என் மலர்
உடற்பயிற்சி
பசுவின் முகத்தைப் போன்று தோற்றம் அளிப்பதால், இந்த ஆசனம் இந்த பெயர் பெற்றது. இந்து ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் இரத்த அழுத்தம் சீராகும்.
செய்முறை :
விரிப்பில் கால்களை முன்னே நீட்டியபடி உட்காரவும். இடது கையால் வலது காலைப் பிடித்து, இடது காலின் தொடைக்கு மேலே கொண்டு வந்து, பின் தொடைக்கு அருகே தரையில் வைக்கவும்.
பின் இடது காலை மடக்கி, வலது தொடைக்கு கீழ் வைக்கவும். இரு குதிகால்களும் பிட்டப் பகுதியை அணைத்தவாறு அல்லது வெகு அருகில் இருக்க வேண்டும். இரு கால்களின் மூட்டுகளும் ஒன்றன்மேல் ஒன்றாக நன்றாக இணைந்திருக்க வேண்டும்
மூச்சை இழுத்துக் கொண்டே வலது கையை மேலே உயர்த்தி, முதுகுக்குப் பின்னே கொண்டு செல்ல வேண்டும். மூச்சை வெளியே விட வேண்டும்
மீண்டும் மூச்சை இழுத்துக் கொண்டு, இடது கையை அடி முதுகின் வழியாக, உடம்பிற்கு பின்னே கொண்டு செல்லவும். இரு கைகளும் பிணைந்திருக்க வேண்டும். முதுகு நேராக இருக்க வேண்டும்.

கண்களை மூடிய நிலையில், ஆழமாக மூச்சை இழுத்து விட்டு, சுவாசத்தை கவனிக்கவும். பின் கைகளை விலக்கி, சாதாரண நிலைக்கு வந்து, கால், கைகளை மாற்றிச் செய்யவும். இவ்வாறு நான்கு முறை செய்யலாம்.
இந்த ஆசனத்தில் வலது கால் மேலே இருக்கும்போது, வலது கையும், இடது கால் மேலே இருக்கும்போது, இடது கையும் மேலே இருக்க வேண்டும்.
பலன்கள்:
உடல், மனதிற்கு அமைதியைக் கொடுக்கும் அற்புத ஆசனம்.
மூலாதாரச் சக்கரம் நன்கு தூண்டப்படும். சிறுநீரகங்கள் நன்கு வேலை செய்யும். முதுகு, இடுப்புக் கூடு, நரம்பு வாதம், கீல் வாதத்திற்கு நல்ல தீர்வு.
கழுத்து தோலின் இறுக்கம் நீங்கும். கர்ப்பப்பை நன்கு இயங்கும். ரத்த அழுத்தம் சீராகும்.
விரிப்பில் கால்களை முன்னே நீட்டியபடி உட்காரவும். இடது கையால் வலது காலைப் பிடித்து, இடது காலின் தொடைக்கு மேலே கொண்டு வந்து, பின் தொடைக்கு அருகே தரையில் வைக்கவும்.
பின் இடது காலை மடக்கி, வலது தொடைக்கு கீழ் வைக்கவும். இரு குதிகால்களும் பிட்டப் பகுதியை அணைத்தவாறு அல்லது வெகு அருகில் இருக்க வேண்டும். இரு கால்களின் மூட்டுகளும் ஒன்றன்மேல் ஒன்றாக நன்றாக இணைந்திருக்க வேண்டும்
மூச்சை இழுத்துக் கொண்டே வலது கையை மேலே உயர்த்தி, முதுகுக்குப் பின்னே கொண்டு செல்ல வேண்டும். மூச்சை வெளியே விட வேண்டும்
மீண்டும் மூச்சை இழுத்துக் கொண்டு, இடது கையை அடி முதுகின் வழியாக, உடம்பிற்கு பின்னே கொண்டு செல்லவும். இரு கைகளும் பிணைந்திருக்க வேண்டும். முதுகு நேராக இருக்க வேண்டும்.

கண்களை மூடிய நிலையில், ஆழமாக மூச்சை இழுத்து விட்டு, சுவாசத்தை கவனிக்கவும். பின் கைகளை விலக்கி, சாதாரண நிலைக்கு வந்து, கால், கைகளை மாற்றிச் செய்யவும். இவ்வாறு நான்கு முறை செய்யலாம்.
இந்த ஆசனத்தில் வலது கால் மேலே இருக்கும்போது, வலது கையும், இடது கால் மேலே இருக்கும்போது, இடது கையும் மேலே இருக்க வேண்டும்.
பலன்கள்:
உடல், மனதிற்கு அமைதியைக் கொடுக்கும் அற்புத ஆசனம்.
மூலாதாரச் சக்கரம் நன்கு தூண்டப்படும். சிறுநீரகங்கள் நன்கு வேலை செய்யும். முதுகு, இடுப்புக் கூடு, நரம்பு வாதம், கீல் வாதத்திற்கு நல்ல தீர்வு.
கழுத்து தோலின் இறுக்கம் நீங்கும். கர்ப்பப்பை நன்கு இயங்கும். ரத்த அழுத்தம் சீராகும்.
சாதாரண நடைபயிற்சியைக் காட்டிலும், அதிக நன்மைகளை அள்ளித் தருகிறது இந்த (Pebble path) கூழாங்கல் நடைபாதை. இது குறித்த செய்தியை பார்க்கலாம்.
சாதாரண நடைபயிற்சியைக் காட்டிலும், அதிக நன்மைகளை அள்ளித் தருகிறது இந்த (Pebble path) கூழாங்கல் நடைபாதை. கூழாங்கற்களின் மேல் நடப்பதால், என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.. “நம் உடலில் நரம்புகள் முடிவடைவது உள்ளங்கைகளிலும் உள்ளங்கால்களிலும்தான்.
அதன் காரணமாகவே கை தட்டுவதைக்கூட அழுத்தமாகத் தட்ட வேண்டும் என்று சொல்வோம். செருப்பு இல்லாமல் வெறும் காலில் நடக்கும்போது, கால்களில் இருக்கும் புள்ளிகள் தூண்டப்பட்டு உடலுக்கும் மனதுக்கும் நன்மை கிடக்கிறது. கூழாங்கல் உருண்டையாக, வழவழப்பாக இருப்பதால் உள்ளங்கையிலும், உள்ளங்காலிலும் பட்டதும், ஒரு இடத்தில்கூட நிற்காமல், அனைத்துப் பகுதிகளையும் தொட்டுக்கொண்டு உருண்டோடிவிடும்.

