search icon
என் மலர்tooltip icon

    சமையல்

    இந்தவார சமையல் டிப்ஸ் உங்களுக்காக....
    X

    இந்தவார சமையல் டிப்ஸ் உங்களுக்காக....

    • வெங்காயம் கெடாமல் இருக்க வெயிலில் உலர்த்தி இருக்க வேண்டும்.
    • புளியை போட்டு வைத்தால் கடலை எண்ணெய் கெட்டுப்போகாமல் இருக்கும்.

    1. சப்பாத்திக்கு மாவு பிசையும் போது தண்ணீருக்குப் பதிலாக பாலை பயன்படுத்தினால், சப்பாத்தி மிருதுவாகவும் சுவையாகவும் இருக்கும்.

    2. சில நேரம் பருப்புகள் வேகாமல் இருக்கும். அப்போது சிறிது நெய்யை சேர்த்து பாருங்கள். எந்த வேகாத பருப்பும் நன்கு வெந்து விடும்.

    3. குழம்பிலோ, சட்னியிலோ உப்பு அதிகமாகி விட்டால், உருளைக்கிழங்கை பாதியாக வெட்டி அதில் போட்டால் போதும். அதிக உப்பு உடனே உறிஞ்சப்பட்டு விடும்.

    4. அடை, இடியாப்பம், இட்லி, வடை, பஜ்ஜி, போண்டா ஆகியவற்றின் மாவில் கற்பூரவல்லி இலைகளை சிறிதளவு போட்டு அரைத்து சேர்த்தால் வாசனையாக இருக்கும். சாப்பிட்ட உடனே ஜீரணமாகிவிடும்.

    5. ஒரே பாத்திரத்தில் கேக், பிஸ்கட்டுகளை போட்டு மூடி வைத்தால் பிஸ்கட்டுகள் நமத்து போய்விடும். அவற்றை தனித்தனியாகத்தான் வைக்க வேண்டும்.

    6. வடை, போண்டா, பஜ்ஜி செய்யும் போது, மாவை பிரிட்ஜில் சிறிது நேரம் வைத்திருந்து விட்டு பிறகு செய்தால் அவற்றை சுடுவது மிக எளிதாக இருக்கும்.

    7. கடலை எண்ணெய் கெட்டுப்போகாமல் இருக்க சிறிதளவு புளியை அதில் போட்டு வைத்தால் போதும். நீண்ட நாட்கள் எண்ணெய் கெடாமல் இருக்கும்.

    8. உருளைக் கிழங்கு தோலிலும் சத்து உள்ளது. எனவே சமைக்கும் போது வீணாக தோலை நீக்காமல் அப்படியே சமைத்து சாப்பிடுவது உடம்புக்கு நல்லது.

    9. சேனைக் கிழங்கு, கருணைக் கிழங்கு போன்றவை அரிக்கும் தன்மை கொண்டவை. அவற்றை வாங்கியதும் உடனே சமைக்காமல் ஒரு வாரம் வைத்திருந்து அதன்பின் சமைத்து சாப்பிட்டால் அரிப்பு தெரியாது.

    10. முட்டைகள் ஒரு மாதம் வரை கெடாமல் இருக்கணுமா? ரொம்ப சிம்பிள். முட்டைகளின் மீது சமையல் எண்ணெய்யை தடவி வைத்தால் போதும்.

    11. பருப்புகளை மழை நீரில் வேக வைத்தால் சூப்பர் பாஸ்ட்டாக ஒரே கொதியில் வெந்து விடும். ருசிக்கும் குறை இருக்காது!

    12. ஒரு மாதம் வரை வெங்காயம் கெடாமல் இருக்க, அதை வாங்கியதும் உடனே வெயிலில் நன்றாக உலர்த்தி எடுத்து வைத்தால் போதும்.

    Next Story
    ×