search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலில் ஆடி வெள்ளி விழா 6 வாரம் நடக்கிறது
    X

    வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலில் ஆடி வெள்ளி விழா 6 வாரம் நடக்கிறது

    • ஆடி வெள்ளி விழா 21-ந் தேதி தொடங்கி ஆகஸ்டு 25-ந் தேதி வரை நடைபெறுகிறது.
    • 6 வெள்ளிக்கிழமைகளிலும் அகிலாண்டேஸ்வரிக்கு சிறப்பு அலங்காரம் நடக்கிறது.

    வேலூர் கோட்டை அகிலாண்டேஸ்வரி சமேத ஜலகண்டேஸ்வரர் கோவிலில் ஆடி வெள்ளி விழா வருகிற 21-ந் தேதி தொடங்கி ஆகஸ்டு மாதம் 25-ந் தேதி வரை நடைபெறுகிறது. அதன்படி 6 வெள்ளிக்கிழமைகளிலும் அகிலாண்டேஸ்வரிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடக்கிறது.

    அதன்படி 21-ந் தேதி முதல் வெள்ளிக்கிழமையன்று மஞ்சள் காப்பு அலங்காரம், 28-ந் தேதி குங்கும அலங்காரம், ஆகஸ்டு மாதம் 4-ந் தேதி புஷ்ப பாவாடை அலங்காரம், 11-ந் தேதி சந்தன காப்பு அலங்காரம், 18-ந் தேதி மீனாட்சி அலங்காரம், 25-ந் தேதி சந்தன காப்பு அலங்காரம் செய்யப்படுகிறது.

    மேலும் மழைவளம் பெருகி, தண்ணீர் பஞ்சம் நீங்க, கங்கா பாலார் ஈஸ்வரர் 23-வது ஆண்டு விழாவை முன்னிட்டு ஆகஸ்டு மாதம் 3-ந் தேதி காலையில் பஞ்சபூத மகா யாகம் நடக்கிறது.

    ஏற்பாடுகளை ஜலகண்டேஸ்வரர் தரும ஸ்தாபனம் செய்து வருகிறது.

    Next Story
    ×