இதனால் கைகளுக்கும் கால்களுக்கும் அழுத்தம் சமமாகக் கிடைக்கிறது. வழுவழுப்பாக இருப்பதால் பாதத்தைப் பாதிக்காது. கூழாங்கல்லில் நடப்பது உடலுக்குப் பயிற்சி மட்டும் அல்ல, ஆரோக்கியத்தையும் தருகிறது. காலில் உள்ள நரம்புப் புள்ளிகள் மூலம் சிறுநீரகம், நுரையீரல், கல்லீரல், முதுகெலும்பு, கண், காது உள்ளிட்ட அனைத்து உறுப்புகளும் தூண்டப்படுகின்றன.
இதனால் அந்த உறுப்பின் செயல்பாடும் சீராகி உடல் ஆரோக்கியம் பெறும். கூழாங்கல் மூலம் பெறப்படும் அழுத்தத்தைப் போன்றதுதான், கைகளால் உள்ளங்காலுக்கு அழுத்தம் தரப்படும், ஃ புட் ரெப்லக்சாலஜி. (Foot Reflexology) கூழாங்கல் பாதையில் நடக்கும்போது, செருப்பு இல்லாமல் வெறும் காலோடு நடக்க வேண்டும்.
முதன்முதலில் நடக்கும்போது சற்று கடினமானதாக இருந்தாலும், பின்னர் பழகிவிடும். முதலில் மெதுவாக நடக்க வேண்டும். ஒரு வாரத்தில் கொஞ்சம் கொஞ்சமாக வேகத்தை அதிகரிக்க வேண்டும். கூழாங்கல் பாதையில் ஒரு நாளைக்கு 15 முதல் 20 நிமிடங்கள் வரை நடந்தால் போதும்.
அதன் காரணமாகவே கை தட்டுவதைக்கூட அழுத்தமாகத் தட்ட வேண்டும் என்று சொல்வோம். செருப்பு இல்லாமல் வெறும் காலில் நடக்கும்போது, கால்களில் இருக்கும் புள்ளிகள் தூண்டப்பட்டு உடலுக்கும் மனதுக்கும் நன்மை கிடக்கிறது. கூழாங்கல் உருண்டையாக, வழவழப்பாக இருப்பதால் உள்ளங்கையிலும், உள்ளங்காலிலும் பட்டதும், ஒரு இடத்தில்கூட நிற்காமல், அனைத்துப் பகுதிகளையும் தொட்டுக்கொண்டு உருண்டோடிவிடும்.

இதனால் கைகளுக்கும் கால்களுக்கும் அழுத்தம் சமமாகக் கிடைக்கிறது. வழுவழுப்பாக இருப்பதால் பாதத்தைப் பாதிக்காது. கூழாங்கல்லில் நடப்பது உடலுக்குப் பயிற்சி மட்டும் அல்ல, ஆரோக்கியத்தையும் தருகிறது. காலில் உள்ள நரம்புப் புள்ளிகள் மூலம் சிறுநீரகம், நுரையீரல், கல்லீரல், முதுகெலும்பு, கண், காது உள்ளிட்ட அனைத்து உறுப்புகளும் தூண்டப்படுகின்றன.
இதனால் அந்த உறுப்பின் செயல்பாடும் சீராகி உடல் ஆரோக்கியம் பெறும். கூழாங்கல் மூலம் பெறப்படும் அழுத்தத்தைப் போன்றதுதான், கைகளால் உள்ளங்காலுக்கு அழுத்தம் தரப்படும், ஃ புட் ரெப்லக்சாலஜி. (Foot Reflexology) கூழாங்கல் பாதையில் நடக்கும்போது, செருப்பு இல்லாமல் வெறும் காலோடு நடக்க வேண்டும்.
முதன்முதலில் நடக்கும்போது சற்று கடினமானதாக இருந்தாலும், பின்னர் பழகிவிடும். முதலில் மெதுவாக நடக்க வேண்டும். ஒரு வாரத்தில் கொஞ்சம் கொஞ்சமாக வேகத்தை அதிகரிக்க வேண்டும். கூழாங்கல் பாதையில் ஒரு நாளைக்கு 15 முதல் 20 நிமிடங்கள் வரை நடந்தால் போதும்.
தினமும் 100 கலோரிகளை எரிப்பதன் மூலம் எந்த உணவுக் கட்டுப்பாடும் இன்றி ஓராண்டில் தோராயமாக ஐந்து கிலோ வரை எடையைக் குறைக்கலாம்.
உடல் ஆரோக்கியத்திற்காக வாக்கிங் செய்பவர்களை விட, உடல் எடை குறைய வேண்டும் என்று வாக்கிங் செய்பவர்கள்தான் அதிகம். உடல் எடை குறைந்து, பார்க்க ஃபிட்டாக இருக்க வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் உள்ளது.
இதற்காக ஆயிரக்கணக்கில், ஏன் லட்சக்கணக்கில் செலவு செய்து விலை உயர்ந்த ஃபிட்னெஸ் கருவிகள் வாங்குதல், டயட்டில் இருத்தல் போன்ற முயற்சிகளில் ஈடுபடுபவர்கள் பலர். நீண்ட நேரம் உட்கார்ந்தே வேலை பார்ப்பவராக இருந்தால், ஒவ்வொரு இரண்டு மணி நேரத்துக்கும் ஐந்து நிமிடங்கள் இடைவெளி எடுத்துக்கொள்ளுங்கள்.
இந்த ஐந்து நிமிடத்துக்கு சின்னதாக உங்கள் இடத்தைச் சுற்றி நடந்து வாருங்கள். இப்படிச் செய்வதன் மூலம் ஒரு நாளைக்கு 20 நிமிடம் வாக்கிங் சென்றதன் பலனை நீங்கள் பெறலாம். தினமும் 100 கலோரிகளை எரிப்பதன் மூலம் எந்த உணவுக் கட்டுப்பாடும் இன்றி ஓராண்டில் தோராயமாக ஐந்து கிலோ வரை எடையைக் குறைக்கலாம். அதற்கு…

* 20 நிமிடத்தில் 1 மைல் தூரத்துக்கு நடைபோடுங்கள்.
* 20 நிமிடத்துக்கு தோட்டத்தில் புல் வெட்டுதல் அல்லது செடி நடும் வேலை செய்யுங்கள்.
* 30 நிமிடத்துக்கு வீட்டை சுத்தம் செய்யுங்கள்.
* 10 நிமிடத்துக்கு ஓட்டப் பயிற்சி செய்யுங்கள்.
* 9 நிமிடத்துக்கு ஸ்கிப்பிங் செய்யுங்கள்.
* 20 நிமிடத்துக்கு நன்கு குனிந்து தரையைத் துடையுங்கள்.
இதற்காக ஆயிரக்கணக்கில், ஏன் லட்சக்கணக்கில் செலவு செய்து விலை உயர்ந்த ஃபிட்னெஸ் கருவிகள் வாங்குதல், டயட்டில் இருத்தல் போன்ற முயற்சிகளில் ஈடுபடுபவர்கள் பலர். நீண்ட நேரம் உட்கார்ந்தே வேலை பார்ப்பவராக இருந்தால், ஒவ்வொரு இரண்டு மணி நேரத்துக்கும் ஐந்து நிமிடங்கள் இடைவெளி எடுத்துக்கொள்ளுங்கள்.
இந்த ஐந்து நிமிடத்துக்கு சின்னதாக உங்கள் இடத்தைச் சுற்றி நடந்து வாருங்கள். இப்படிச் செய்வதன் மூலம் ஒரு நாளைக்கு 20 நிமிடம் வாக்கிங் சென்றதன் பலனை நீங்கள் பெறலாம். தினமும் 100 கலோரிகளை எரிப்பதன் மூலம் எந்த உணவுக் கட்டுப்பாடும் இன்றி ஓராண்டில் தோராயமாக ஐந்து கிலோ வரை எடையைக் குறைக்கலாம். அதற்கு…

