search icon
என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    சிறுநீரக கல் பிரச்சினைக்கு ஓமியோபதி மருத்துவத்தில் சிறந்த தீர்வு
    X

    சிறுநீரக கல் பிரச்சினைக்கு ஓமியோபதி மருத்துவத்தில் சிறந்த தீர்வு

    • இன்றைய காலக்கட்டத்தில் சிறுநீரக கற்கள் பிரச்சினையால் ஏராளமானவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
    • ஓமியோபதி மருத்துவம் உலக அளவில் 2-வது பெரிய மருத்துவ முறையாக உள்ளது.

    சிறுநீரக கல் பிரச்சினைக்கு ஓமியோபதி மருத்துவத்தில் தீர்வு உள்ளதாக வேலூரை சேர்ந்த பி.பீ.ஆர். மருத்துவமனை நிறுவனரும், 30 ஆண்டு அனுபவமிக்க ஓமியோபதி மருத்துவரும், தென்னிந்திய ஓமியோபதி மருத்துவ சங்க மாநில தலைவருமான பி.பீ.ஆர். என்.பாலாஜி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    நமது உடல் சீராக இயங்க வேண்டும் என்றால் அதற்கு சிறுநீரகங்களின் பங்கு முக்கியமானதாக அமைகிறது. நமது உடலில் இருக்கும் நச்சு கழிவுகள் சிறுநீரில் வெளியேற்றப்பட்டால் தான் உடலின் அனைத்து பாகங்களும் ஒழுங்காக செயல்படும். இன்றைய காலக்கட்டத்தில் சிறுநீரக கற்கள் பிரச்சினையால் ஏராளமானவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த பிரச்சினைக்கு ஓமியோபதி மருத்துவத்தில் நிரந்தர தீர்வு உள்ளது.

    ஓமியோபதி மருத்துவம் உலக அளவில் 2-வது பெரிய மருத்துவ முறையாக உள்ளது. இந்த ஓமியோபதி மருத்துவம் மூலம் சிறுநீரக கற்கள் பிரச்சினைக்கு தீர்வு காணலாம். கோடைக்காலம் தொடங்கி விட்டது. இக்காலக்கட்டத்தில் தான் பலருக்கு சிறுநீரக கல் பிரச்சினை ஏற்படுகிறது.

    துரித உணவுகள்

    சிறுநீரக பாதையில் அமார்பஸ் பாஸ்பேட் உப்பு அல்லது கால்சியம் ஆக்சலேட் உப்பு போன்ற தாதுக்கள் சிறிய வடிவில் நெருஞ்சி முள் போன்ற உருண்டையாக உருவாகிறது. உடலில் உருவாகும் தேவையற்ற அதிகப்படியான கால்சியம் போன்ற வகை உப்புகள் சிறுநீர் வழியாக வெளிறே வேண்டும். சிறுநீரகத்தில் அமிலத்தன்மை, காரத்தன்மை சமநிலையின்மையால் இவை வெளியேறாமல் சிறுநீரகப்பாதையை அடைத்துக் கொண்டு நிற்கும்போது அவை படிமங்களாக படிந்து நாளடைவில் கற்களாக உருவாகிறது. அவை நகர்வதால் கடுமையான வலி வருகிறது. இதனை சிறுநீரக கல் நோய் என்று கூறுகிறோம்.

    அவ்வாறு உருவாகும் கற்களில் பல வகைகள் உண்டு. ஜங்க் புட் எனப்படும் துரித உணவுகள் அதிகமாக சாப்பிடுதல், மன அழுத்தம், தைராய்டு சுரப்பி நீர் கோளாறு, சரியாக குடிநீர் அருந்தாமை, உடல் பருமன், தூக்கமின்மை, கிருமி தொற்று போன்ற காரணங்களாலும் இந்த கல் உருவாகிறது.

    கல் இருப்பது உறுதியானால் உணவில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். எதை தவிர்க்க வேண்டும் என்பதை புரிந்து கொண்டால் ஆபத்தில்லாமல் கற்களை வெளியேற்றிவிடலாம். மேலும் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மற்றும் சி.டி. ஸ்கேன் செய்வதன் மூலம் கற்கள் இருப்பதை உறுதிப்படுத்தலாம்.

    திரவ ஆகாரம்

    கற்கள் பெரிதாக இருக்கும்போது வலி முதுகுபுறத்தில் இருந்து தொடங்க ஆரம்பிக்கும். சிலருக்கு வயிற்றில் கடுமையான வெட்டும் வலி, வாந்தி, அதிகமாக வியர்த்தல், சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் போன்றவை அறிகுறிகளாகும். கற்கள் சிறிதாக இருக்கும் பட்சத்தில் அதை வெளியேற்ற வேண்டும் என்று நினைப்பவர்கள் திரவ ஆகாரத்தை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். தினமும் 2 லிட்டருக்கு அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீருக்கு இணையான பழச்சாறுகளும், அவ்வப்போது எடுத்துக் கொள்ளலாம். தினமும் இளநீர், பார்லி வேகவைத்த நீர், நீர்மோர் போன்றவை நன்மை பயக்கும். நீர்ச்சத்து நிறைந்த வெள்ளரிக்காய், வாழைத்தண்டு, பரங்கிக்காய் உள்ளிட்டவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும். வாழைத்தண்டு சாறு, முள்ளங்கிச்சாறு குடிக்கலாம். சிறுதானியங்களையும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். ஆரஞ்சு பழம், சாத்துக்குடி, திராட்சை, வாழைப்பழம், அன்னாசி பழம் போன்ற பழங்கள் சாப்பிடுவதும், எலுமிச்சை சாறு சேர்ப்பதும் நல்லது.

    மதுஅருந்தக் கூடாது

    கல் பிரச்சினை இருப்பவர்கள் உலர் பழங்கள், தயிர், வெண்ணெய், பாலாடைக்கட்டி, தினை வகையில் கேழ்வரகு, கீரையில் பசலை கீரை இவற்றை தவிர்ப்பது நல்லது. ஐஸ்கிரீம், சாக்லேட் வகைகளையும், செயற்கை குளிர்பானங்களையும் தவிர்க்க வேண்டும்.

    கால்சியம் மாத்திரைகள் எடுத்துக்கொள்பவர்கள் சிறுநீரக கல் இருப்பது உறுதியானால் மருத்துவர் ஆலோசனையுடன், அவரது பரிந்துரையின் பேரில் அதை தவிர்ப்பது நல்லது. உணவில் உப்பினை அதிகமாக சேர்த்துக் கொள்ளக் கூடாது. எடை அதிகமாக இருப்பது கூட சிறுநீரக கற்கள் உண்டாக காரணமாக அமைகிறது. எனவே அதிகளவு கொழுப்பு இருக்கும் உணவுகளை சாப்பிடக்கூடாது.

    மதுவுக்கு சிறுநீரக கற்கள் உருவாக்கத்தில் எந்த ஒரு நேரடி தொடர்பும் இல்லை. ஆனால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகும் அபாயத்தை ஏற்படுத்தும் தன்மை மதுவுக்கு உண்டு. ஆல்கஹாலில் இருக்கும் பியூரின், யூரிக் அமில கற்கள் உருவாக காரணமாக இருக்கலாம்.

    20 மில்லி மீட்டர் அளவுள்ள கற்களையும் ஓமியோபதி மருந்துகள் மூலம் அறுவை சிகிச்சையின்றி கரைத்து விடலாம். ஓமியோபதி மருத்துவத்தில் உணவு பத்தியம் இல்லை. பெண்கள் கர்ப்பகாலத்திலும் ஓமியோபதி மருந்துகளை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். சர்க்கரை, ரத்த அழுத்தம் உள்ளவர்கள் ஆங்கில மருந்துகளுடன் சேர்த்து ஓமியோபதி மருந்துகளை உட்கொள்ளலாம். சிறுநீரக கற்கள் திரும்ப வராமல் நிரந்தரமாக தடுக்க ஓமியோபதி மருத்துவம் சிறந்தது மற்றும் பாதுகாப்பானது. பின்விளைவுகள் அற்ற மருத்துவமாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×