என் மலர்
உடற்பயிற்சி
எழுத்து, இசை மற்றும் கணினி பயன்படுத்தும் துறைகளில் வேலை பார்ப்போர் கைகள், விரல்கள் மற்றும் மூட்டுகள் ஆகியவற்றுக்கான அவசியப் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
கை, விரல், கை மூட்டு, தோள் பட்டை ஆகிய இடங்களில் பிடிப்பு, வலி ஏற்படுவதை தசைநார் பிரச்சினை என்கிறோம். இதனால் கைகளை மடக்கவும், நீட்டவும் முடியாமல் வலி ஏற்படும். இந்த மாதிரியான தசைநார் பிரச்சினை ஏற்படும்போது, பெருவிரலில் அதிக அளவில் வலி ஏற்படும். அதை வைத்தே இது தசைநார் பிரச்சினை என அறிந்து கொள்ள முடியும். கைகளுக்கு இடைவெளியே இல்லாமல் தொடர்ந்து வேலை கொடுத்துக் கொண்டே இருப்பதால் தான் இது போன்ற தசைநார் பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
இதற்கு பேனாவைப் பிடித்து எழுதும் முறைகளும் ஒரு காரணம்தான். ஏனெனில், சிலர் பேனாக்களை இறுக்கமாகப் பிடித்து எழுதுவார்கள். ஒரு சிலர் சாய்த்து பிடித்து எழுதுவார்கள். தொடர்ச்சியாக இடைவெளியே இல்லாமல் எழுதிக்கொண்டே இருந்தாலும், தசை நார் பிரச்சினைகள் ஏற்படும். பெரும்பாலும் எழுத்துத் துறைகளில் உள்ளவர்களுக்கு, குறிப்பாக 30 முதல் 50 வயதுள்ளவர்களுக்கு இந்த பிரச்சினை வரும். சில மாணவர்களுக்கு அதிக அளவில் எழுதுவதால் கூட வரலாம்.
தட்டச்சு இயந்திரம் அல்லது கணினியில் தட்டச்சு செய்பவர்கள் விரல்களுக்கு அதிக அளவில் வேலை கொடுத்துக்கொண்டே இருப்பார்கள். அவர்களுக்கும் இது போன்ற பிரச்சினைகள் வரும். சில தட்டச்சுகள் கடினமானவையாக இருக்கும். அப்போது விரல்களுக்கு அதிக அளவு பளு கொடுப்பதால், விரல்கள் வலுவிழந்து வலியை ஏற்படுத்தும். டைப்ரைட்டிங், டேட்டா என்ட்ரி போன்ற தட்டச்சு தொடர்பான வேலைகளில் ஈடுபடுபவர்களுக்கும் இந்தப் பிரச்சினை வரலாம். மேலும், வீணை, கிடார், கீ போர்டு போன்ற இசைக்கருவிகளை அதிகம் பயன்படுத்துபவர்களுக்கும் கை விரல்களில் வலி, பிடிப்பு ஆகியவை ஏற்படும்.

எழுத்து, இசை மற்றும் கணினி பயன்படுத்தும் துறைகளில் வேலை பார்ப்போர் கைகள், விரல்கள் மற்றும் மூட்டுகள் ஆகியவற்றுக்கான அவசியப் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். எழுதுபவர்கள், சரியான முறையில் பேனாவைப் பிடித்து எழுதக் கற்றுக்கொள்ள வேண்டும். படுத்துக்கொண்டே எழுதுவது, சரியான நிலையில் இல்லாமல் எழுதுவது போன்ற செயல்களைத் தவிர்ப்பது நல்லது. எந்த வேலையாக இருந்தாலும், தொடர்ந்து செய்யாமல் சற்று இடைவெளிவிட்டுச் செய்வது நல்லது.
கைகள், விரல்களில் அடிக்கடி நெட்டி முறிப்பதைத் தவிர்க்கலாம். நெட்டி முறிப்பதால், இரண்டு மூட்டுகளின் இடையில் உள்ள வழவழப்புத்தன்மை பாதிக்கும். கடினமான தட்டச்சுகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். நிமிர்ந்த நிலையில், சவுகரியமான நாற்காலியில் உட்கார்ந்து வேலை பார்க்க வேண்டும். கைகளிலும், விரல்களிலும் தேங்காய் எண்ணெய் தடவி, மென்மையாக மசாஜ் கொடுக்கலாம். தொடர்ந்து வலி, வேலை செய்ய முடியாத நிலை இருந்தால், மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது.

விரல்களுக்கு என சில பயிற்சிகளைச் செய்யலாம். ஸ்ட்ரெஸ் பால், குழந்தைகள் விளையாடும் களிமண் ஆகியவற்றைக் கைகளில் வைத்துப் பிசையலாம். இவையும் விரல்களுக்கான சிறந்த பயிற்சிகள்தான். வளைந்து கொடுக்கக்கூடிய கயிறுகளை, விரல்களுக்கு இடையே வைத்தும் விரல்களுக்கான பயிற்சிகளைச் செய்யலாம். இதற்கு ரப்பர் பேண்ட் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம். ஏனெனில், பயிற்சி செய்யும்போது ரப்பர் பேண்ட் அறுந்து, கண்ணிலோ கைகளிலோ வேகமாகப் பட்டு காயங்களை ஏற்படுத்தக்கூடும்.
கை விரல்களை 5 முதல் 10 நிமிடங்கள் வரை மடக்கி, நீட்டி வருவதும் நல்ல தீர்வாகும். வெந்தயம், மிளகு ஆகியவற்றைத் தட்டில் கொட்டி அதை ஒவ்வொன்றாக விரல்களால் எடுப்பதும் சிறந்த பயிற்சி.
கட்டைவிரல் நுனியோடு மோதிர விரலின் நுனி தொடுவது, அதுபோல, மற்ற அனைத்து விரல்களும் கட்டை விரல் நுனியைத் தொடுவது என்பதுபோல, இந்தப் பயிற்சியை ஒவ்வொரு விரலுக்கும் இரண்டு நிமிடங்கள் என நேரம் ஒதுக்கிச் செய்வது நல்லது.
இதற்கு பேனாவைப் பிடித்து எழுதும் முறைகளும் ஒரு காரணம்தான். ஏனெனில், சிலர் பேனாக்களை இறுக்கமாகப் பிடித்து எழுதுவார்கள். ஒரு சிலர் சாய்த்து பிடித்து எழுதுவார்கள். தொடர்ச்சியாக இடைவெளியே இல்லாமல் எழுதிக்கொண்டே இருந்தாலும், தசை நார் பிரச்சினைகள் ஏற்படும். பெரும்பாலும் எழுத்துத் துறைகளில் உள்ளவர்களுக்கு, குறிப்பாக 30 முதல் 50 வயதுள்ளவர்களுக்கு இந்த பிரச்சினை வரும். சில மாணவர்களுக்கு அதிக அளவில் எழுதுவதால் கூட வரலாம்.
தட்டச்சு இயந்திரம் அல்லது கணினியில் தட்டச்சு செய்பவர்கள் விரல்களுக்கு அதிக அளவில் வேலை கொடுத்துக்கொண்டே இருப்பார்கள். அவர்களுக்கும் இது போன்ற பிரச்சினைகள் வரும். சில தட்டச்சுகள் கடினமானவையாக இருக்கும். அப்போது விரல்களுக்கு அதிக அளவு பளு கொடுப்பதால், விரல்கள் வலுவிழந்து வலியை ஏற்படுத்தும். டைப்ரைட்டிங், டேட்டா என்ட்ரி போன்ற தட்டச்சு தொடர்பான வேலைகளில் ஈடுபடுபவர்களுக்கும் இந்தப் பிரச்சினை வரலாம். மேலும், வீணை, கிடார், கீ போர்டு போன்ற இசைக்கருவிகளை அதிகம் பயன்படுத்துபவர்களுக்கும் கை விரல்களில் வலி, பிடிப்பு ஆகியவை ஏற்படும்.

எழுத்து, இசை மற்றும் கணினி பயன்படுத்தும் துறைகளில் வேலை பார்ப்போர் கைகள், விரல்கள் மற்றும் மூட்டுகள் ஆகியவற்றுக்கான அவசியப் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். எழுதுபவர்கள், சரியான முறையில் பேனாவைப் பிடித்து எழுதக் கற்றுக்கொள்ள வேண்டும். படுத்துக்கொண்டே எழுதுவது, சரியான நிலையில் இல்லாமல் எழுதுவது போன்ற செயல்களைத் தவிர்ப்பது நல்லது. எந்த வேலையாக இருந்தாலும், தொடர்ந்து செய்யாமல் சற்று இடைவெளிவிட்டுச் செய்வது நல்லது.
கைகள், விரல்களில் அடிக்கடி நெட்டி முறிப்பதைத் தவிர்க்கலாம். நெட்டி முறிப்பதால், இரண்டு மூட்டுகளின் இடையில் உள்ள வழவழப்புத்தன்மை பாதிக்கும். கடினமான தட்டச்சுகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். நிமிர்ந்த நிலையில், சவுகரியமான நாற்காலியில் உட்கார்ந்து வேலை பார்க்க வேண்டும். கைகளிலும், விரல்களிலும் தேங்காய் எண்ணெய் தடவி, மென்மையாக மசாஜ் கொடுக்கலாம். தொடர்ந்து வலி, வேலை செய்ய முடியாத நிலை இருந்தால், மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது.