* 20 நிமிடத்தில் 1 மைல் தூரத்துக்கு நடைபோடுங்கள்.
* 20 நிமிடத்துக்கு தோட்டத்தில் புல் வெட்டுதல் அல்லது செடி நடும் வேலை செய்யுங்கள்.
* 30 நிமிடத்துக்கு வீட்டை சுத்தம் செய்யுங்கள்.
* 10 நிமிடத்துக்கு ஓட்டப் பயிற்சி செய்யுங்கள்.
* 9 நிமிடத்துக்கு ஸ்கிப்பிங் செய்யுங்கள்.
* 20 நிமிடத்துக்கு நன்கு குனிந்து தரையைத் துடையுங்கள்.
இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் கைகள், தோள்பட்டை, மணிக்கட்டு மற்றும் அடிவயிற்று தசைகள் பலமடையும். இந்த ஆசனம் செய்முறையை பார்க்கலாம்.
உத்தித என்றால், உயர்த்துதல் அல்லது துாக்குதல் என்று பொருள். பத்மாசன நிலையில் உடலை உயர்த்துவதால் இப்பெயர் பெற்றது.
செய்முறை :
விரிப்பில் பத்மாசனத்தில் அமர வேண்டும். உள்ளங்கைகளை இரண்டு தொடைப்பகுதிக்கு பக்கத்தில் ஒட்டியவாறு கீழே வைக்க வேண்டும். இப்போது மூச்சை இழுத்துக் கொண்டே, புட்டப்பகுதியை முழங்கை வரை உயர்த்த முயற்சி செய்ய வேண்டும்.
இந்நிலையில் முதுகுத்தண்டு நேராக இருக்க வேண்டும். சிறிது நேர ஆழ்ந்த சுவாசத்திற்கு பின், ஆசனத்தை விலக்கி சாதாரண நிலைக்கு வந்து, பின் கால்களை மாற்றி செய்ய வேண்டும்.
நான்கு முறை செய்யலாம். ஒவ்வொரு முறையும், 30 வினாடி முதல், 45 வினாடிகள் வரை செய்ய முயற்சி செய்ய வேண்டும்.

குறிப்பு: வலுவிழந்த மணிக்கட்டு உடையவர்கள் தவிர்க்க வேண்டும்.
பயன்கள் :
1. தோள்பட்டை, மணிக்கட்டு மற்றும் அடிவயிற்று தசைகள் பலமடைகின்றன.
2. ஜீரண சக்தி நன்கு கிடைக்கிறது.
3. குடல் இறக்கம், வாயுத் தொல்லை தடுக்கப்படுகிறது.
4. உடல் எடை குறைகிறது.
5. கைகளுக்கு நன்கு பலம் கிடைக்கிறது.
செய்முறை :
விரிப்பில் பத்மாசனத்தில் அமர வேண்டும். உள்ளங்கைகளை இரண்டு தொடைப்பகுதிக்கு பக்கத்தில் ஒட்டியவாறு கீழே வைக்க வேண்டும். இப்போது மூச்சை இழுத்துக் கொண்டே, புட்டப்பகுதியை முழங்கை வரை உயர்த்த முயற்சி செய்ய வேண்டும்.
இந்நிலையில் முதுகுத்தண்டு நேராக இருக்க வேண்டும். சிறிது நேர ஆழ்ந்த சுவாசத்திற்கு பின், ஆசனத்தை விலக்கி சாதாரண நிலைக்கு வந்து, பின் கால்களை மாற்றி செய்ய வேண்டும்.
நான்கு முறை செய்யலாம். ஒவ்வொரு முறையும், 30 வினாடி முதல், 45 வினாடிகள் வரை செய்ய முயற்சி செய்ய வேண்டும்.

குறிப்பு: வலுவிழந்த மணிக்கட்டு உடையவர்கள் தவிர்க்க வேண்டும்.
பயன்கள் :
1. தோள்பட்டை, மணிக்கட்டு மற்றும் அடிவயிற்று தசைகள் பலமடைகின்றன.
2. ஜீரண சக்தி நன்கு கிடைக்கிறது.
3. குடல் இறக்கம், வாயுத் தொல்லை தடுக்கப்படுகிறது.
4. உடல் எடை குறைகிறது.
5. கைகளுக்கு நன்கு பலம் கிடைக்கிறது.
தோப்புக்கரணம் போடுவதால் உடலுக்கு நல்ல பயிற்சி கிடைக்கிறது. தோப்புக்கரணம் போடுவதால் குண்டலினி சக்தி கிடைக்கிறது. இதனால் உடல் சுறுசுறுப்பு அடைகிறது.
நமது முன்னோர்கள் ஒவ்வொரு விஷயத்திலும் நமக்கு பல்வேறு நன்மைகளை செய்து கொடுத்து இருக்கிறார்கள். முன்னோர்களின் செயல்பாடுகள், உணவு முறை பழக்க வழக்கம் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு அர்த்தம் உடையதாக இருந்தது. அவற்றில் மிக முக்கியமானது தோப்புக்கரணம். அந்த காலத்தில் சிறியவர்கள் தவறு செய்து விட்டால் உடனே கட்டையை எடுத்து அடிக்க மாட்டார்கள்.
தவறை திருத்த வேண்டும் என்ற நோக்கத்தில் என்ன தண்டனை கொடுப்பார்கள் தெரியுமா? வலது கையை வைத்து இடது காதையும் இடது கையை வைத்து வலது காதையும் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து எழுந்திருக்க செய்யும் தோப்புக்கரணத்தை தான் தண்டனையாக தருவார்கள். நான் போதும் என்று சொல்லும் வரை தோப்புக்கரணத்தை நிறுத்தக்கூடாது என்பார்கள்.
வீட்டில் மட்டுமல்ல பள்ளிகளிலும் நமது ஆசிரியர் பெருமக்கள் தோப்புக்கரணத்தை தான் மாணவர்களுக்கு தண்டனையாக தருவார்கள். இன்றைய பல பேருக்கு இந்த தோப்புக்கரணத்தை பள்ளியிலோ அல்லது வீட்டிலோ போட்ட ஞாபகம் இருக்கத்தான் செய்யும். ஆனால் இளைய தலைமுறையினர் பலர் தோப்புக்கரணம் தண்டனையை அனுபவித்து இருக்கமாட்டார்கள். விநாயகர் கோவில்களில் சாமி கும்பிடுபவர்கள் விநாயகருக்கு தோப்புக்கரணம் போட்டு வணங்குவது உண்டு.

தோப்புக்கரணம் போடுவதால் உடலுக்கு நல்ல பயிற்சி கிடைக்கிறது. தோப்புக்கரணம் போடுவதால் குண்டலினி சக்தி கிடைக்கிறது. இதனால் உடல் சுறுசுறுப்பு அடைகிறது.
இன்றைய கால கட்டத்தில் ஒவ்வொருவரும் பல்வேறு மன அழுத்தங்களுக்கு ஆளாகி உள்ளனர். எனவே ஒவ்வொருவரும் தினமும் காலையிலும் மாலையிலும் தோப்புக்கரணம் போடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் உடலிலும் உள்ளத்திலும் நல்ல மாற்றம் ஏற்படுவது தெரிய வரும். நாம் தொடங்கிய இந்த தோப்புக்கரணம் பழக்கத்தை இன்று அடியோடு மறந்து விட்டோம்.
ஆனால் வெளிநாடுகளில் சூப்பர் பிரெய்ன் யோகா என்ற பெயரில் தோப்புக்கரணம் அழைக்கப்படுகிறது.உடலுக்கும் உள்ளத்துக்கும் நல்ல மாற்றத்தை தரும் இந்த தோப்புக்கரணத்தை வெளிநாட்டு டாக்டர்கள் மருத்துவ சிகிச்சையாகவும் பயன்படுத்துகிறார்கள்.
எனவே நாம் ஒவ்வொருவரும் தினமும் காலையில் பத்து முறையாவது தோப்புக்கரணம்போடுவோம். மாணவ, மாணவிகள் கட்டாயம் தோப்புக்கரணம் போட்டால் அவர்களது மூளை சுறுசுறுப்பாகி படிப்பது மனதில் நன்கு பதியும். கல்வியில் கொடி கட்டி பறக்கலாம். மனதில் புதிய சிந்தனையும் பிறக்கும். எனவே இன்றே தோப்புக்கரணத்தை போட தயாராவோம்.
தவறை திருத்த வேண்டும் என்ற நோக்கத்தில் என்ன தண்டனை கொடுப்பார்கள் தெரியுமா? வலது கையை வைத்து இடது காதையும் இடது கையை வைத்து வலது காதையும் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து எழுந்திருக்க செய்யும் தோப்புக்கரணத்தை தான் தண்டனையாக தருவார்கள். நான் போதும் என்று சொல்லும் வரை தோப்புக்கரணத்தை நிறுத்தக்கூடாது என்பார்கள்.
வீட்டில் மட்டுமல்ல பள்ளிகளிலும் நமது ஆசிரியர் பெருமக்கள் தோப்புக்கரணத்தை தான் மாணவர்களுக்கு தண்டனையாக தருவார்கள். இன்றைய பல பேருக்கு இந்த தோப்புக்கரணத்தை பள்ளியிலோ அல்லது வீட்டிலோ போட்ட ஞாபகம் இருக்கத்தான் செய்யும். ஆனால் இளைய தலைமுறையினர் பலர் தோப்புக்கரணம் தண்டனையை அனுபவித்து இருக்கமாட்டார்கள். விநாயகர் கோவில்களில் சாமி கும்பிடுபவர்கள் விநாயகருக்கு தோப்புக்கரணம் போட்டு வணங்குவது உண்டு.

தோப்புக்கரணம் போடுவதால் உடலுக்கு நல்ல பயிற்சி கிடைக்கிறது. தோப்புக்கரணம் போடுவதால் குண்டலினி சக்தி கிடைக்கிறது. இதனால் உடல் சுறுசுறுப்பு அடைகிறது.
இன்றைய கால கட்டத்தில் ஒவ்வொருவரும் பல்வேறு மன அழுத்தங்களுக்கு ஆளாகி உள்ளனர். எனவே ஒவ்வொருவரும் தினமும் காலையிலும் மாலையிலும் தோப்புக்கரணம் போடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் உடலிலும் உள்ளத்திலும் நல்ல மாற்றம் ஏற்படுவது தெரிய வரும். நாம் தொடங்கிய இந்த தோப்புக்கரணம் பழக்கத்தை இன்று அடியோடு மறந்து விட்டோம்.
ஆனால் வெளிநாடுகளில் சூப்பர் பிரெய்ன் யோகா என்ற பெயரில் தோப்புக்கரணம் அழைக்கப்படுகிறது.உடலுக்கும் உள்ளத்துக்கும் நல்ல மாற்றத்தை தரும் இந்த தோப்புக்கரணத்தை வெளிநாட்டு டாக்டர்கள் மருத்துவ சிகிச்சையாகவும் பயன்படுத்துகிறார்கள்.
எனவே நாம் ஒவ்வொருவரும் தினமும் காலையில் பத்து முறையாவது தோப்புக்கரணம்போடுவோம். மாணவ, மாணவிகள் கட்டாயம் தோப்புக்கரணம் போட்டால் அவர்களது மூளை சுறுசுறுப்பாகி படிப்பது மனதில் நன்கு பதியும். கல்வியில் கொடி கட்டி பறக்கலாம். மனதில் புதிய சிந்தனையும் பிறக்கும். எனவே இன்றே தோப்புக்கரணத்தை போட தயாராவோம்.
இந்த ஆசனம் இடுப்பு பகுதியில் உள்ள அதிகளவு கொழுப்பை குறைத்து இடுப்பை வலுவடையச்செய்யும். இந்த ஆசனத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
செய்முறை :
விரிப்பில் நேராக நின்று, 3 அடி இடைவெளியில், இரண்டு கால்களையும் விலக்கி நிற்க வேண்டும். வலது காலை வலது பக்கம் திருப்ப வேண்டும். கைகளை பக்கவாட்டில் திருப்ப வேண்டும். இப்போது மெதுவாக மூச்சை இழுத்துக் கொண்டே, வலது காலை ‘எல்’ வடிவில் மடக்க வேண்டும்.
பின் மூச்சை வெளிவிட்டுக் கொண்டே வலது பக்கம் சாய்ந்து, வலது கையின் விரல்களை, வலது கால் விரல்களுக்கு இணையாக அருகில் வைக்க வேண்டும்.
பின் மூச்சை இழுத்துக் கொண்டே, இடது கை, இடது காதை அணைத்தவாறு, முழங்கையை மடக்காமல் இருக்க வேண்டும்.

இப்போது முகத்தை சற்று மேல் நோக்கி திருப்ப வேண்டும். இந்த நிலையில், ஆழ்ந்த சுவாசத்தில் சிறிது நேரம் இருந்து, பின் மூச்சை இழுத்துக் கொண்டே சாதாரண நிலைக்கு வர வேண்டும். அடுத்து இதேபோன்று, கால்களை மாற்றி செய்ய வேண்டும். கைகளை தரையில் வைத்து செய்ய முடியாதவர்கள், சற்று உயரத்திற்கு செங்கல் போன்று ஏதாவது வைத்து, அதன் மேல் கைகளை வைத்து செய்யலாம்.
பயன்கள் :
1. இடுப்பு சதை பகுதி குறையும்.
2. ஜீரண மண்டலம் நன்கு தூண்டப்பட்டு, கழிவுகள் முறையாக வெளியேற்றப்படும்.
3. சுவாச மண்டலம் நன்கு வேலை செய்யும்.
விரிப்பில் நேராக நின்று, 3 அடி இடைவெளியில், இரண்டு கால்களையும் விலக்கி நிற்க வேண்டும். வலது காலை வலது பக்கம் திருப்ப வேண்டும். கைகளை பக்கவாட்டில் திருப்ப வேண்டும். இப்போது மெதுவாக மூச்சை இழுத்துக் கொண்டே, வலது காலை ‘எல்’ வடிவில் மடக்க வேண்டும்.
பின் மூச்சை வெளிவிட்டுக் கொண்டே வலது பக்கம் சாய்ந்து, வலது கையின் விரல்களை, வலது கால் விரல்களுக்கு இணையாக அருகில் வைக்க வேண்டும்.
பின் மூச்சை இழுத்துக் கொண்டே, இடது கை, இடது காதை அணைத்தவாறு, முழங்கையை மடக்காமல் இருக்க வேண்டும்.

