search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பாரம்பரிய விளையாட்டுக்கு திரும்பிய சிறுவர்-சிறுமிகள்
    X
    பாரம்பரிய விளையாட்டுக்கு திரும்பிய சிறுவர்-சிறுமிகள்

    செல்போன் ஆதிக்கத்தில் இருந்து பாரம்பரிய விளையாட்டுக்கு திரும்பிய சிறுவர்-சிறுமிகள்

    ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால், குழந்தைகள் பாரம்பரிய விளையாட்டான பல்லாங்குழி, தாயம், தட்டாங்கல், பரமபதம் போன்ற விளையாட்டுகளை வீடுகளில் இருந்தபடியே விளையாடி மகிழ்கின்றனர்.
    ‘ஓடி விளையாடு பாப்பா’ என்றார் பாரதியார். ஆனால், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால், பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டு உள்ளன. இதனால் சிறுவர்-சிறுமிகள் வீதிகளில் சென்று கூட விளையாட முடியவில்லை. வீடுகளிலேயே அவர்கள் முடங்கிக்கிடக்கின்றனர். வீட்டில் இருக்கும் போது பெரும்பாலான நேரத்தை செல்போனில் செலவு செய்வதாக கவலை அடையும் பெற்றோர்கள் செல்போனை கொடுக்க மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.

    இதனால் குழந்தைகளுக்கு அறிமுகம் இல்லாமல் இருந்த தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகள் பல்வேறு வீடுகளில் மீண்டும் கற்பிக்கப்படுகிறது. தேனி, கொடுவிலார்பட்டி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வீடுகளில் குழந்தைகள் பாரம்பரிய விளையாட்டான பல்லாங்குழி, தாயம், தட்டாங்கல், பரமபதம் போன்ற விளையாட்டுகளை வீடுகளில் இருந்தபடியே விளையாடி மகிழ்கின்றனர்.

    Next Story
    ×