க விடவும்.

    * குழம்பு நன்கு கொதித்ததும் மீன் சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்க விடவும்.

    * அடுத்து அதில் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து பச்சை வாசனை போனவும் இறக்கவும்.

    * சூப்பரான கேரளா ஸ்டைல் மத்தி மீன் குழம்பு ரெடி. 

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    அவித்த முட்டையோடு, குழம்பு கொதிக்கும் போது ஒரு முட்டையை உடைத்து நடுவில் ஊற்றி வேக வைப்பது இன்னும் சுவையைக்கூட்டும். இந்த குழம்பை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    முட்டை - 5 (4+1)
    வெங்காயம் - 1
    பூண்டு - 7 பல்
    தக்காளி - 1
    உப்பு - 1 தேக்கரண்டி
    மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
    சாம்பார் மிளகாய்த்தூள் - 2 1/2 தேக்கரண்டி, அல்லது
    மிளகாய்த்தூள் - 1 மல்லித்தூள் 1 என்னும் விகித்தில் எடுத்துக்கொள்ளவும்.
    புளிச்சாறு  - 2 மேஜைக்கரண்டி

    செய்முறை :

    * 4 முட்டையை அவித்து ஒட்டை உடைத்து விட்டு மேல் சிறிய கீறல்கள் போடவும். இதனால் குழம்பு உள்ளே சென்று முட்டையின் சுவையைக்கூட்டும். ஒரு முட்டையை குழம்பு கொதிக்கும்போது ஊற்றவேண்டும்.

    * வெங்காயம், தக்காளி, பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு, சீரகம், வெந்தயம் போட்டு தாளித்த பின் வெங்காயம் பூண்டு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.

    * வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சிறிது உப்பு சேர்த்து, நன்றாக வதக்கவும்.

    * தக்காளி நன்றாக வதங்கியதும் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு மற்றும் புளிகரைச்சல் சேர்க்கவும்.

    * புளிக்கரைசல் நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிடவும்.

    * நன்கு கொதிக்கும் போது தீயை சிம்மில் வைத்து 1 முட்டையை உடைத்து நிதானமாக குழம்பின் நடுவில் ஊற்றவும்.

    * இரண்டு நிமிடம் இளந்தீயில் கொதித்தபின் தீயை கூட்டவும்.

    * நன்கு கொதிவரும்போது அவித்த முட்டையை சேர்த்து இன்னும் 5 நிமிடம் கொதிக்க விடவும்.

    * சுவையான முட்டை குழம்பு தயார்.

    குறிப்பு :

    முட்டையை உடைத்து ஊற்றும் போது கண்டிப்பாக தீயை குறைக்கவேண்டும். இல்லாவிட்டால் முட்டை பிரிந்துவிடும்.

    ஊற்றிய முட்டை வேகும் வரை கரண்டி போட்டு கிளறக்கூடாது.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×