இப்போது முகத்தை சற்று மேல் நோக்கி திருப்ப வேண்டும். இந்த நிலையில், ஆழ்ந்த சுவாசத்தில் சிறிது நேரம் இருந்து, பின் மூச்சை இழுத்துக் கொண்டே சாதாரண நிலைக்கு வர வேண்டும். அடுத்து இதேபோன்று, கால்களை மாற்றி செய்ய வேண்டும். கைகளை தரையில் வைத்து செய்ய முடியாதவர்கள், சற்று உயரத்திற்கு செங்கல் போன்று ஏதாவது வைத்து, அதன் மேல் கைகளை வைத்து செய்யலாம்.
பயன்கள் :
1. இடுப்பு சதை பகுதி குறையும்.
2. ஜீரண மண்டலம் நன்கு தூண்டப்பட்டு, கழிவுகள் முறையாக வெளியேற்றப்படும்.
3. சுவாச மண்டலம் நன்கு வேலை செய்யும்.
இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் மூட்டுப்பகுதி நன்கு வலுவடையும். இப்போது இந்த ஆசனத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
செய்முறை :
விரிப்பில் நேராக நிற்க வேண்டும். பார்வையை ஒரு இடத்தில் பதித்து, இடது கையை மேலே உயர்த்தி, இடது கன்னத்தை ஒட்டியவாறு வைக்க வேண்டும். பின் வலது காலை பின்புறம் மடக்கி, வலது கையால் கெண்டைக் காலை பிடிக்க வேண்டும்.
பின் மூச்சை இழுத்துக் கொண்டே, வலது காலை பின்புறமாக மேலே உயர்த்தும் போது, இடது கையை கீழே இறக்கி, இடது தோள்பட்டைக்கு முன்புறம் நீட்ட வேண்டும். பின் இடது கையின் கட்டை விரல் நுனியும், ஆள் காட்டி விரல் நுனியும் சேர்ந்திருக்க வேண்டும்.
பின் சீரான சுவாசத்தில் சிறிது நேரம் இருந்து, மூச்சை வெளிவிட்டுக் கொண்டே காலை விலக்கி பின், இடது கையை விலக்கி சாதாரண நிலைக்கு வர வேண்டும். பிறகு காலை மாற்றி செய்ய வேண்டும். இரண்டு பக்கமும், இரண்டு முறை செய்யலாம்; ஒவ்வொரு முறையும், 20 முதல் 30 வினாடிகள் செய்யலாம்.

பயன்கள் :
1. மூட்டுப்பகுதி நன்கு வலுவடைகிறது
2. மனம் ஒரு நிலை அடைந்து தியான சக்தி தூண்டப்படுகிறது
3. ஜீரண சக்தி அதிகமாகிறது
4. ஜணன உறுப்புகள் நன்கு தூண்டப்பட்டு சரியாக இயங்குகிறது
5. நரம்பு சுருள் பிரச்சனை சரியாகிறது.
விரிப்பில் நேராக நிற்க வேண்டும். பார்வையை ஒரு இடத்தில் பதித்து, இடது கையை மேலே உயர்த்தி, இடது கன்னத்தை ஒட்டியவாறு வைக்க வேண்டும். பின் வலது காலை பின்புறம் மடக்கி, வலது கையால் கெண்டைக் காலை பிடிக்க வேண்டும்.
பின் மூச்சை இழுத்துக் கொண்டே, வலது காலை பின்புறமாக மேலே உயர்த்தும் போது, இடது கையை கீழே இறக்கி, இடது தோள்பட்டைக்கு முன்புறம் நீட்ட வேண்டும். பின் இடது கையின் கட்டை விரல் நுனியும், ஆள் காட்டி விரல் நுனியும் சேர்ந்திருக்க வேண்டும்.
பின் சீரான சுவாசத்தில் சிறிது நேரம் இருந்து, மூச்சை வெளிவிட்டுக் கொண்டே காலை விலக்கி பின், இடது கையை விலக்கி சாதாரண நிலைக்கு வர வேண்டும். பிறகு காலை மாற்றி செய்ய வேண்டும். இரண்டு பக்கமும், இரண்டு முறை செய்யலாம்; ஒவ்வொரு முறையும், 20 முதல் 30 வினாடிகள் செய்யலாம்.

பயன்கள் :
1. மூட்டுப்பகுதி நன்கு வலுவடைகிறது
2. மனம் ஒரு நிலை அடைந்து தியான சக்தி தூண்டப்படுகிறது
3. ஜீரண சக்தி அதிகமாகிறது
4. ஜணன உறுப்புகள் நன்கு தூண்டப்பட்டு சரியாக இயங்குகிறது
5. நரம்பு சுருள் பிரச்சனை சரியாகிறது.
ஆதி என்பது எல்லாவற்றுக்கும் முந்தையது, பழைமையானது. இந்த முத்திரை ஆரம்ப காலம் முதலே செய்யப்பட்டுவருவதால் ‘ஆதி முத்திரை’ என்று பெயர் பெற்றுள்ளது.
செய்முறை :
கட்டை விரலை மடக்கி, சுண்டு விரலின் மேட்டுப் பகுதியில் வைத்து அழுத்த வேண்டும். ஆட்காட்டி விரல், நடுவிரல், மோதிர விரல், சுண்டு விரலை மடக்கி, கட்டை விரலைச் சுற்றிப் பிடிக்க வேண்டும்.
விரிப்பின் மீது சப்பளங்கால் இட்டு, நேராக அமர்ந்தோ, நாற்காலியில் நேராக அமர்ந்து பாதம் தரையில் பதியும்படியோ இரு கைகளாலும் இந்த முத்திரையைப் பிடிக்க வேண்டும். தினமும், 20 முதல் 40 நிமிடங்கள் வரை செய்யலாம்.

