என் மலர்
வழிபாடு

ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
- சிவபெருமானை வழிபட உகந்த நாள்.
- திருவானைக்காவல் சிவபெருமான் பவனி.
இன்று பிரதோஷம். மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி சிம்ம வாகனத்தில் ராஜாங்க அலங்காரம். மதுரை இன்மையில் நன்மை செய்வார் கோவில் நந்தீசுவரருக்கும், சிவபெருமானுக்கும் சிறப்பு அபிஷேகம். திருவானைக்காவல் சிவபெருமான் பவனி. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜ பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமாருக்கு திருமஞ்சன சேவை. திருமயிலை கற்பகாம்பாள் சமேத கபாலீசுவரர், திருவான்மியூர் திரிபுரசுந்தரியம்பாள் சமேத மருந்தீசுவரர், பெசன்ட் நகர் அராளகேசியம்பாள் சமேத ரத்தினகிரீசுவரர், திருவிடைமருதூர் பிருகத்குஜாம்கை சமேத மகாலிங்க சுவாமி மாலை ரிஷப வாகனக் காட்சி.
இன்றைய பஞ்சாங்கம்
சுபகிருது ஆண்டு, பங்குனி-5 (ஞாயிற்றுக்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: திரயோதசி நாளை விடியற்காலை 4.01 மணி வரை சதுர்த்தசி.
நட்சத்திரம்: அவிட்டம் இரவு 8.53 மணி வரை பிறகு சதயம்.
யோகம்: மரண, சித்தயோகம்
ராகுகாலம்: மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை
எமகண்டம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
சூலம்: மேற்கு
நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை
இன்றைய ராசிப்பலன்
மேஷம்-பொறுமை
ரிஷபம்-அன்பு
மிதுனம்-பொறுப்பு
கடகம்-பயணம்
சிம்மம்-ஓய்வு
கன்னி-நட்பு
துலாம்- லாபம்
விருச்சிகம்-வெற்றி
தனுசு- நிறைவு
மகரம்-நன்மை
கும்பம்-உதவி
மீனம்-வாழ்வு