search icon
என் மலர்tooltip icon

    சமையல்

    வீட்டிலேயே செய்யலாம் அவல் பொரி உருண்டை
    X

    வீட்டிலேயே செய்யலாம் அவல் பொரி உருண்டை

    • இந்த ரெசிபி செய்ய 10 நிமிடங்களே ஆகும்.
    • இதை ஒரு வாரம் வரை வைத்திருந்து உபயோகப்படுத்தலாம்.

    தேவையான பொருட்கள் :

    அவல் பொரி - 3 கப்,

    வெல்லத் தூள் - 1 கப்,

    ஏலப்பொடி, சுக்குப் பொடி - தலா 1 ஸ்பூன்,

    தேங்காய்ப் பல் - 6 ஸ்பூன்.

    செய்முறை:

    முதலில் பொரியை மண் போக சலித்து எடுக்க வேண்டும்.

    பிறகு கடாயில் ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி தேங்காய் பற்களை சிவக்க வதக்க வேண்டும். (எள் சேர்க்க விரும்புபவர்கள் 2 ஸ்பூன் எள்ளை வெறும் வாணலியில் பட பட வென்று பொரிய வறுத்து பாகில் சேர்த்துக் கொள்ளலாம்).

    பிறகு வெல்லத்தில் ¼ கப் தண்ணீர் சேர்த்து கரைத்து வடிகட்டிப் பாகு செய்ய வேண்டும்.

    பாகில் தேங்காய் பற்கள், எள் சேர்த்து உருட்டுப் பதம் வந்ததும் இறக்கி ஏலம், சுக்கு சேர்த்து தட்டிலுள்ள பொரியில் பாகை சிறிது சிறிதாக ஊற்றி கரண்டியால் கலந்து விட்டு கையில் அரிசிமாவு அல்லது நெய் தடவிக் கொண்டு உருண்டைகளாகப் பிடிக்க வேண்டும்.

    அவ்வளவுதான் சூப்பரான அவல் பொரி உருண்டை ரெடி.

    Next Story
    ×