பலன்கள் :
நுரையீரலின் மேல்பகுதிக்கு ஆக்சிஜன் செல்ல உதவுகிறது.
முறையற்ற சுவாசம் சரியாகும். அனைத்து சுவாசப் பிரச்சனைகளும் தீரும்.
தலை, கழுத்து, தோள்பட்டை, கைகள் மற்றும் விரல்களில் வரும் இறுக்கம் தளர்கிறது.
மூளை மற்றும் தொண்டைப் பகுதிக்கு ரத்த ஒட்டம் சீராகப் பாயும். நரம்புகளைப் பலப்படுத்தும்.
வயிற்றுக்கோளாறுகள், செரிமானப் பிரச்சனை, உணவு உண்ட பின் மலம் கழித்தல், அடிக்கடி மலம் கழித்தல் சரியாகும்.
தோல், நாக்கு, கண், மூக்கு, காது ஆகிய ஐந்து புலன்களுக்கும் இழந்த சக்தியை மீட்டுத் தரும்.
கட்டை விரலை மடக்கி, சுண்டு விரலின் மேட்டுப் பகுதியில் வைத்து அழுத்த வேண்டும். ஆட்காட்டி விரல், நடுவிரல், மோதிர விரல், சுண்டு விரலை மடக்கி, கட்டை விரலைச் சுற்றிப் பிடிக்க வேண்டும்.
விரிப்பின் மீது சப்பளங்கால் இட்டு, நேராக அமர்ந்தோ, நாற்காலியில் நேராக அமர்ந்து பாதம் தரையில் பதியும்படியோ இரு கைகளாலும் இந்த முத்திரையைப் பிடிக்க வேண்டும். தினமும், 20 முதல் 40 நிமிடங்கள் வரை செய்யலாம்.

பலன்கள் :
நுரையீரலின் மேல்பகுதிக்கு ஆக்சிஜன் செல்ல உதவுகிறது.
முறையற்ற சுவாசம் சரியாகும். அனைத்து சுவாசப் பிரச்சனைகளும் தீரும்.
தலை, கழுத்து, தோள்பட்டை, கைகள் மற்றும் விரல்களில் வரும் இறுக்கம் தளர்கிறது.
மூளை மற்றும் தொண்டைப் பகுதிக்கு ரத்த ஒட்டம் சீராகப் பாயும். நரம்புகளைப் பலப்படுத்தும்.
வயிற்றுக்கோளாறுகள், செரிமானப் பிரச்சனை, உணவு உண்ட பின் மலம் கழித்தல், அடிக்கடி மலம் கழித்தல் சரியாகும்.
தோல், நாக்கு, கண், மூக்கு, காது ஆகிய ஐந்து புலன்களுக்கும் இழந்த சக்தியை மீட்டுத் தரும்.
உடலை வளைத்து, நிமிர்த்திச் செய்யும் இரண்டு நிமிட ஆசனம் இது. இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் முதுகு வலி சரியாகும். அடிமுதுகுவலி, நடு முதுகுவலி குறையும்.
உடலை வளைத்து, நிமிர்த்திச் செய்யும் இரண்டு நிமிட ஆசனம் இது. உடலின் வளைவுத்தன்மையை மேம்படுத்தும்.
செய்முறை :
தரையில், மண்டியிட்டு, பாதத்தை ஆங்கில வி (V) போல விரித்து, பாதம்மேல் உட்கார வேண்டும். உடல் நேராக இருக்கட்டும். இது, வஜ்ராசன நிலை. இப்போது, கண்களை மூடியபடி, கைகளை மேலே உயர்த்தி, முன்புறம் வளைந்து, நெற்றி, கைகளைத் தரையில் பதிக்க வேண்டும். பின்னர், கண்களைத் திறந்து, கையைத் தரையில் ஊன்றி முட்டி, மற்றும் கைகளால் உடலைத் தாங்கும்படி இருக்க வேண்டும்.
இப்போது, இடுப்பை உயர்த்தி, பாதம் மற்றும் கைகளால் உடலைத் தாங்கும்படி, மலை வடிவில் நிற்க வேண்டும். பின்னர், ஒவ்வொரு படியாகக் கடந்து பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். இப்படி மூன்று முறை செய்ய வேண்டும். கை மணிக்கட்டில் அடிபட்டிருக்கும்போதும், தலைவலி இருக்கும்போதும் இந்த ஆசனத்தைச் செய்ய வேண்டாம்.

பலன்கள் :
மூளைக்கு ரத்த ஓட்டம் சீராகச் செல்வதால், மூளை சுறுசுறுப்பாக இயங்கும். மனஅழுத்தம், பயம், மனச்சோர்வு தீரும்.
தோள்பட்டை, புஜம், கால்கள் வலுப்பெறும்.
உடல் எடையைத் தூக்கி நிறுத்தும் ஆசனம் என்பதால், எலும்புகள் வலுப்பெறும். எலும்பு அடர்த்தி குறைதல் வராமல் தடுக்கும்.
முதுகு வலி சரியாகும். அடிமுதுகுவலி, நடு முதுகுவலி குறையும்.
இந்த ஆசனத்தில் உடல் முழுதும் செயல்படுவதால், உடலின் வளைவுத் தன்மை அதிகரிக்கும்.
ஆஸ்துமா, சைனஸ் பிரச்சனை இருப்பவர்கள் அவசியம் செய்ய வேண்டிய ஆசனம். நாட்பட்ட தலைவலி சரியாகும்.
செய்முறை :
தரையில், மண்டியிட்டு, பாதத்தை ஆங்கில வி (V) போல விரித்து, பாதம்மேல் உட்கார வேண்டும். உடல் நேராக இருக்கட்டும். இது, வஜ்ராசன நிலை. இப்போது, கண்களை மூடியபடி, கைகளை மேலே உயர்த்தி, முன்புறம் வளைந்து, நெற்றி, கைகளைத் தரையில் பதிக்க வேண்டும். பின்னர், கண்களைத் திறந்து, கையைத் தரையில் ஊன்றி முட்டி, மற்றும் கைகளால் உடலைத் தாங்கும்படி இருக்க வேண்டும்.
இப்போது, இடுப்பை உயர்த்தி, பாதம் மற்றும் கைகளால் உடலைத் தாங்கும்படி, மலை வடிவில் நிற்க வேண்டும். பின்னர், ஒவ்வொரு படியாகக் கடந்து பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். இப்படி மூன்று முறை செய்ய வேண்டும். கை மணிக்கட்டில் அடிபட்டிருக்கும்போதும், தலைவலி இருக்கும்போதும் இந்த ஆசனத்தைச் செய்ய வேண்டாம்.