விரல்களுக்கு என சில பயிற்சிகளைச் செய்யலாம். ஸ்ட்ரெஸ் பால், குழந்தைகள் விளையாடும் களிமண் ஆகியவற்றைக் கைகளில் வைத்துப் பிசையலாம். இவையும் விரல்களுக்கான சிறந்த பயிற்சிகள்தான். வளைந்து கொடுக்கக்கூடிய கயிறுகளை, விரல்களுக்கு இடையே வைத்தும் விரல்களுக்கான பயிற்சிகளைச் செய்யலாம். இதற்கு ரப்பர் பேண்ட் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம். ஏனெனில், பயிற்சி செய்யும்போது ரப்பர் பேண்ட் அறுந்து, கண்ணிலோ கைகளிலோ வேகமாகப் பட்டு காயங்களை ஏற்படுத்தக்கூடும்.
கை விரல்களை 5 முதல் 10 நிமிடங்கள் வரை மடக்கி, நீட்டி வருவதும் நல்ல தீர்வாகும். வெந்தயம், மிளகு ஆகியவற்றைத் தட்டில் கொட்டி அதை ஒவ்வொன்றாக விரல்களால் எடுப்பதும் சிறந்த பயிற்சி.
கட்டைவிரல் நுனியோடு மோதிர விரலின் நுனி தொடுவது, அதுபோல, மற்ற அனைத்து விரல்களும் கட்டை விரல் நுனியைத் தொடுவது என்பதுபோல, இந்தப் பயிற்சியை ஒவ்வொரு விரலுக்கும் இரண்டு நிமிடங்கள் என நேரம் ஒதுக்கிச் செய்வது நல்லது.
கை குவித்து செய்யும் நமஸ்காரத்தையே முகத்திற்கு நேராக அல்லது தலைக்கு மேலே வைத்து என்று செய்யும் போதும்கூட வெவ்வேறு விதமான உணர்வுகள் உங்களுக்குள் ஏற்படுவதை காணலாம்.
மற்றவர்களைப் பார்த்தால் நாம் நமஸ்காரம் செய்வதுகூட நாம் வளர்வதற்கான ஒரு வழிதான். உடல் உறுப்புகள் ஒவ்வொன்றையும் நம் உள்வளர்ச்சிக்கு எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதை நாம் ஒரு கலாச்சாரமாகவே அறிந்து வந்திருக்கிறோம். அதன் ஒரு பகுதிதான் யோக ஆசனங்கள்.
இந்த உடல் நமது கட்டுப்பாட்டுக்குள் இருக்கவேண்டும். நாம் சொல்வதை இந்த உடல் கேட்கவேண்டும். அது சொல்வதுபோல நாம் கேட்கக்கூடாது. அதற்காகத்தான் அத்தனை ஆசனப் பயிற்சிகளும். உடல் உறுப்புகள் நமது கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்போது எந்த ஒரு செயலிலும் நாம் நினைப்பதுபோல் அவை இயங்கும்.
கைகளை எப்படி வைத்துக்கொள்ள வேண்டும், கால்களை எப்படி வைத்துக் கொள்ளவேண்டும், ஒரு பொருளை எப்படி வாங்குவது, எப்படிக் கொடுப்பது, எப்படி சாப்பிடுவது என்று அனைத்தையுமே, ஒரு விஞ்ஞானமாக, ஒரு மனிதன் விதையாகவே இருந்துவிடாமல் எப்படியாவது மலர வேண்டும் என்ற நோக்கத்தில் இங்கு கற்றுத் தரப்பட்டிருக்கின்றன. அதில் ஒன்றுதான் நமஸ்காரமும்.
உங்கள் நாக்கு பேசுவதைக் காட்டிலும் உங்கள் கைகள் அதிகம் பேசி விடுகின்றன. ஒருவரை, நெஞ்சுக்கு நேரே இரு கை குவித்து நமஸ்காரம் செய்து வரவேற்கும்போது, உங்களுக்குள் எந்த மாதிரி உணர்வு ஏற்படுகிறது என்பதை கவனியுங்கள். இதையே ஒரு கை மட்டும் பயன்படுத்தியோ அல்லது வேறு மாதிரி கைகளை வைத்தோ வணங்கி அப்போது உங்களுக்குள் ஏற்படும் உணர்வை கவனியுங்கள். இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை அப்போது உங்களால் நன்கு புரிந்துகொள்ள முடியும்.

கை குவித்து செய்யும் நமஸ்காரத்தையே முகத்திற்கு நேராக அல்லது தலைக்கு மேலே வைத்து என்று செய்யும் போதும்கூட வெவ்வேறு விதமான உணர்வுகள் உங்களுக்குள் ஏற்படுவதை காணலாம். எங்கு எப்படி நமஸ்காரம் செய்வது என்பதும் இந்தக் கலாச்சாரத்தில் கற்றுத் தரப்பட்டிருக்கிறது.
நமஸ்காரம் வெவ்வேறு விதமாக செய்யும்போது நுரையீலின் வெவ்வேறு பகுதிகள் செயல்படுத்தப்படுகின்றன. மேலும் உள்ளங்கைகளில்தான் நரம்புகள் முடிகின்றன. எனவே இரு உள்ளங்கைகளையும் குவித்து வணங்கும்போது உங்கள் சக்திநிலை ஒன்றிணைந்து செயல்படுகிறது. யோகாவில் கைகளில் வைக்கும் முத்திரைகளுக்கு என முழு விஞ்ஞானமே இருக்கிறது.
நமஸ்காரம் என்பதும் ஒரு முத்திரைதான். கைகளைக் குவித்து வணங்கும்போது, முக்கியமாக எதிரில் நிற்பவரைப் பற்றிய உங்கள் விருப்பு-வெறுப்புகள் மறைகின்றன. அப்போது அவருக்குள் இருக்கும் தெய்வீகத்தையும் உங்களால் உணர முடிவதால் உங்களால் உண்மையாகவே வணங்க முடிகிறது.
உடல் என்பது மிகவும் சூட்சுமமான சூப்பர் கம்ப்யூட்டர். ஆனால் இதை முறையாக எப்படி உபயோகப்படுத்துவது என்பதை மறந்து வருகிறோம். நீங்கள் ஓரிடத்திற்கு தனியாக சென்று நெஞ்சுக்கு நேரே குவித்து வெறுமனே கும்பிட்டு பாருங்கள். கடவுளைக்கூட நினைக்க வேண்டாம். நீங்கள் நாத்திகராகக் கூட இருங்கள்.
ஆனாலும் இதை 10 நிமிடம் தனியாக உட்கார்ந்து செய்து பாருங்கள். உங்கள் உடல்நிலை மற்றும் உள்நிலையில் மாறுதல்களைக் கவனிக்க முடியும். இவை எல்லாமே அறிவுப்பூர்வமாக உணர்ந்த ஒரு விஞ்ஞானமாக நமது கலாச்சாரத்தில் இருந்தது. ஆனால், இப்போது மேற்கத்திய நாட்டிலிருந்து வருவதை மட்டுமே நாம் விஞ்ஞானமாக அங்கீகரிக்கிறோம்.
இந்த உடல் நமது கட்டுப்பாட்டுக்குள் இருக்கவேண்டும். நாம் சொல்வதை இந்த உடல் கேட்கவேண்டும். அது சொல்வதுபோல நாம் கேட்கக்கூடாது. அதற்காகத்தான் அத்தனை ஆசனப் பயிற்சிகளும். உடல் உறுப்புகள் நமது கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்போது எந்த ஒரு செயலிலும் நாம் நினைப்பதுபோல் அவை இயங்கும்.
கைகளை எப்படி வைத்துக்கொள்ள வேண்டும், கால்களை எப்படி வைத்துக் கொள்ளவேண்டும், ஒரு பொருளை எப்படி வாங்குவது, எப்படிக் கொடுப்பது, எப்படி சாப்பிடுவது என்று அனைத்தையுமே, ஒரு விஞ்ஞானமாக, ஒரு மனிதன் விதையாகவே இருந்துவிடாமல் எப்படியாவது மலர வேண்டும் என்ற நோக்கத்தில் இங்கு கற்றுத் தரப்பட்டிருக்கின்றன. அதில் ஒன்றுதான் நமஸ்காரமும்.
உங்கள் நாக்கு பேசுவதைக் காட்டிலும் உங்கள் கைகள் அதிகம் பேசி விடுகின்றன. ஒருவரை, நெஞ்சுக்கு நேரே இரு கை குவித்து நமஸ்காரம் செய்து வரவேற்கும்போது, உங்களுக்குள் எந்த மாதிரி உணர்வு ஏற்படுகிறது என்பதை கவனியுங்கள். இதையே ஒரு கை மட்டும் பயன்படுத்தியோ அல்லது வேறு மாதிரி கைகளை வைத்தோ வணங்கி அப்போது உங்களுக்குள் ஏற்படும் உணர்வை கவனியுங்கள். இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை அப்போது உங்களால் நன்கு புரிந்துகொள்ள முடியும்.

