என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
கருப்பு பூஞ்சை நோய் யாரை தாக்கும்?
Byமாலை மலர்27 May 2021 7:35 AM GMT (Updated: 27 May 2021 7:35 AM GMT)
கொரோனா 2-வது அலையில் பலரும் சிக்கி தவித்து வரும் நிலையில் தற்போது கருப்பு பூஞ்சை எனும் புதிய நோய் உருவெடுத்து பொதுமக்களை மிரட்டிக் கொண்டிருக்கிறது.
கருப்பு பூஞ்சை நோய் யாரை தாக்கும் என்பது குறித்து சுகாதார துறை செயலாளர் விளக்கமளித்துள்ளார். புதுவை சுகாதாரத்துறை செயலாளர் அருண் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கொரோனா 2-வது அலையில் பலரும் சிக்கி தவித்து வரும் நிலையில் தற்போது கருப்பு பூஞ்சை எனும் புதிய நோய் உருவெடுத்து பொதுமக்களை மிரட்டிக் கொண்டிருக்கிறது.
இந்த கருப்பு பூஞ்சை நோய் தொற்று நீண்ட நாள் நோய் வாய்ப்பட்டுள்ள நபர்களுக்கும், எதிர்ப்பு சக்தி குறைபாடு உள்ளவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். தொற்றில் இருந்து குணமடைந்து வந்தவர்களுக்கு பெருமளவு இந்த நோய் காணப்படுகிறது.
கொரோனா தொற்றுக்கு ஸ்டீராய்டு உட்கொண்டவர்கள், சர்க்கரை நோயாளிகள், தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் செயற்கை சுவாசம் மூலம் சிகிச்சை பெற்றவர்கள், நீண்டகாலம் ஆக்சிஜன் கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்ட நோயாளிகள் ஆகியோரை இந்த நோய் பாதிக்கும்.
அறிகுறிகள்
இந்த நோய்க்குசரியான நேரத்தில் தக்க சிகிச்சை எடுக்காவிட்டால், இந்த நோய் மூக்கின் வழியாக மூளைக்கு பரவி பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. தலைவலி, முகத்தில் வலி, மூக்கடைப்பு, கருப்பு நிற சளி, கண் வலி, பல்வலி, பல் ஆடுதல், வாய் மற்றும் மூக்கின் உள் பகுதிகளில் கரும்புள்ளிகள் ஆகியவை இந்த நோயில் அறிகுறிகள் ஆகும். இதில் ஏதேனும் அறிகுறிகளில் தென்பட்டால் உடனடியாக மருத்துவரின் உதவியை அணுக வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கொரோனா 2-வது அலையில் பலரும் சிக்கி தவித்து வரும் நிலையில் தற்போது கருப்பு பூஞ்சை எனும் புதிய நோய் உருவெடுத்து பொதுமக்களை மிரட்டிக் கொண்டிருக்கிறது.
இந்த கருப்பு பூஞ்சை நோய் தொற்று நீண்ட நாள் நோய் வாய்ப்பட்டுள்ள நபர்களுக்கும், எதிர்ப்பு சக்தி குறைபாடு உள்ளவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். தொற்றில் இருந்து குணமடைந்து வந்தவர்களுக்கு பெருமளவு இந்த நோய் காணப்படுகிறது.
கொரோனா தொற்றுக்கு ஸ்டீராய்டு உட்கொண்டவர்கள், சர்க்கரை நோயாளிகள், தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் செயற்கை சுவாசம் மூலம் சிகிச்சை பெற்றவர்கள், நீண்டகாலம் ஆக்சிஜன் கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்ட நோயாளிகள் ஆகியோரை இந்த நோய் பாதிக்கும்.
அறிகுறிகள்
இந்த நோய்க்குசரியான நேரத்தில் தக்க சிகிச்சை எடுக்காவிட்டால், இந்த நோய் மூக்கின் வழியாக மூளைக்கு பரவி பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. தலைவலி, முகத்தில் வலி, மூக்கடைப்பு, கருப்பு நிற சளி, கண் வலி, பல்வலி, பல் ஆடுதல், வாய் மற்றும் மூக்கின் உள் பகுதிகளில் கரும்புள்ளிகள் ஆகியவை இந்த நோயில் அறிகுறிகள் ஆகும். இதில் ஏதேனும் அறிகுறிகளில் தென்பட்டால் உடனடியாக மருத்துவரின் உதவியை அணுக வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X