பலன்கள் :
மூளைக்கு ரத்த ஓட்டம் சீராகச் செல்வதால், மூளை சுறுசுறுப்பாக இயங்கும். மனஅழுத்தம், பயம், மனச்சோர்வு தீரும்.
தோள்பட்டை, புஜம், கால்கள் வலுப்பெறும்.
உடல் எடையைத் தூக்கி நிறுத்தும் ஆசனம் என்பதால், எலும்புகள் வலுப்பெறும். எலும்பு அடர்த்தி குறைதல் வராமல் தடுக்கும்.
முதுகு வலி சரியாகும். அடிமுதுகுவலி, நடு முதுகுவலி குறையும்.
இந்த ஆசனத்தில் உடல் முழுதும் செயல்படுவதால், உடலின் வளைவுத் தன்மை அதிகரிக்கும்.
ஆஸ்துமா, சைனஸ் பிரச்சனை இருப்பவர்கள் அவசியம் செய்ய வேண்டிய ஆசனம். நாட்பட்ட தலைவலி சரியாகும்.
உஜாஸ் என்றால் விடியல் அல்லது புதிய தொடக்கம் என்று அர்த்தம். இந்த முத்திரை அடிவயிற்றில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் பிறப்பு உறுப்புகளுக்கும் சக்தி அளிக்கிறது.
உஜாஸ் என்றால் விடியல் அல்லது புதிய தொடக்கம் என்று அர்த்தம். பூமியின் ஒவ்வொரு நாளும் புதிதாய் விடிவது போல, உஜாஸ் முத்திரையும் நம்மைப் புதிதாக மலரச் செய்கிறது. ஒரு புதிய தொடக்கத்தைக் கொடுக்கிறது, உற்சாமான மனநிலையைப் பெருக்குகிறது என்பதால், இந்த முத்திரைக்கு ‘உஜாஸ் முத்திரை’ என்று பெயர்.
செய்முறை
விரிப்பில் சப்பணம் இட்டு அமர்ந்த வாறோ, கால்களைத் தரையில் நன்கு பதித்தபடி நாற்காலியில் அமர்ந்தோ செய்யலாம். கைகள் உடலைத் தொடக் கூடாது. தொப்புளுக்குக் கீழே அடிவயிற்றுப் பகுதியில் வைத்து, இரு கை விரல்களையும் கோத்துக் கொள்ள வேண்டும். தினமும் காலை, மாலை இரு வேளையும் 15-20 நிமிடங்கள் வரை செய்யலாம்.
பலன்கள்
* அடிவயிறு மற்றும் பிறப்பு உறுப்புகளுக்குச் சக்தி அளிக்கிறது. அடிவயிற்றில் உள்ள அனைத்து உறுப்புகளும் வலுப்பெறும்.
* கர்ப்பப்பை, சினைப்பை, முட்டை ஆகியவற்றின் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்துக்கும் உதவும்.
* ஆண்களின் வீரிய விருத்திக்கு உதவி செய்வதுடன், விந்தணுக்கள் உற்பத்திக்கும் உதவுகிறது.
* ஹார்மோன் குறைபாடுகளைச் சரிசெய்யும்.
செய்முறை
விரிப்பில் சப்பணம் இட்டு அமர்ந்த வாறோ, கால்களைத் தரையில் நன்கு பதித்தபடி நாற்காலியில் அமர்ந்தோ செய்யலாம். கைகள் உடலைத் தொடக் கூடாது. தொப்புளுக்குக் கீழே அடிவயிற்றுப் பகுதியில் வைத்து, இரு கை விரல்களையும் கோத்துக் கொள்ள வேண்டும். தினமும் காலை, மாலை இரு வேளையும் 15-20 நிமிடங்கள் வரை செய்யலாம்.
பலன்கள்
* அடிவயிறு மற்றும் பிறப்பு உறுப்புகளுக்குச் சக்தி அளிக்கிறது. அடிவயிற்றில் உள்ள அனைத்து உறுப்புகளும் வலுப்பெறும்.
* கர்ப்பப்பை, சினைப்பை, முட்டை ஆகியவற்றின் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்துக்கும் உதவும்.
* ஆண்களின் வீரிய விருத்திக்கு உதவி செய்வதுடன், விந்தணுக்கள் உற்பத்திக்கும் உதவுகிறது.
* ஹார்மோன் குறைபாடுகளைச் சரிசெய்யும்.
சுரபி முத்திரையின் மற்றொரு பெயர் `காமதேனு முத்திரை.’ இந்த முத்திரையை செய்வது எப்படி என்றும் இந்த முத்திரை செய்வதால் கிடைக்கும் பயன்களையும் பார்க்கலாம்.
சுரபி முத்திரையின் மற்றொரு பெயர் `காமதேனு முத்திரை.’ இதில் பஞ்ச பூதங்களும் மாறி மாறித் தூண்டப்படுவதால், காரணம் தெரியாத பல்வேறு நோய்கள் குணமாகின்றன. உடலில் உள்ள குணமாக்கும் சக்திகள் தூண்டப்படுகின்றன.
செய்முறை :
விரிப்பின் மீது சப்பணம் இட்டு அல்லது நாற்காலியில் அமர்ந்து கால்களைத் தரையில் ஊன்றிச் செய்ய வேண்டும். ஒரு நாளைக்கு இரண்டு முறை என ஒவ்வொரு முறையும் 10-20 நிமிடங்கள் வரை செய்யலாம்.
இரண்டு கைகளையும் ஒன்றோடு ஒன்று இணைப்பதுபோல வைக்கவும்.
நடு மற்றும் ஆள்காட்டி விரல் ஒரு குரூப், சுண்டுவிரல் மற்றும் மோதிர விரல் ஒரு குரூப். கட்டை விரல் தனி என பிரித்து கொள்ள வேண்டும்.
இடது கை ஆள்காட்டி விரல் நுனியால் வலது கை நடுவிரலைத் தொட வேண்டும். இடது கை நடு விரல் நுணியால் வலது கை ஆள்காட்டி விரலைத் தொட வேண்டும்.
இடது கை சுண்டு விரல் நுனியால் வலது கை மோதிர விரலைத் தொட வேண்டும். இடது கை மோதிர விரல் நுனியால் வலது கை சுண்டு விரலைத் தொட வேண்டும். கட்டை விரல்களை எதனுடனும் சேர்க்காமல், நெஞ்சைப் பார்த்தபடி நீட்ட வேண்டும்.
பலன்கள் :
* அதிகப்படியான உடல் வெப்பம் குறையும்.
* தைராய்டு, பிட்யூட்டரி, அட்ரினல் போன்ற நாளமில்லாச் சுரப்பிகள், நரம்பு முடிச்சுகள் தூண்டப்பட்டு அவற்றின் குறைபாடுகள் நீங்குகின்றன.
* ‘கௌட்’ எனப்படும் வாதநீர் தேக்கத்தையும், ரூமேட்டிசம் (Rheumatism) எனப்படும் மூட்டு நோய்த் தாக்கத்தையும் குறைக்கும்.
* செரிமானச் செயல்பாட்டைச் சீரமைத்து, நெஞ்செரிச்சல் மற்றும் வயிற்றுப் புண்கள் குணமடைய உதவுகிறது.
செய்முறை :
விரிப்பின் மீது சப்பணம் இட்டு அல்லது நாற்காலியில் அமர்ந்து கால்களைத் தரையில் ஊன்றிச் செய்ய வேண்டும். ஒரு நாளைக்கு இரண்டு முறை என ஒவ்வொரு முறையும் 10-20 நிமிடங்கள் வரை செய்யலாம்.
இரண்டு கைகளையும் ஒன்றோடு ஒன்று இணைப்பதுபோல வைக்கவும்.
நடு மற்றும் ஆள்காட்டி விரல் ஒரு குரூப், சுண்டுவிரல் மற்றும் மோதிர விரல் ஒரு குரூப். கட்டை விரல் தனி என பிரித்து கொள்ள வேண்டும்.
இடது கை ஆள்காட்டி விரல் நுனியால் வலது கை நடுவிரலைத் தொட வேண்டும். இடது கை நடு விரல் நுணியால் வலது கை ஆள்காட்டி விரலைத் தொட வேண்டும்.
இடது கை சுண்டு விரல் நுனியால் வலது கை மோதிர விரலைத் தொட வேண்டும். இடது கை மோதிர விரல் நுனியால் வலது கை சுண்டு விரலைத் தொட வேண்டும். கட்டை விரல்களை எதனுடனும் சேர்க்காமல், நெஞ்சைப் பார்த்தபடி நீட்ட வேண்டும்.
பலன்கள் :
* அதிகப்படியான உடல் வெப்பம் குறையும்.
* தைராய்டு, பிட்யூட்டரி, அட்ரினல் போன்ற நாளமில்லாச் சுரப்பிகள், நரம்பு முடிச்சுகள் தூண்டப்பட்டு அவற்றின் குறைபாடுகள் நீங்குகின்றன.
* ‘கௌட்’ எனப்படும் வாதநீர் தேக்கத்தையும், ரூமேட்டிசம் (Rheumatism) எனப்படும் மூட்டு நோய்த் தாக்கத்தையும் குறைக்கும்.
* செரிமானச் செயல்பாட்டைச் சீரமைத்து, நெஞ்செரிச்சல் மற்றும் வயிற்றுப் புண்கள் குணமடைய உதவுகிறது.
நீங்கள் எந்த வயதைச் சேர்ந்தவராக இருந்தாலும், ஆரோக்கியமாகவும் மற்றும் மன அழுத்தத்தை எதிர்கொள்ளவும் தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய வேண்டியது அவசியமாகும்.
நீங்கள் எந்த வயதைச் சேர்ந்தவராக இருந்தாலும், ஆரோக்கியமாகவும் மற்றும் மன அழுத்தத்தை எதிர்கொள்ளவும் தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய வேண்டியது அவசியமாகும். ஆனால், நம்மில் பலருக்கும் போதுமான அளவு ஜிம்முக்கு சென்று தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதற்கான நேரமோ, சக்தியோ அல்லது வசதியோ இருப்பதில்லை.
இங்கு வீட்டிலேயே செய்யக் கூடிய தசைகளை வலிமையாக்கும் பயிற்சிகள் கொடுக்கப்பட்டுள்ளது. இவை ஒரு நிலையான நாற்காலி, பயிற்சிக்கான பாண்ட் கயிறு (Band) மற்றும் சுவர் ஆகியவற்றைக் கொண்டு மட்டும் எல்லா வயதைச் சேர்ந்த நபர்களும் வீட்டிலேயே செய்யக் கூடிய தசைகளை வலிமையாக்கும் பயிற்சிகளாகும்.
பைசெப்ஸ் கர்ல் (Biceps Curl rope exercises) நாற்காலியில் அமர்ந்து, உங்கள் தொடைகள் இரண்டும் இணையாக இருக்குமாறு வைத்து பாதத்தை தரையில் வையுங்கள். இரண்டு பாதங்களுக்கும் அடியில் பாண்டை வைத்து விட்டு, அதன் முனைகளை இழுத்து பிடிக்கவும். இப்பொழுது உங்கள் கைகளை தோளை நோக்கி இழுக்கவும், அப்போது முழங்கால்களை சமநிலையில் வைத்திருக்க வேண்டும்.