கை குவித்து செய்யும் நமஸ்காரத்தையே முகத்திற்கு நேராக அல்லது தலைக்கு மேலே வைத்து என்று செய்யும் போதும்கூட வெவ்வேறு விதமான உணர்வுகள் உங்களுக்குள் ஏற்படுவதை காணலாம். எங்கு எப்படி நமஸ்காரம் செய்வது என்பதும் இந்தக் கலாச்சாரத்தில் கற்றுத் தரப்பட்டிருக்கிறது.
நமஸ்காரம் வெவ்வேறு விதமாக செய்யும்போது நுரையீலின் வெவ்வேறு பகுதிகள் செயல்படுத்தப்படுகின்றன. மேலும் உள்ளங்கைகளில்தான் நரம்புகள் முடிகின்றன. எனவே இரு உள்ளங்கைகளையும் குவித்து வணங்கும்போது உங்கள் சக்திநிலை ஒன்றிணைந்து செயல்படுகிறது. யோகாவில் கைகளில் வைக்கும் முத்திரைகளுக்கு என முழு விஞ்ஞானமே இருக்கிறது.
நமஸ்காரம் என்பதும் ஒரு முத்திரைதான். கைகளைக் குவித்து வணங்கும்போது, முக்கியமாக எதிரில் நிற்பவரைப் பற்றிய உங்கள் விருப்பு-வெறுப்புகள் மறைகின்றன. அப்போது அவருக்குள் இருக்கும் தெய்வீகத்தையும் உங்களால் உணர முடிவதால் உங்களால் உண்மையாகவே வணங்க முடிகிறது.
உடல் என்பது மிகவும் சூட்சுமமான சூப்பர் கம்ப்யூட்டர். ஆனால் இதை முறையாக எப்படி உபயோகப்படுத்துவது என்பதை மறந்து வருகிறோம். நீங்கள் ஓரிடத்திற்கு தனியாக சென்று நெஞ்சுக்கு நேரே குவித்து வெறுமனே கும்பிட்டு பாருங்கள். கடவுளைக்கூட நினைக்க வேண்டாம். நீங்கள் நாத்திகராகக் கூட இருங்கள்.
ஆனாலும் இதை 10 நிமிடம் தனியாக உட்கார்ந்து செய்து பாருங்கள். உங்கள் உடல்நிலை மற்றும் உள்நிலையில் மாறுதல்களைக் கவனிக்க முடியும். இவை எல்லாமே அறிவுப்பூர்வமாக உணர்ந்த ஒரு விஞ்ஞானமாக நமது கலாச்சாரத்தில் இருந்தது. ஆனால், இப்போது மேற்கத்திய நாட்டிலிருந்து வருவதை மட்டுமே நாம் விஞ்ஞானமாக அங்கீகரிக்கிறோம்.
தினமும் 20 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வதால், உங்களை புத்துணர்ச்சி அடையச் செய்து, நம் ஆயுளையும் 10 ஆண்டுகள் ஆரோக்கியத்தோடு கூட்டுகிறது என்பதே விஞ்ஞானப்பூர்வ உண்மை.
உடலை அழகாகவும் ஆரோக்கியமாகவும் உறுதியாகவும் வைத்துக்கொள்ள பலவித உடற்பயிற்சிகளை செய்து வருகிறோம். உடற்பயிற்சிகள் செய்வதற்கு முன்பும், அதற்குப் பிறகும், எலும்பு இணைப்பு களையும் தசை மண்டலங்களையும் சருமத்தையும் நீட்டி - சுருக்குவதை (Stretching) பலரும் செய்வதில்லை. அதன் உன்னத அருமை யாருக்கும் தெரிவதில்லை.
தினமும் நீங்கள் விரும்பிச் செய்யும் நடைப்பயிற்சி, ஓட்டப்பயிற்சி, நீந்தும் பயிற்சி, ஏரோபிக்ஸ், பளு தூக்கும் உடற்பயிற்சிக் கூடம், உங்களுக்கு பிரியப்பட்ட எந்த விளையாட்டும் ஆகட்டும்... இவற்றைச் செய்வதற்கு முன்பும் (Before warm up) ஓடி களைத்த பின்பும் (Cooling Down) எலும்புகளின் அனைத்து இணைப்புகளையும், எல்லா தசை மண்டலங்களையும், உடலின் தோலையும் சுருக்கி - நீட்டும் (Stretching) பயிற்சி மிகவும் முக்கியமானது.
இது தினமும் 15 முதல் 20 நிமிடங்கள் செய்வதால், உடல் ரப்பர் போல வளைந்து கொடுத்து (Flexibility) உங்களையும் புத்துணர்ச்சி அடையச் செய்து, நம் ஆயுளையும் 10 ஆண்டுகள் ஆரோக்கியத்தோடு கூட்டுகிறது என்பதே விஞ்ஞானப்பூர்வ உண்மை.

உடற்பயிற்சிகள் செய்வதற்கு முன் சரியான முறையில் தயாராவதும், உடற்பயிற்சிகள் செய்து முடித்தவுடன், உடனே திட்டமிட்ட, சரியான முறைகளில் களைப்பை நீக்குவதுமே! இந்த முறையை கடைப்பிடிப்பதால் உடலில் உள்ள அனைத்து அணுக்களுக்கும் ஆக்ஸிஜன் செல்கிறது.
உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் தசை மற்றும் எலும்பு இணைப்புகளின் முறுக்கை (Tightness) இறுக்கத்தன்மையை (Stiffness) முழுவதுமாக குறைத்து அடுத்த வேலைப்பளுவை செய்ய தயாராவதோடு, அடுத்தடுத்த நாட்களுக்கு, வாழ்க்கை முழுவதும் உடற்பயிற்சியை மகிழ்ச்சிகரமாக, ஆர்வத்தோடு செய்யவும் ஆயுளை நீட்டிக்கவும் உதவுகிறது.
சிறப்புப் பயிற்சியை நல்ல பயிற்சியாளரிடம் கற்று செய்ய வேண்டும். அவர்களின் மேற்பார்வையில் செய்வது மிக முக்கியம். ஏனெனில், சிறிய எலும்புகளின் இணைப்புகள், உறுதியான எலும்புகளின் இணைப்புகள், நீண்ட தசைகள், சிறிய தசைகள், மென்மையான தசைகள், கடின-கெட்டியான தசைகள் என அதற்கு ஏற்றவாறு சுருக்கி - நீட்டும் பயிற்சியும் அதன் நேரமும் வேறுபடும்.
தினமும் நீங்கள் விரும்பிச் செய்யும் நடைப்பயிற்சி, ஓட்டப்பயிற்சி, நீந்தும் பயிற்சி, ஏரோபிக்ஸ், பளு தூக்கும் உடற்பயிற்சிக் கூடம், உங்களுக்கு பிரியப்பட்ட எந்த விளையாட்டும் ஆகட்டும்... இவற்றைச் செய்வதற்கு முன்பும் (Before warm up) ஓடி களைத்த பின்பும் (Cooling Down) எலும்புகளின் அனைத்து இணைப்புகளையும், எல்லா தசை மண்டலங்களையும், உடலின் தோலையும் சுருக்கி - நீட்டும் (Stretching) பயிற்சி மிகவும் முக்கியமானது.
இது தினமும் 15 முதல் 20 நிமிடங்கள் செய்வதால், உடல் ரப்பர் போல வளைந்து கொடுத்து (Flexibility) உங்களையும் புத்துணர்ச்சி அடையச் செய்து, நம் ஆயுளையும் 10 ஆண்டுகள் ஆரோக்கியத்தோடு கூட்டுகிறது என்பதே விஞ்ஞானப்பூர்வ உண்மை.

உடற்பயிற்சிகள் செய்வதற்கு முன் சரியான முறையில் தயாராவதும், உடற்பயிற்சிகள் செய்து முடித்தவுடன், உடனே திட்டமிட்ட, சரியான முறைகளில் களைப்பை நீக்குவதுமே! இந்த முறையை கடைப்பிடிப்பதால் உடலில் உள்ள அனைத்து அணுக்களுக்கும் ஆக்ஸிஜன் செல்கிறது.
உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் தசை மற்றும் எலும்பு இணைப்புகளின் முறுக்கை (Tightness) இறுக்கத்தன்மையை (Stiffness) முழுவதுமாக குறைத்து அடுத்த வேலைப்பளுவை செய்ய தயாராவதோடு, அடுத்தடுத்த நாட்களுக்கு, வாழ்க்கை முழுவதும் உடற்பயிற்சியை மகிழ்ச்சிகரமாக, ஆர்வத்தோடு செய்யவும் ஆயுளை நீட்டிக்கவும் உதவுகிறது.
சிறப்புப் பயிற்சியை நல்ல பயிற்சியாளரிடம் கற்று செய்ய வேண்டும். அவர்களின் மேற்பார்வையில் செய்வது மிக முக்கியம். ஏனெனில், சிறிய எலும்புகளின் இணைப்புகள், உறுதியான எலும்புகளின் இணைப்புகள், நீண்ட தசைகள், சிறிய தசைகள், மென்மையான தசைகள், கடின-கெட்டியான தசைகள் என அதற்கு ஏற்றவாறு சுருக்கி - நீட்டும் பயிற்சியும் அதன் நேரமும் வேறுபடும்.
ஓடுதல் மற்றும் சைக்கிள் ஓட்டுதல் என்பது உடல் எடை குறைப்பிற்கான ஏரோபிக் நடவடிக்கைகளாக கருதப்படுகிறது. இந்த இரண்டு பயிற்சிகளுமே சிறந்த முறையில் கலோரிகளை எரிக்க உதவும்.
இயற்கையான ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி என்பது அத்தியாவசியமானது. உடற்பயிற்சி என்பது பல வகையில் உள்ளது. ஒவ்வொரு பாகங்களின் செயற்பாட்டிற்கும் தனித்தனி உடற்பயிற்சிகள் இருக்கிறது. உடற்பயிற்சிகள் என்பது எளிமையானதாகவும் இருக்கும், கடுமையானதாகவும் இருக்கும். மிதமான உடற்பயிற்சிகளில் இரண்டு தான் ஓடுதல் மற்றும் சைக்கிள் ஓட்டுதல்.
ஓடுதல் மற்றும் சைக்கிள் ஓட்டுதல் என்பது உடல் எடை குறைப்பிற்கான ஏரோபிக் நடவடிக்கைகளாக கருதப்படுகிறது. இந்த இரு உடற்பயிற்சிகளும் உங்கள் உடலை கட்டுக்கோப்புடன் வைத்திருக்க உதவினாலும் கூட, இவையிரண்டில் எது சிறந்தது, எது அதிக கலோரிகளை எரிக்கும் என்றெல்லாம் கேள்விகள் எழலாம்.

