என் மலர்
வழிபாடு

ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
- முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க உகந்த நாள்.
- ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள் ரதோற்சவம்.
இன்று சர்வ அமாவாசை. ராமேசுவரம், வேதாரண்யம், திருவள்ளூர் புனித நீர் நிலைகளில் பித்ரு பூஜை செய்வது நன்று. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள் ரதோற்சவம். வீரபாண்டி கவுமாரியம்மன் பவனி. திருகண்ணபுரம் ஸ்ரீ சவுரிராஜப் பெருமாள் விபீஷணாழ்வாருக்கு நடையழகு காண்பித்தருளல். ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி புறப்பாடு. சமயபுரம் மாரியம்மன் வெள்ளி காமதேனு வாகனத்தில் புறப்பாடு. திருச்செங்காட்டங்குடி உத்திரா பதீசுவரர் யானை வாகனத்தில் திருவீதி உலா. பத்ராசலம் ஸ்ரீராமபிரான் புறப்பாடு. மதுராந்தகம் ஏரி காத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி காலை சிறப்பு திருமஞ்சன அலங்கார சேவை.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, சித்திரை-6 (புதன்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: சதுர்த்தசி காலை 11.43 மணி வரை பிறகு அமாவாசை.
நட்சத்திரம்: ரேவதி நள்ளிரவு 12.20 மணி வரை பிறகு அசுவினி
யோகம்: மரணயோகம்
ராகுகாலம்: நண்பகல் 12 மணிமுதல் 1.30 மணி வரை
எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
இன்றைய ராசிபலன்
மேஷம்-அன்பு
ரிஷபம்-சிறப்பு
மிதுனம்-ஆதரவு
கடகம்-லாபம்
சிம்மம்-பெருமை
கன்னி-உவகை
துலாம்- உயர்வு
விருச்சிகம்-மேன்மை
தனுசு- கடமை
மகரம்-நட்பு
கும்பம்-மதிப்பு
மீனம்-திடம்
ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional