search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஜலகண்டேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர பிரம்மோற்சவ விழாகொடியேற்றத்துடன் தொடங்கியது
    X

    ஜலகண்டேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர பிரம்மோற்சவ விழாகொடியேற்றத்துடன் தொடங்கியது

    • பிரம்மோற்சவ விழா 22-ந் தேதி வரை நடைபெற உள்ளது
    • 22-ந்தேதி ஆடிப்பூர தீர்த்தவாரி நடக்கிறது.

    வேலூர் கோட்டை வளாகத்தில் அகிலாண்டேஸ்வரி சமேத ஜலகண்டேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலின் 4-வது மகா கும்பாபிஷேகம் கடந்த மாதம் 25-ந் தேதியும், அதைத்தொடர்ந்து மண்டல பூஜையும் நடைபெற்றது. இந்த நிலையில் 25-ம் ஆண்டு ஆடிப்பூர பிரம்மோற்சவ விழா நேற்று காலை 8 மணியளவில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.

    பிரம்மோற்சவ விழா வருகிற 22-ந் தேதி வரை நடைபெற உள்ளது. தினமும் காலையில் பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகமும், மாலையில் சிறப்பு அலங்காரம், தீபாராதனையும் நடைபெறும். விழாவின் நிறைவு நாளான 22-ந் தேதி காலை 6.30 மணிக்கு ஆடிப்பூர தீர்த்தவாரி, 10.30 மணிக்கு அம்பாள் அபிஷேகம், வளையல் சாற்றுதல், அர்ச்சனை, தீபாராதனை ஆகியவை நடைபெற உள்ளது.

    இதற்கான ஏற்பாடுகளை ஜலகண்டேஸ்வரர் தரும ஸ்தாபனத்தினர் செய்துள்ளனர்.

    Next Story
    ×