உடல் எடை குறைய வேண்டுமானால் அதிகளவில் கலோரிகள் எரிக்கப்பட வேண்டும். ஓடுதல் மற்றும் சைக்கிள் ஓட்டுதல் என இரண்டுமே சிறந்த முறையில் கலோரிகளை எரிக்க உதவும். உடல் எடையை குறைக்க முயற்சி செய்யும் போது, நீங்கள் தேர்ந்தெடுக்கும் உடற்பயிற்சி முக்கியமல்ல; அதனால் கிடைக்கும் உடல்நல பயன்கள் தான் முக்கியம்.
உடற்பயிற்சி செய்யும் போது, உங்கள் உடல் எடையை பொறுத்து தான் எரிக்கப்படும் கலோரிகளின் எண்ணிக்கை அமையும். நீங்கள் அதிக எடையுடன் இருந்தால் ஓடும் போது அதிக கலோரிகளை எரிக்கலாம். பொதுவாகவே, ஓடும் போது கூடுதல் கலோரிகள் எரிக்கப்படும். 68 கிலோ எடை உள்ளவர், 40 நிமிடங்கள் ஓடினால் 500 கலோரிகள் வரை எரிக்கலாம். இதுவே 40 நிமிடங்கள் சைக்கிள் ஓட்டினால் 400 கலோரிகள் எரிக்கப்படும். எடையை தாங்கும் உடற்பயிற்சியாக இருக்கும் ஓட்டம், திடமான எலும்புகளை வளர்ப்பதிலும் உதவிடும்.

சைக்கிள் ஓட்டுவதை விட ஓடுவது சற்று கடினமான உடற்பயிற்சி என்பதால், அதிகளவிலான கொழுப்பு எரிக்கப்படும். மேலும் தசைகளில் கொழுப்பு விஷத்தன்மையை போக்கவும், கொழுப்புகளை திறம்பட உடைக்க வைக்கவும் ஓடுவது உதவும்.
நீண்ட நேரம் ஓடினாலோ அல்லது சைக்கிள் ஓட்டினாலோ அதிக அளவில் கலோரிகளை எரிக்க முடியும். வேகத்தை அதிகரித்தால் குறைந்த நேரத்திலேயே கூடுதல் அளவிலான கலோரிகளை எரிக்கலாம். ஒரு கிலோமீட்டரை 10 நிமிடத்தில் ஓடுவது, 90 நிமிடத்தில் ஓடி 900 கலோரிகளை எரிப்பதற்கு சமமாகும். அதேப்போல், சைக்கிள் ஓட்டும் போது, ஒரு மணிநேரத்தில் 25 கிலோமீட்டர் என வேகத்தை அதிகரித்தால், 892 கலோரிகளை எரிக்கலாம்.
உங்கள் தினசரி உடற்பயிற்சிகளில், இந்த இரண்டு உடற்பயிற்சிகளையும் சேர்த்துக் கொண்டால், நல்ல பயனை பெறலாம்.
ஓடுதல் மற்றும் சைக்கிள் ஓட்டுதல் என்பது உடல் எடை குறைப்பிற்கான ஏரோபிக் நடவடிக்கைகளாக கருதப்படுகிறது. இந்த இரு உடற்பயிற்சிகளும் உங்கள் உடலை கட்டுக்கோப்புடன் வைத்திருக்க உதவினாலும் கூட, இவையிரண்டில் எது சிறந்தது, எது அதிக கலோரிகளை எரிக்கும் என்றெல்லாம் கேள்விகள் எழலாம்.

உடல் எடை குறைய வேண்டுமானால் அதிகளவில் கலோரிகள் எரிக்கப்பட வேண்டும். ஓடுதல் மற்றும் சைக்கிள் ஓட்டுதல் என இரண்டுமே சிறந்த முறையில் கலோரிகளை எரிக்க உதவும். உடல் எடையை குறைக்க முயற்சி செய்யும் போது, நீங்கள் தேர்ந்தெடுக்கும் உடற்பயிற்சி முக்கியமல்ல; அதனால் கிடைக்கும் உடல்நல பயன்கள் தான் முக்கியம்.
உடற்பயிற்சி செய்யும் போது, உங்கள் உடல் எடையை பொறுத்து தான் எரிக்கப்படும் கலோரிகளின் எண்ணிக்கை அமையும். நீங்கள் அதிக எடையுடன் இருந்தால் ஓடும் போது அதிக கலோரிகளை எரிக்கலாம். பொதுவாகவே, ஓடும் போது கூடுதல் கலோரிகள் எரிக்கப்படும். 68 கிலோ எடை உள்ளவர், 40 நிமிடங்கள் ஓடினால் 500 கலோரிகள் வரை எரிக்கலாம். இதுவே 40 நிமிடங்கள் சைக்கிள் ஓட்டினால் 400 கலோரிகள் எரிக்கப்படும். எடையை தாங்கும் உடற்பயிற்சியாக இருக்கும் ஓட்டம், திடமான எலும்புகளை வளர்ப்பதிலும் உதவிடும்.

சைக்கிள் ஓட்டுவதை விட ஓடுவது சற்று கடினமான உடற்பயிற்சி என்பதால், அதிகளவிலான கொழுப்பு எரிக்கப்படும். மேலும் தசைகளில் கொழுப்பு விஷத்தன்மையை போக்கவும், கொழுப்புகளை திறம்பட உடைக்க வைக்கவும் ஓடுவது உதவும்.
நீண்ட நேரம் ஓடினாலோ அல்லது சைக்கிள் ஓட்டினாலோ அதிக அளவில் கலோரிகளை எரிக்க முடியும். வேகத்தை அதிகரித்தால் குறைந்த நேரத்திலேயே கூடுதல் அளவிலான கலோரிகளை எரிக்கலாம். ஒரு கிலோமீட்டரை 10 நிமிடத்தில் ஓடுவது, 90 நிமிடத்தில் ஓடி 900 கலோரிகளை எரிப்பதற்கு சமமாகும். அதேப்போல், சைக்கிள் ஓட்டும் போது, ஒரு மணிநேரத்தில் 25 கிலோமீட்டர் என வேகத்தை அதிகரித்தால், 892 கலோரிகளை எரிக்கலாம்.
உங்கள் தினசரி உடற்பயிற்சிகளில், இந்த இரண்டு உடற்பயிற்சிகளையும் சேர்த்துக் கொண்டால், நல்ல பயனை பெறலாம்.
யோகாசனப் பயிற்சிகளுக்கு முன்பு செய்யப்படும் சுவாசப் பயிற்சிகள் உங்கள் படபடப்பைக் குறைக்கும். யோகாசனம் செய்பவர்களுக்கான பயனுள்ள தகவல்களை பார்க்கலாம்.
* முதலில் இந்த யோகா சனப் பயிற்சிகளை செய்யும்போது சற்று தடுமாற்றமாக இருக்கும். ஆனால், தொடர்ந்து தினமும் செய்யும்போது, எளிதில் செய்யக்கூடிய அளவுக்கு உடல் வளைந்து கொடுக்கும் தன்மையைப் பெறும்.
* குளிப்பதற்கு அரை மணி நேரத்துக்கு முன்போ அல்லது பின்போ, யோகாசனம் செய்யலாம்.
* உணவு உண்ட பிறகு யோகாசனம் செய்யக் கூடாது. காலை உணவு, சிற்றுண்டிக்குப் பிறகு 21/2 மணி நேரம் இடைவெளி விட வேண்டும். மதிய உணவுக்குப் பிறகு, 4 மணி நேர இடைவெளிதந்து யோகப் பயிற்சி செய்யலாம்.

