என் மலர்
உடற்பயிற்சி

அர்த்த சிரசாசனம்
தலைமுடி உதிராமல் நன்கு வளர அர்த்த சிரசாசனம்
இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் தலைக்கு தேவையான இரத்த ஓட்டம் அதிகரிக்கும். தலைமுடி தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் இந்த ஆசனம் செய்து வந்தால் தீரும்...
செய்முறை:
விரிப்பின் மீது அமர்ந்து பின் மெதுவாக குனிந்து உச்சந்தலையை தரையில் குத்திட்டு, முன் கைகள் முட்டியின் உதவியால் உடம்பை செங்குத்தாக உயர்த்தவும். அதன் பின் கைவிரல்களைக் கோர்த்த நிலையில் பின் தலைக்கு ஆதரவாக வைத்து கொள்ளவும், இடுப்பிலிருந்து கால்களை நேராகத் தரையில் பாதங்களை பதித்து குறுங்கோண வடிவில் நிறுத்தவும். சாதாரண மூச்சில் பதினைந்து வினாடிகள் இருக்கவும். பின் மெதுவாக சாதாரண நிலைக்கு வரவும். இந்த ஆசனத்தை காலையில் மட்டும் 15 வினாடிகள் வரை தக்க இடைவெளி விட்டு இரண்டு முறை செய்யலாம். இதேபோல் மூன்று முறைகள் மாலை பயிற்சி செய்யவும்.
விரிப்பின் மீது அமர்ந்து பின் மெதுவாக குனிந்து உச்சந்தலையை தரையில் குத்திட்டு, முன் கைகள் முட்டியின் உதவியால் உடம்பை செங்குத்தாக உயர்த்தவும். அதன் பின் கைவிரல்களைக் கோர்த்த நிலையில் பின் தலைக்கு ஆதரவாக வைத்து கொள்ளவும், இடுப்பிலிருந்து கால்களை நேராகத் தரையில் பாதங்களை பதித்து குறுங்கோண வடிவில் நிறுத்தவும். சாதாரண மூச்சில் பதினைந்து வினாடிகள் இருக்கவும். பின் மெதுவாக சாதாரண நிலைக்கு வரவும். இந்த ஆசனத்தை காலையில் மட்டும் 15 வினாடிகள் வரை தக்க இடைவெளி விட்டு இரண்டு முறை செய்யலாம். இதேபோல் மூன்று முறைகள் மாலை பயிற்சி செய்யவும்.
இந்த ஆசனம் செய்து விட்டு, சாதாரண நிலைக்கு திரும்பும் போது தரையிலிருந்து தலையை மிக நிதானமாக உயர்த்தவும், படபடப்பு, இதயத்தின் இரத்த அழுத்த கோளாறு உள்ளவர்கள், முகம், தலை சம்பந்தப்பட்ட அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் இந்த ஆசனம் செய்யக் கூடாது.
யோகக் கலைமாமணி
பி,கிருஷ்ணன் பாலாஜி M.A.(Yoga)
63699 40440
பி,கிருஷ்ணன் பாலாஜி M.A.(Yoga)
63699 40440
Next Story






