என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
குழந்தை பராமரிப்பு
ஆன்லைன் விளையாட்டில் ஈடுபடும் மாணவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள்
- ஆன்லைன் விளையாட்டுகளால் மாணவர்களின் கவனம் சிதறுகிறது.
- ஆன்லைன் விளையாட்டுகளில் வன்முறையே அதிகமாக இருக்கிறது.
தொடர்ந்து ஒரே இடத்தில் இருப்பது போராடிப்பதால் பெரியவர்கள் முதல் பள்ளி, கல்லூரி மாணவர்வள் வரை பலரும் ஆன்லைன் விளையாட்டில் ஈடுபடுவத அதிகரித்துள்ளது. இது உடல் நல சிக்கல்களுக்கு காரணமாக அமைவது மட்டுமில்லாமல் மனலந பிச்சனைகளை ஏற்படுத்துவதோடு பல குற்றங்களுக்கும் வழி வகுப்பதாக அமைந்து விடுகிறது.
ஆன்லைன் விளையாட்டுகளால் மாணவர்களின் கவனம் சிதறுகிறது. அதே சமயம் பள்ளி பாடங்களையும் செல்போனில் தான் படிக்க வேண்டி இருப்பதால் அவர்கள் ஆன்லைன் விளையாட்டுகளில் ஈடுபடுவதை பல சமயங்களில் தடுக்க முடிவதில்லை. சில நேரங்களில் விடலைப் பிள்ளைகளை கண்டிப்பது விபரீதத்தில் கூட முடிகிறது.
ஆன்லைன் கேம்கள் எனப்பொதுவாக கூறினாலும், குறிப்பிட்ட விபரீதான விளையாட்டுகளையே மாணவர்கள் அதிகம் விளையாடுகின்றனர். இவ்வகை விளையாட்டுகளில் வன்முறையே அதிகமாக இருக்கிறது.
பொழுதுபோக்கிற்காக விளையாட ஆரம்பித்து நாளடைவில் அதிலிருந்து மீண்டு வெளியே வரமுடியாமல் அவதிப்படுகின்றனர். இதனால் கவனச்சிதறல், மனஅழுத்தம், படபடப்பு போன்ற மனநோய்களுக்கும், கோபம், பதற்றம்போன்ற நடத்தை சார்ந்த பிரச்சனைகளுக்கும் ஆளாகின்றனர்.
ஆன்லைன் விளையாட்டில் ஈடுபடும் மாணவர்கள் ஆர்வத்தில் மொபைலை மிக அருகில் வைத்து கொள்கிறார்கள். இதனால் கண்கள் பாதிக்கப்படும் சரியான கோணத்தில் அமராதபோது பகுத்துவலி முதுகுவலி, உறக்கம் கெடுவதால் மலச்சிக்கல் தலைவலி போன்றவை ஏற்படும் வாய்ப்பு உண்டு.
தேவையற்ற நேரத்தில் கணினி மற்றும் மொபைல் பயன்பாட்டில் இருந்து அவர்களை விலக்க வேண்டும்.இதனால் அவர்கள் கோபப்பட்டாலும் சோர்வாக நடந்து கொளடாலும சலுகை அளிக்கக்கூடாது. மாறாக அவர்களுக்கு துணையாக இருக்க வேண்டும். மாற்று வழிகளை காண்பிக்க வேண்டும். திரும்பவும்விடையாடத்தோன்றும் போதெல்லாம் இது தவறு என்பதை தொடர்ந்து வலியுறுத்த வேண்டும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்