* ஆசனங்களையும், உடற்பயிற்சிகளையும் ஒரே நேரத்தில் செய்யக் கூடாது. உடலைத் தளர்த்தும் பயிற்சிக்குப் பிறகே ஆசனங்களைத் துவங்க வேண்டும்.
* ஆசனங்களின் ஒவ்வொரு நிலையிலும் உடலைத் தளர்த்துவது மிக அவசியம். ஆசனங்களின் உச்ச நிலையிலும் எல்லா இறுக்கங்களையும் அகற்றவும். ஓர் ஆசனத்துக்கும் அடுத்த ஆசனத்துக்கும் இடையில் சில நிமிடங்கள் ஓய்வு எடுக்கலாம்.
* சுலபமாகக் கால்களை, கைகளை அசைப்பதற்கு வசதியாக உள்ள பருத்தி ஆடைகளை உடுத்துதல் நலம்.
* எந்த ஓர் ஆசனம் செய்த பிறகும், செய்பவர்களின் உடல் புத்துணர்ச்சியுடனும், சுகமாகவும் இருக்க வேண்டும். களைப்படைந்தோ, சக்தி இழந்தோ வியர்த்தோ போகக் கூடாது.
* குளிப்பதற்கு அரை மணி நேரத்துக்கு முன்போ அல்லது பின்போ, யோகாசனம் செய்யலாம்.
* உணவு உண்ட பிறகு யோகாசனம் செய்யக் கூடாது. காலை உணவு, சிற்றுண்டிக்குப் பிறகு 21/2 மணி நேரம் இடைவெளி விட வேண்டும். மதிய உணவுக்குப் பிறகு, 4 மணி நேர இடைவெளிதந்து யோகப் பயிற்சி செய்யலாம்.

* ஆசனங்களையும், உடற்பயிற்சிகளையும் ஒரே நேரத்தில் செய்யக் கூடாது. உடலைத் தளர்த்தும் பயிற்சிக்குப் பிறகே ஆசனங்களைத் துவங்க வேண்டும்.
* ஆசனங்களின் ஒவ்வொரு நிலையிலும் உடலைத் தளர்த்துவது மிக அவசியம். ஆசனங்களின் உச்ச நிலையிலும் எல்லா இறுக்கங்களையும் அகற்றவும். ஓர் ஆசனத்துக்கும் அடுத்த ஆசனத்துக்கும் இடையில் சில நிமிடங்கள் ஓய்வு எடுக்கலாம்.
* சுலபமாகக் கால்களை, கைகளை அசைப்பதற்கு வசதியாக உள்ள பருத்தி ஆடைகளை உடுத்துதல் நலம்.
* எந்த ஓர் ஆசனம் செய்த பிறகும், செய்பவர்களின் உடல் புத்துணர்ச்சியுடனும், சுகமாகவும் இருக்க வேண்டும். களைப்படைந்தோ, சக்தி இழந்தோ வியர்த்தோ போகக் கூடாது.
உங்கள் உடலில் உள்ள அதிகப்படியான கலோரிகளை உடனடியாக குறைக்க எந்தெந்த உடற்பயிற்சிகளை எவ்வளவு நேரம் செய்தால் போதுமானது என்று விரிவாக கீழே பார்க்கலாம்.
நீங்கள் தேர்ந்தெடுக்கும் உடற்பயிற்சி முறையை பொறுத்து 100-250 கலோரிகள் வரை குறைக்கலாம். உங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் கீழே உள்ள உத்திகளை பின்பற்றினால் உங்கள் உடல் நல்ல வடிவத்தை பெறும்.
ஏரோபிக் உடற்பயிற்சி நடனமான ஜூம்பா என்பது குஷியுடன் உடம்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் வழியாகும். இசையை உணர்ந்து, அதற்கேற்ப உடம்பை அசைந்து கொடுத்து, அதனால் ஊக்கமடைந்து உடல் எடையை குறைக்கலாம். ஜூம்பாவுடன் இணைந்து கொள்ள, நல்ல ஷூக்கள் மட்டுமே தேவை. உடல் எடை, பாலினம், கட்டுக்கோப்பின் அளவு மற்றும் இதர ஃபிசிகல் காரணிகளின் அடிப்படையில், ஒரு மணி நேரத்திற்கு 400-600 கலோரிகளை வரை எரிக்கலாம்.
உங்கள் வீட்டு அலமாரியை 2 மணிநேரம் சுத்தப்படுத்தினால் போதும், அது 20 நிமிடங்களுக்கு ட்ரெட்மில்லில் பயிற்சி செய்வதற்கு சமமாகும். இதனால் 200-300 கலோரிகள் வரை எரிக்கப்படும். இருப்பினும் 10 நிமிடங்கள் துணி துவைப்பது போன்ற வேலைகளால் மட்டும் கொழுப்பு குறையும் என எண்ணி விடாதீர்கள். நீங்கள் ஈடுபடும் வேலையை ரசித்து செய்தால், 20-20% வரை உடல் எடை குறையும்.

10 நிமிடங்களுக்கு தீவிர இடைவெளி பயிற்சியில் ஈடுபட்டால், 150-250 கலோரிகளை வரை குறைக்கலாம். உடல் பருமன் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் இதனை முயற்சி செய்யலாம். இதய துடிப்புக்கு சவால் விடும் விசேஷமான உடற்பயிற்சி இது. வயது, சக்தி, தாங்கும் உறுதி மற்றும் உங்கள் உடலால் தாங்கப்படும் பயிற்சியின் எண்ணிக்கைகள் போன்றவற்றின் அடிப்படையில், இந்த பயிற்சியின் வகையையும், அளவையும் நீங்கள் மாற்றிக் கொள்ளலாம். இதனை அன்றாடம் பயன்படுத்தி வந்தால், உங்கள் தாங்கும் திறன் மேம்படும். ஆகவே உங்கள் தேவைகேற்ப இந்த பயிற்சியில் ஈடுபடுங்கள்.
ஸ்கிப்பிங் பயிற்சியை 10 நிமிடங்களுக்கு செய்யுங்கள். புஷ் அப் (10 முறை), குந்துகைகள் (15), க்ரஞ்சஸ் (25), ஸ்கிப்பிங் (முடிந்த வேகத்தில் 100-200 முறை). 1-2 நிமிடம் ஓய்வு எடுத்துக் கொண்டு, இந்த மொத்த சுற்றையும், உங்கள் உடலைப் பொறுத்து, 2-3 முறைகள் தொடர்ந்து செய்யுங்கள். சுறுசுறுப்பான நடை பழக்கத்தை அன்றாடம் 10-20 நிமிடங்களுக்கு செய்யலாம்.
ஏரோபிக் உடற்பயிற்சி நடனமான ஜூம்பா என்பது குஷியுடன் உடம்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் வழியாகும். இசையை உணர்ந்து, அதற்கேற்ப உடம்பை அசைந்து கொடுத்து, அதனால் ஊக்கமடைந்து உடல் எடையை குறைக்கலாம். ஜூம்பாவுடன் இணைந்து கொள்ள, நல்ல ஷூக்கள் மட்டுமே தேவை. உடல் எடை, பாலினம், கட்டுக்கோப்பின் அளவு மற்றும் இதர ஃபிசிகல் காரணிகளின் அடிப்படையில், ஒரு மணி நேரத்திற்கு 400-600 கலோரிகளை வரை எரிக்கலாம்.
உங்கள் வீட்டு அலமாரியை 2 மணிநேரம் சுத்தப்படுத்தினால் போதும், அது 20 நிமிடங்களுக்கு ட்ரெட்மில்லில் பயிற்சி செய்வதற்கு சமமாகும். இதனால் 200-300 கலோரிகள் வரை எரிக்கப்படும். இருப்பினும் 10 நிமிடங்கள் துணி துவைப்பது போன்ற வேலைகளால் மட்டும் கொழுப்பு குறையும் என எண்ணி விடாதீர்கள். நீங்கள் ஈடுபடும் வேலையை ரசித்து செய்தால், 20-20% வரை உடல் எடை குறையும்.

10 நிமிடங்களுக்கு தீவிர இடைவெளி பயிற்சியில் ஈடுபட்டால், 150-250 கலோரிகளை வரை குறைக்கலாம். உடல் பருமன் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் இதனை முயற்சி செய்யலாம். இதய துடிப்புக்கு சவால் விடும் விசேஷமான உடற்பயிற்சி இது. வயது, சக்தி, தாங்கும் உறுதி மற்றும் உங்கள் உடலால் தாங்கப்படும் பயிற்சியின் எண்ணிக்கைகள் போன்றவற்றின் அடிப்படையில், இந்த பயிற்சியின் வகையையும், அளவையும் நீங்கள் மாற்றிக் கொள்ளலாம். இதனை அன்றாடம் பயன்படுத்தி வந்தால், உங்கள் தாங்கும் திறன் மேம்படும். ஆகவே உங்கள் தேவைகேற்ப இந்த பயிற்சியில் ஈடுபடுங்கள்.
ஸ்கிப்பிங் பயிற்சியை 10 நிமிடங்களுக்கு செய்யுங்கள். புஷ் அப் (10 முறை), குந்துகைகள் (15), க்ரஞ்சஸ் (25), ஸ்கிப்பிங் (முடிந்த வேகத்தில் 100-200 முறை). 1-2 நிமிடம் ஓய்வு எடுத்துக் கொண்டு, இந்த மொத்த சுற்றையும், உங்கள் உடலைப் பொறுத்து, 2-3 முறைகள் தொடர்ந்து செய்யுங்கள். சுறுசுறுப்பான நடை பழக்கத்தை அன்றாடம் 10-20 நிமிடங்களுக்கு செய்யலாம்.
இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் கணுக்கால் மூட்டு, கால் சதைகள் பலம் பெறும். கால் மூட்டு வீக்கம் நீங்கும். இந்த ஆசனம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
செய்முறை:
நேராக நிமிர்ந்து நிற்க வேண்டும். பின் கால்களுக்கு இடையில், ஒரு அடி அகலம் இருக்குமாறு காலை விரித்து வைக்கவும். கைகளை நேராக தோள்பட்டை அளவிற்கு முன்னே நீட்ட வேண்டும். உடம்பை மெதுவாக கீழே இறக்கி நாற்காலியின் மீது அமர்வது போல் உட்கார வேண்டும்.
தொடையின் மேல் பகுதி கிடைமட்டமாக இருக்க வேண்டும். ஆசனத்தின் இறுதி நிலையில் முதுகெலும்பு நேராக, 90 டிகிரியில் இருக்க வேண்டும். முன் பக்க உடம்பை வளைக்க கூடாது.

கால அளவு:
20 அல்லது 30 வினாடிகள் வரை செய்ய வேண்டும். ஆரம்ப நாட்களில், 5 முதல் 10 வினாடிகள் வரை செய்யலாம். ஆசன நிலையில் சாதாரண மூச்சில் இருக்க வேண்டும். செய்து முடித்த பின் நன்றாக ஆழ்ந்து மூச்சு இழுத்து விட வேண்டும்.
பலன்கள்:
கணுக்கால் மூட்டு, கால் சதைகள் பலம் பெறும். கால் முட்டி பலம் பெறும். தோள்பட்டையில் உள்ள இறுக்கத்தை நீக்கும்; கால் மூட்டு வீக்கம் நீங்கும்.
நேராக நிமிர்ந்து நிற்க வேண்டும். பின் கால்களுக்கு இடையில், ஒரு அடி அகலம் இருக்குமாறு காலை விரித்து வைக்கவும். கைகளை நேராக தோள்பட்டை அளவிற்கு முன்னே நீட்ட வேண்டும். உடம்பை மெதுவாக கீழே இறக்கி நாற்காலியின் மீது அமர்வது போல் உட்கார வேண்டும்.
தொடையின் மேல் பகுதி கிடைமட்டமாக இருக்க வேண்டும். ஆசனத்தின் இறுதி நிலையில் முதுகெலும்பு நேராக, 90 டிகிரியில் இருக்க வேண்டும். முன் பக்க உடம்பை வளைக்க கூடாது.

கால அளவு:
20 அல்லது 30 வினாடிகள் வரை செய்ய வேண்டும். ஆரம்ப நாட்களில், 5 முதல் 10 வினாடிகள் வரை செய்யலாம். ஆசன நிலையில் சாதாரண மூச்சில் இருக்க வேண்டும். செய்து முடித்த பின் நன்றாக ஆழ்ந்து மூச்சு இழுத்து விட வேண்டும்.
பலன்கள்:
கணுக்கால் மூட்டு, கால் சதைகள் பலம் பெறும். கால் முட்டி பலம் பெறும். தோள்பட்டையில் உள்ள இறுக்கத்தை நீக்கும்; கால் மூட்டு வீக்கம் நீங்கும்.
ஆசனங்களுள் ஒன்றான விருக்ஷாசனம் செய்தால், மனதை ஒருநிலைப்படுத்தி, நினைத்த காரியங்களை மிக சுலபமாக செய்ய முடியும். இந்த ஆசனம் செய்முறையை பார்க்கலாம்.
நம்மில் பலருக்கு இருக்கும் பிரச்சனையே, மனதை ஒருநிலைப்படுத்துதல் தான். ஆசனங்களுள் ஒன்றான விருக்ஷாசனம் செய்தால், மனதை ஒருநிலைப்படுத்தி, நினைத்த காரியங்களை மிக சுலபமாக செய்ய முடியும்.
விருக்ஷாசனம் செய்ய, உடல் தசைகள், வளையும் தன்மையில் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. ஆசனங்கள் செய்ய வயது வரம்பும் தடையல்ல. அதிகாலையிலோ, அல்லது மாலை நேரங்களிலோ இந்த ஆசனத்தை செய்யலாம். விருக்ஷாசனம் என்றால், மரம் போன்ற தோற்றம் என்று பொருள்.
இந்த ஆசனத்தை முழு ஈடுபாட்டுடன் செய்ய வேண்டும். ஆசனங்களை கட்டாயப்படுத்தி செய்வதால், எந்த பயனையும் பெற முடியாது. அதேபோல், வெறும் தரையிலும் செய்யக்கூடாது.
செய்முறை :
வலது கால் முட்டியை மடக்கி, அதன் பாதங்களை, இடது காலின் தொடைப்பகுதியில் வைக்க வேண்டும். முதல் கட்ட பயிற்சியின்போது, போதுமான அளவு இடது கால் முட்டி, மடங்காத வகையில் செய்ய வேண்டும். பின், நன்கு பயின்ற பிறகு, முட்டி முழுவதுமாக மடங்காமல் செய்ய வேண்டும்.

தொடர்ந்து, இரண்டு கைகளையும், தலைக்கு மேல் உயர்த்தி, கைகளை ஒன்றாக சேர்ந்து வணங்க வேண்டும். இப்பயிற்சியின்போது, சாதாரணமாக மூச்சுவிட வேண்டும். மூச்சை அடக்குவதோ, அல்லது வாய் வழியாக மூச்சு விடுவதோ கூடாது. இதேநிலையில், 20 முதல், 30 விநாடிகள் நிற்க வேண்டும்.
பயிற்சியின்போது, உடலின் மொத்த எடையும், ஒரு காலில் தாங்குவதால், கால் தசைகள் வலுப்பெறும். அதேபோல், சீராக மூச்சு விடுவதாலும், எடையை தாங்கும்போது இடுப்பு பகுதியில் வளைவு தன்மை அதிகரிப்பதாலும், நன்றாக பசி எடுக்கும்.
உரிய நேரத்தில் பசி எடுக்காமல், அவதிப்படுபவர்கள் இந்த ஆசனத்தை செய்யலாம். உடல் எடையை தாங்குவது மட்டுமின்றி, சமநிலைப்படுத்தி பூமியின் புவி ஈர்ப்பு சக்திக்கு இணையாக, உடலை சமப்படுத்துவதால், மனம் ஒரு நிலைப்படும்.
இதனால், மனதும் அறிவும் ஒன்றுபட்டு செயல்பட முடியும். இந்த நிலையை நன்றாக பழகிய பின், கண்களை மூடி, இந்த ஆசனத்தில் நிற்க பயிற்சி எடுக்கலாம். ஆண், பெண் என இருபாலரும் இந்த ஆசனத்தை செய்யலாம்.
விருக்ஷாசனம் செய்ய, உடல் தசைகள், வளையும் தன்மையில் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. ஆசனங்கள் செய்ய வயது வரம்பும் தடையல்ல. அதிகாலையிலோ, அல்லது மாலை நேரங்களிலோ இந்த ஆசனத்தை செய்யலாம். விருக்ஷாசனம் என்றால், மரம் போன்ற தோற்றம் என்று பொருள்.
இந்த ஆசனத்தை முழு ஈடுபாட்டுடன் செய்ய வேண்டும். ஆசனங்களை கட்டாயப்படுத்தி செய்வதால், எந்த பயனையும் பெற முடியாது. அதேபோல், வெறும் தரையிலும் செய்யக்கூடாது.
செய்முறை :
வலது கால் முட்டியை மடக்கி, அதன் பாதங்களை, இடது காலின் தொடைப்பகுதியில் வைக்க வேண்டும். முதல் கட்ட பயிற்சியின்போது, போதுமான அளவு இடது கால் முட்டி, மடங்காத வகையில் செய்ய வேண்டும். பின், நன்கு பயின்ற பிறகு, முட்டி முழுவதுமாக மடங்காமல் செய்ய வேண்டும்.

தொடர்ந்து, இரண்டு கைகளையும், தலைக்கு மேல் உயர்த்தி, கைகளை ஒன்றாக சேர்ந்து வணங்க வேண்டும். இப்பயிற்சியின்போது, சாதாரணமாக மூச்சுவிட வேண்டும். மூச்சை அடக்குவதோ, அல்லது வாய் வழியாக மூச்சு விடுவதோ கூடாது. இதேநிலையில், 20 முதல், 30 விநாடிகள் நிற்க வேண்டும்.
பயிற்சியின்போது, உடலின் மொத்த எடையும், ஒரு காலில் தாங்குவதால், கால் தசைகள் வலுப்பெறும். அதேபோல், சீராக மூச்சு விடுவதாலும், எடையை தாங்கும்போது இடுப்பு பகுதியில் வளைவு தன்மை அதிகரிப்பதாலும், நன்றாக பசி எடுக்கும்.
உரிய நேரத்தில் பசி எடுக்காமல், அவதிப்படுபவர்கள் இந்த ஆசனத்தை செய்யலாம். உடல் எடையை தாங்குவது மட்டுமின்றி, சமநிலைப்படுத்தி பூமியின் புவி ஈர்ப்பு சக்திக்கு இணையாக, உடலை சமப்படுத்துவதால், மனம் ஒரு நிலைப்படும்.
இதனால், மனதும் அறிவும் ஒன்றுபட்டு செயல்பட முடியும். இந்த நிலையை நன்றாக பழகிய பின், கண்களை மூடி, இந்த ஆசனத்தில் நிற்க பயிற்சி எடுக்கலாம். ஆண், பெண் என இருபாலரும் இந்த ஆசனத்தை செய்யலாம்.
கோடைக்காலத்தில் செய்வதற்கென்றே சில பிராணாயாமங்கள் உள்ளன. இந்த ஆசனங்களை செய்து வந்தால் மனச்சோர்வு மற்றும் மனஅழுத்தத்தைக் குறைக்கிறது. சீரான தூக்கத்துக்கு உதவுகிறது.
சந்திரநாடி பிராணாயாமம் :
செய்முறை: வஜ்ராசன முறையில் அமர வேண்டும். வலது கையை நாசிக்கான முத்ராவில் வைக்க வேண்டும். இப்போது, வலது நாசியில் வலது கையின் பெருவிரலை வைத்து மூட வேண்டும். இடது நாசியால் மூச்சை இழுத்து விட வேண்டும். இதேபோல் 10 - 15 முறை செய்யலாம். இந்தப் பிராணாயாமப் பயிற்சியை மூன்று வேளையும் செய்யலாம்.
பலன்கள்: சந்திரநாடி பிராணாயாமம் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த உதவும். மனஅழுத்தம், மனச்சோர்வு குறையும். தூக்கமின்மையைச் சரிசெய்து, எளிதில் செரிமானசக்தியைச் சீராக்கும். உடலைக் குளிர்ச்சி அடையச் செய்யும்.
ஷீட்டாலி பிராணாயாமம் :
பயிற்சி: பத்மாசன நிலையில் உட்கார வேண்டும். இரண்டு கைகளையும் சின்முத்திரையில் வைக்க வேண்டும். கண்களை மூடிய நிலையில் வைத்து நாக்கை வெளியே நீட்டி, உருளை போன்று உட்புறமாக மடக்கி வைத்துக்கொள்ள வேண்டும். இப்போது நாக்கின் வழியாக மூச்சை உள் இழுக்க வேண்டும். மூச்சை உள்ளே இழுத்ததும், நாக்கை உள்ளே கொண்டு செல்ல வேண்டும். பிறகு, பற்களின் வழியாக மூச்சை வெளியிட வேண்டும். இதேபோல் ஐந்து முறை செய்யலாம். இறுதியாக, இரண்டு உள்ளங்கைகளையும் தேய்த்து, கண்களில் வைக்க வேண்டும். பின்பு கண்களைத் திறக்க வேண்டும்.

