search icon
என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    டைப்-1, டைப்-2 என நீரிழிவு நோயை குறிப்பிடுவது ஏன்?
    X

    டைப்-1, டைப்-2 என நீரிழிவு நோயை குறிப்பிடுவது ஏன்?

    • இந்தியாவில் தான் நீரிழிவு நோயாளிகள் அதிகம் உள்ளனர்.
    • இரண்டுமே பொதுவான அறிகுறிகளைக் கொண்டுள்ளன.

    இந்தியாவில் தான் நீரிழிவு நோயாளிகள் அதிகம் உள்ளனர். நீரிழிவு நோயில் இரண்டு வகைகள் உள்ளன. அவை டைப்-1 நீரிழிவு நோய் மற்றும் டைப்-2 நீரிழிவு நோய். இவை இரண்டுமே பொதுவான அறிகுறிகளைக் கொண்டுள்ளன. பெரும்பாலான மக்கள் டைப்-1 மற்றும் டைப்-2 இரண்டுமே ஒரே மாதிரியானவை என்று நினைத்து குழப்பமடைகிறார்கள். இருப்பினும், இந்த இரண்டிற்கும் இடையே பல வித்தியாசம் உள்ளது. இரண்டுமே நாள்பட்ட நோய்கள் மற்றும் நாள்பட்ட உயர் இரத்த சர்க்கரை அளவிற்கு வழிவகுக்கும். ஆனால் இதற்கான காரணங்கள் மற்றும் அவை உடலை பாதிக்கும் விதம் என ஒருவருக்கொருவர் முற்றிலும் வேறுபடுகின்றன.

    முதலாவது தோன்றும் நீரிழிவு நோயை டைப்-1 என்று சொல்கிறோம். இது பெரும்பாலும் சிறுவர்கள் மற்றும் இளம் பருவத்தினருக்கு தோன்றுவதால், இது சிறார் நீரிழிவு என்றும் அழைக்கப்படுகிறது. கணையத்தில் உள்ள பீட்டா செல்கள் இன்சுலின் சுரக்கும் தன்மையை முற்றிலும் இழந்து விடுவதால் இவர்களுக்கு இன்சுலின் மூலம் தான் சிகிச்சை அளிக்க வேண்டும். மொத்த நீரிழிவு நோயாளிகளில் 10 சதவிகிதம் பேர் டைப் -1 நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    வயது வந்தவர்களுக்கும், நடுத்தர வயதினருக்கும் பெரும்பாலும் டைப் 2 நீரிழிவு நோய் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இது டைப்-1 யை காட்டிலும் சற்று வயது அதிகமானவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதால் இதை நாம் டைப்-2 நீரிழிவு நோய் என்று சொல்கிறோம். இது இன்சுலின் போதுமான அளவு சுரக்காததாலும் இன்சுலின் செயலாற்ற எதிர்வினை நிலை இருப்பதாலும் இது ஏற்படுகின்றது. மொத்த நீரிழிவு நோயாளிகளில் கிட்டத்தட்ட 90 சதவிகிதம் பேர் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    டைப்-1 நீரிழிவு நோயை விட டைப்-2 நீரிழிவு நோய் மிகவும் பொதுவானது.

    நீரிழிவு நோய் நிபுணர் டாக்டர் வி. சத்ய நாராயணன், எம்.டி., சி. டயாப் (ஆஸ்திரேலியா)

    Next Story
    ×