மெதுவாக கைகளை தொடைப்பகுதியின் மேலே படுமாறு, கீழே கொண்டு வந்து, பக்கவாட்டில் முழங்கைகளை வைக்கவும். இந்த பயற்சியின் போது பாண்ட்டிற்கு பதிலாக கைகளால் தூக்கக் கூடிய எடையுள்ள பொருட்களையோ அல்லது கேன்களில் அடைக்கப்பட்ட பொருட்களையோ பயன்படுத்தலாம்.
சீட்டட் ரோ (Seated Row rope exercises) நாற்காலியின் விளிம்பில் நேரமாக அமரவும். முழங்கால்களை மடங்கியிருக்குமாறும், பாதங்கள் தரையில் சற்றே அகலமாக இருக்குமாறும் உங்களுக்கு முன் வையுங்கள். பயிற்சிக்கான பாண்டை உங்கள் பாதத்தை குறுக்கு நெடுக்காக சுற்றிக்கொண்டு இரண்டு கைகளாலும் பிடித்துக் கொள்ளுங்கள். இப்பொழுது உங்கள் கைகள் இரண்டையும் துடுப்பு போடுவது போல வளைத்து இழுக்கவும். இந்த செயலின் போது தோள்பட்டைகள் இரண்டிற்கும் அழுத்தம் தருவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். மெதுவாக கைகள் இரண்டையும் துவக்க நிலைக்கு கொண்டு வரவும்.
இங்கு வீட்டிலேயே செய்யக் கூடிய தசைகளை வலிமையாக்கும் பயிற்சிகள் கொடுக்கப்பட்டுள்ளது. இவை ஒரு நிலையான நாற்காலி, பயிற்சிக்கான பாண்ட் கயிறு (Band) மற்றும் சுவர் ஆகியவற்றைக் கொண்டு மட்டும் எல்லா வயதைச் சேர்ந்த நபர்களும் வீட்டிலேயே செய்யக் கூடிய தசைகளை வலிமையாக்கும் பயிற்சிகளாகும்.
பைசெப்ஸ் கர்ல் (Biceps Curl rope exercises) நாற்காலியில் அமர்ந்து, உங்கள் தொடைகள் இரண்டும் இணையாக இருக்குமாறு வைத்து பாதத்தை தரையில் வையுங்கள். இரண்டு பாதங்களுக்கும் அடியில் பாண்டை வைத்து விட்டு, அதன் முனைகளை இழுத்து பிடிக்கவும். இப்பொழுது உங்கள் கைகளை தோளை நோக்கி இழுக்கவும், அப்போது முழங்கால்களை சமநிலையில் வைத்திருக்க வேண்டும்.

மெதுவாக கைகளை தொடைப்பகுதியின் மேலே படுமாறு, கீழே கொண்டு வந்து, பக்கவாட்டில் முழங்கைகளை வைக்கவும். இந்த பயற்சியின் போது பாண்ட்டிற்கு பதிலாக கைகளால் தூக்கக் கூடிய எடையுள்ள பொருட்களையோ அல்லது கேன்களில் அடைக்கப்பட்ட பொருட்களையோ பயன்படுத்தலாம்.
சீட்டட் ரோ (Seated Row rope exercises) நாற்காலியின் விளிம்பில் நேரமாக அமரவும். முழங்கால்களை மடங்கியிருக்குமாறும், பாதங்கள் தரையில் சற்றே அகலமாக இருக்குமாறும் உங்களுக்கு முன் வையுங்கள். பயிற்சிக்கான பாண்டை உங்கள் பாதத்தை குறுக்கு நெடுக்காக சுற்றிக்கொண்டு இரண்டு கைகளாலும் பிடித்துக் கொள்ளுங்கள். இப்பொழுது உங்கள் கைகள் இரண்டையும் துடுப்பு போடுவது போல வளைத்து இழுக்கவும். இந்த செயலின் போது தோள்பட்டைகள் இரண்டிற்கும் அழுத்தம் தருவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். மெதுவாக கைகள் இரண்டையும் துவக்க நிலைக்கு கொண்டு வரவும்.