பலன்கள்: இது உடல் குளிர்ச்சி அடைய உதவுகிறது. சுவாசம் சீராக உடலினுள் பரவ உதவுகிறது. நுரையீரல் பிரச்னைகள், சளி மற்றும் காய்ச்சலைக் குணப்படுத்தக்கூடியது. மன அமைதிக்கு உதவுகிறது.
ஷீட்கரி பிராணாயாமம் :
பயிற்சி: பத்மாசன நிலையிலோ அல்லது சாதாரணமாகவோ உட்கார வேண்டும். முதுகுத்தண்டு நேராக இருக்கும்படி அமர வேண்டும். கைகள் இரண்டையும் சின்முத்திரையில் வைக்க வேண்டும். நாக்கை உட்புறமாக மடித்து வைத்துக்கொள்ள வேண்டும். இப்போது, பற்களின் இடுக்குகள் வழியாக மூச்சை இழுக்க வேண்டும். பின்பு, மூக்கின் வழியாக மூச்சை வெளியிட வேண்டும்.
பலன்கள்: உடலைக் குளிர்ச்சி அடையச் செய்யும். கோடைக்காலத்துக்கு ஏற்ற பிராணாயாமப் பயிற்சி இது. மனச்சோர்வு மற்றும் மனஅழுத்தத்தைக் குறைக்கிறது. சீரான தூக்கத்துக்கு உதவுகிறது.
செய்முறை: வஜ்ராசன முறையில் அமர வேண்டும். வலது கையை நாசிக்கான முத்ராவில் வைக்க வேண்டும். இப்போது, வலது நாசியில் வலது கையின் பெருவிரலை வைத்து மூட வேண்டும். இடது நாசியால் மூச்சை இழுத்து விட வேண்டும். இதேபோல் 10 - 15 முறை செய்யலாம். இந்தப் பிராணாயாமப் பயிற்சியை மூன்று வேளையும் செய்யலாம்.
பலன்கள்: சந்திரநாடி பிராணாயாமம் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த உதவும். மனஅழுத்தம், மனச்சோர்வு குறையும். தூக்கமின்மையைச் சரிசெய்து, எளிதில் செரிமானசக்தியைச் சீராக்கும். உடலைக் குளிர்ச்சி அடையச் செய்யும்.
ஷீட்டாலி பிராணாயாமம் :
பயிற்சி: பத்மாசன நிலையில் உட்கார வேண்டும். இரண்டு கைகளையும் சின்முத்திரையில் வைக்க வேண்டும். கண்களை மூடிய நிலையில் வைத்து நாக்கை வெளியே நீட்டி, உருளை போன்று உட்புறமாக மடக்கி வைத்துக்கொள்ள வேண்டும். இப்போது நாக்கின் வழியாக மூச்சை உள் இழுக்க வேண்டும். மூச்சை உள்ளே இழுத்ததும், நாக்கை உள்ளே கொண்டு செல்ல வேண்டும். பிறகு, பற்களின் வழியாக மூச்சை வெளியிட வேண்டும். இதேபோல் ஐந்து முறை செய்யலாம். இறுதியாக, இரண்டு உள்ளங்கைகளையும் தேய்த்து, கண்களில் வைக்க வேண்டும். பின்பு கண்களைத் திறக்க வேண்டும்.

பலன்கள்: இது உடல் குளிர்ச்சி அடைய உதவுகிறது. சுவாசம் சீராக உடலினுள் பரவ உதவுகிறது. நுரையீரல் பிரச்னைகள், சளி மற்றும் காய்ச்சலைக் குணப்படுத்தக்கூடியது. மன அமைதிக்கு உதவுகிறது.
ஷீட்கரி பிராணாயாமம் :
பயிற்சி: பத்மாசன நிலையிலோ அல்லது சாதாரணமாகவோ உட்கார வேண்டும். முதுகுத்தண்டு நேராக இருக்கும்படி அமர வேண்டும். கைகள் இரண்டையும் சின்முத்திரையில் வைக்க வேண்டும். நாக்கை உட்புறமாக மடித்து வைத்துக்கொள்ள வேண்டும். இப்போது, பற்களின் இடுக்குகள் வழியாக மூச்சை இழுக்க வேண்டும். பின்பு, மூக்கின் வழியாக மூச்சை வெளியிட வேண்டும்.
பலன்கள்: உடலைக் குளிர்ச்சி அடையச் செய்யும். கோடைக்காலத்துக்கு ஏற்ற பிராணாயாமப் பயிற்சி இது. மனச்சோர்வு மற்றும் மனஅழுத்தத்தைக் குறைக்கிறது. சீரான தூக்கத்துக்கு உதவுகிறது.
உடலில் அதிகக் கொழுப்புச்சத்து உடையவர்களுக்கு இந்த முத்திரையைச் செய்யத் தொடங்கிய ஒரு மாதத்தில், கெட்ட கொழுப்பு குறைய தொடங்குவதை காணலாம்.
உடல்பருமனாக இருப்பதுதான் அனைத்து நோய்களுக்கும் முதல் காரணம். உடல் எடையைக் கட்டுக்குள்வைத்தாலே, பல்வேறு நோய்கள் வராமல் தடுத்துவிடலாம். இதற்குத் துணைபுரிவது சூரிய முத்திரை. யோகப் பயிற்சியில் சூரிய நமஸ்காரம் செய்யும் பலனை இந்த முத்திரை அளிக்கும்.
உடலில் உள்ள திடக்கழிவுகளை எரித்து அழிப்பதே சூரிய முத்திரை. உண்ணும் உணவில் முழுமையாகச் செரிக்கப்படாதவை, கொழுப்பாக மாறுகின்றன. நெருப்பு என்னும் சக்தியே செரிமானத்துக்குத் துணைபுரிந்து, உடலில் அதிகப்படியான கொழுப்பு சேராமல் உடலை சுறுசுறுப்பாகவும் லேசாகவும் வைத்திருக்க உதவுகிறது.
விரிப்பில் சப்பளாங்கால் இட்டு அமர்ந்து 10 நிமிடங்கள் வரை செய்தால் போதும். தினமும் இருவேளை, வெறும் வயிற்றில் செய்வது சிறந்த பலனைத் தரும்.
முத்திரையைச் செய்யும் முன், அருகில் ஒரு டம்ளரில் தண்ணீரை எடுத்துவைத்த பின் முத்திரை செய்யலாம். முத்திரை செய்து முடித்த உடனே தண்ணீரைக் கட்டாயம் குடிக்க வேண்டும்.
அதிக உடல் எடையுடன் இருப்பவர், முத்திரை செய்யும்போது, கை, கால், தொடைகளில் வலி ஏற்படலாம். தொடர்ந்து செய்யச் செய்ய, படிப்படியாக வலி குறைந்துவிடும். வலி இருக்கும்போது, தண்ணீர் அருந்துவது முக்கியம்.

உச்சி வெயில் நேரம், வெயிலில் பயணம் செய்யும் சமயங்களில், இந்த முத்திரையைத் தவிர்க்கவும். கோடையில் தினமும் ஒரு முறை செய்தால் போதும்.
செய்முறை :
மோதிர விரலை மடக்கி, உள்ளங்கையின் நடுவில் தொட வேண்டும். கட்டை விரலால் மோதிர விரலை மிதமாக அழுத்த வேண்டும். மற்ற மூன்று விரல்கள் நீட்டி இருக்க வேண்டும்.
பலன்கள் :
உடலின் வெப்ப நிலையை அதிகரித்து, பசியைத் தூண்டும். செரிமானத்துக்கு உதவும். எப்போதும் உடலை லேசாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்திருக்க உதவும்.
உடலில் அதிகக் கொழுப்புச்சத்து உடையவர்களுக்கு முத்திரையைச் செய்யத் தொடங்கிய ஒரு மாதத்தில், கெட்ட கொழுப்பு குறையத் தொடங்கும்.
ரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பு, கொழுப்புச் சேருதல் (Atherosclerosis) ஆகியவற்றைச் சரிசெய்து, சீரான ரத்த ஓட்டத்துக்கு வழிவகுக்கும்.
உடலில் உள்ள திடக்கழிவுகளை எரித்து அழிப்பதே சூரிய முத்திரை. உண்ணும் உணவில் முழுமையாகச் செரிக்கப்படாதவை, கொழுப்பாக மாறுகின்றன. நெருப்பு என்னும் சக்தியே செரிமானத்துக்குத் துணைபுரிந்து, உடலில் அதிகப்படியான கொழுப்பு சேராமல் உடலை சுறுசுறுப்பாகவும் லேசாகவும் வைத்திருக்க உதவுகிறது.
விரிப்பில் சப்பளாங்கால் இட்டு அமர்ந்து 10 நிமிடங்கள் வரை செய்தால் போதும். தினமும் இருவேளை, வெறும் வயிற்றில் செய்வது சிறந்த பலனைத் தரும்.
முத்திரையைச் செய்யும் முன், அருகில் ஒரு டம்ளரில் தண்ணீரை எடுத்துவைத்த பின் முத்திரை செய்யலாம். முத்திரை செய்து முடித்த உடனே தண்ணீரைக் கட்டாயம் குடிக்க வேண்டும்.
அதிக உடல் எடையுடன் இருப்பவர், முத்திரை செய்யும்போது, கை, கால், தொடைகளில் வலி ஏற்படலாம். தொடர்ந்து செய்யச் செய்ய, படிப்படியாக வலி குறைந்துவிடும். வலி இருக்கும்போது, தண்ணீர் அருந்துவது முக்கியம்.

உச்சி வெயில் நேரம், வெயிலில் பயணம் செய்யும் சமயங்களில், இந்த முத்திரையைத் தவிர்க்கவும். கோடையில் தினமும் ஒரு முறை செய்தால் போதும்.
செய்முறை :
மோதிர விரலை மடக்கி, உள்ளங்கையின் நடுவில் தொட வேண்டும். கட்டை விரலால் மோதிர விரலை மிதமாக அழுத்த வேண்டும். மற்ற மூன்று விரல்கள் நீட்டி இருக்க வேண்டும்.
பலன்கள் :
உடலின் வெப்ப நிலையை அதிகரித்து, பசியைத் தூண்டும். செரிமானத்துக்கு உதவும். எப்போதும் உடலை லேசாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்திருக்க உதவும்.
உடலில் அதிகக் கொழுப்புச்சத்து உடையவர்களுக்கு முத்திரையைச் செய்யத் தொடங்கிய ஒரு மாதத்தில், கெட்ட கொழுப்பு குறையத் தொடங்கும்.
ரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பு, கொழுப்புச் சேருதல் (Atherosclerosis) ஆகியவற்றைச் சரிசெய்து, சீரான ரத்த ஓட்டத்துக்கு வழிவகுக்கும்.
இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் வயிற்று தசைகள் பலப்படும். கல்லீரல் நன்கு வேலை செய்யும். இப்போது இந்த ஆசனத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
செய்முறை:
விரிப்பில் கால்களை முன்புறம் நீட்டி அமர வேண்டும். படத்தில் காட்டியவாறு முழங்கால்களை மடக்கி, கால் விரல்களை கைகளால் பிடிக்க வேண்டும்
பார்வையை முன்புறம் ஒரே இடத்தில் பதிக்க வேண்டும். பயிற்சி முடியும் வரை பார்வையை திருப்பக் கூடாது.
மெதுவாக மூச்சை இழுத்துக் கொண்டே, கால்களை உடம்பிற்கு முன்னே உயர்த்தி, பின் மூச்சை வெளிவிட்டுக் கொண்டே, முடிந்தவரை இரண்டு கால்களையும் நன்றாக விரிக்க வேண்டும். கை, கால்களை மடக்கக் கூடாது. சிறிது நேரம் ஆழ்ந்த சுவாசத்திற்கு பின், சாதாரண நிலைக்கு வர வேண்டும்

பயன்கள் :
வயிற்று தசைகள் பலப்படும். கல்லீரல் நன்கு வேலை செய்யும்.
குடல் அசைவுகள், நன்கு ஊக்குவிக்கப்பட்டு மலச்சிக்கல் சரியாகும். குடல் புழுக்கள் நீங்கும்.
மனம் ஒரு நிலையாகி, தியானம் எளிமையாகும்.
குறிப்பு:
இந்த ஆசனப் பயிற்சியின் போது பின்னால் விழ வாய்ப்புள்ளது. எனவே சுவரின் முன் இந்த ஆசனத்தை செய்ய வேண்டாம். முதுகெலும்பு சிப்பி விலகல், உயர் ரத்த அழுத்தம் உள்ளோர் தவிர்க்க வேண்டிய ஆசனம் இது.
விரிப்பில் கால்களை முன்புறம் நீட்டி அமர வேண்டும். படத்தில் காட்டியவாறு முழங்கால்களை மடக்கி, கால் விரல்களை கைகளால் பிடிக்க வேண்டும்
பார்வையை முன்புறம் ஒரே இடத்தில் பதிக்க வேண்டும். பயிற்சி முடியும் வரை பார்வையை திருப்பக் கூடாது.
மெதுவாக மூச்சை இழுத்துக் கொண்டே, கால்களை உடம்பிற்கு முன்னே உயர்த்தி, பின் மூச்சை வெளிவிட்டுக் கொண்டே, முடிந்தவரை இரண்டு கால்களையும் நன்றாக விரிக்க வேண்டும். கை, கால்களை மடக்கக் கூடாது. சிறிது நேரம் ஆழ்ந்த சுவாசத்திற்கு பின், சாதாரண நிலைக்கு வர வேண்டும்

பயன்கள் :
வயிற்று தசைகள் பலப்படும். கல்லீரல் நன்கு வேலை செய்யும்.
குடல் அசைவுகள், நன்கு ஊக்குவிக்கப்பட்டு மலச்சிக்கல் சரியாகும். குடல் புழுக்கள் நீங்கும்.
மனம் ஒரு நிலையாகி, தியானம் எளிமையாகும்.
குறிப்பு:
இந்த ஆசனப் பயிற்சியின் போது பின்னால் விழ வாய்ப்புள்ளது. எனவே சுவரின் முன் இந்த ஆசனத்தை செய்ய வேண்டாம். முதுகெலும்பு சிப்பி விலகல், உயர் ரத்த அழுத்தம் உள்ளோர் தவிர்க்க வேண்டிய ஆசனம் இது.
இந்தப் பயிற்சியை தொடர்ந்து செய்வதன் மூலம் தொடைப் பகுதி நன்றாக வலுப்படும். இந்த பயிற்சியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
பயிற்சிகளின் அரசன் என்று புகழப்படும் பயிற்சி இது. இந்தப் பயிற்சிக்கு, பார்பெல் (Barbell)என்ற எடை தூக்கும் கருவி தேவை. பார்பெல் பிடியை பின்தோள்பட்டையில் தாங்கிப் பிடிக்க வேண்டும்.
கழுத்தில் தாங்கக்கூடாது. கால்கள் தோள்பட்டை அளவுக்குச் சற்று விரிந்தநிலையில் வைக்க வேண்டும். மூச்சை ஆழமாக உள்இழுத்து கீழே உட்காருவது போன்ற நிலைக்குக் கால்முட்டியை மடக்கிச் செல்ல வேண்டும்.
சில விநாடிகளுக்குப் பிறகு மூச்சை வெளியேவிட்டபடி பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். இந்தப் பயிற்சியைச் செய்வதால், முழு உடலுக்கும் வலு கூடுகிறது. கொழுப்பைக் குறைத்து தொடை, பின்புறம் மற்றும் வயிற்றுப் பகுதிகளை உறுதியாக்குகிறது.
தொடை வலுவாக இருந்தால்தான் உடலைத் தாங்கிப்பிடிக்க முடியும். இந்தப் பயிற்சி செய்வதன் மூலம் தொடைப் பகுதி நன்றாக வலுப்படும்.
கழுத்தில் தாங்கக்கூடாது. கால்கள் தோள்பட்டை அளவுக்குச் சற்று விரிந்தநிலையில் வைக்க வேண்டும். மூச்சை ஆழமாக உள்இழுத்து கீழே உட்காருவது போன்ற நிலைக்குக் கால்முட்டியை மடக்கிச் செல்ல வேண்டும்.
சில விநாடிகளுக்குப் பிறகு மூச்சை வெளியேவிட்டபடி பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். இந்தப் பயிற்சியைச் செய்வதால், முழு உடலுக்கும் வலு கூடுகிறது. கொழுப்பைக் குறைத்து தொடை, பின்புறம் மற்றும் வயிற்றுப் பகுதிகளை உறுதியாக்குகிறது.
தொடை வலுவாக இருந்தால்தான் உடலைத் தாங்கிப்பிடிக்க முடியும். இந்தப் பயிற்சி செய்வதன் மூலம் தொடைப் பகுதி நன்றாக வலுப்படும்.






