search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருச்செந்தூர் கோவிலில் கொடுக்கப்படும் இலை விபூதியின் மகத்துவம்
    X

    திருச்செந்தூர் கோவிலில் கொடுக்கப்படும் இலை விபூதியின் மகத்துவம்

    • திருச்செந்தூர் கோவிலில் நடக்கும் திருவிழாக்களில் மிகவும் முக்கியமானது கந்தசஷ்டி திருவிழாவாகும்.
    • திருச்செந்தூர் முருகன் கோவிலில் இலை விபூதி பிரசாதம் வழங்கப்படுகிறது.

    அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் மிகவும் முக்கியமானது கந்தசஷ்டி திருவிழாவாகும்.

    இவ்விழாவில் தமிழகம் முழுவதும் மட்டுமல்லாமல் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் என உலக நாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சஷ்டி விரதம் மேற்கொண்டு சாமி தரிசனம் செய்து செல்வது வழக்கம். இங்கு வழங்கப்படும் பிரசாதங்களில் முக்கியமானது இலை விபூதியாகும்.

    ஒருமுறை ஆதிசங்கரர் காசநோயால் பாதிக்கப்பட்டு திருச்செந்தூர் முருகனிடம் வந்துள்ளார். அப்போது முருகப் பெருமான் ஆதிசங்கரரிடம் இனிய தமிழில்

    பாடல் பாடுமாறு கேட்டுள்ளார். அதற்கு அவர் நான் பெருமாளை மட்டும் பாடுவேன் என்று கூறியுள்ளார்.

    இதனால் வருத்தமடைந்த முருகப் பெருமான் வருத்தத்தோடு இருப்பது கண்டு அப்போது அங்கு வந்த பெருமாள் முருகன் வருத்தத்துடன் இருப்பதற்கு காரணத்தை கேட்டறிந்தார். விஷயம் புரிந்த பெருமாள் ஆதிசங்கரர் இடம் சென்று என்னை பாடுவதாக நினைத்து முருகப் பெருமான் முன் சென்று கண்ணை மூடிக் கொண்டு என்னை பாடு என்று கூறினாராம். அப்போது முருகப் பெருமான் முன் நின்று கண்ணை மூடிக்கொண்டு ஆதிசங்கரர் பாடினாராம். கண்ணை திறந்து பார்க்கும் போது முருகப் பெருமான் இருக்கும் இடத்தில் பெருமாள் இருந்துள்ளார்.

    பெருமாள் தான் முருகன், முருகன் தான் பெருமாள் என்பதை உணர்ந்த ஆதிசங்கரர், முருகப் பெருமானிடம் மன்னிப்பு கேட்டு முருகனை பாடி காசநோயை குணப்படுத்த வேண்டும் என்று வேண்டினார். உடனே முருகப்பெருமான் இலையில் விபூதியை அவரிடம் கொடுத்தார். திருநீற்றுப்பச்சிலையில் வைத்து கொடுக்கப்பட்ட இலை விபூதியை சாப்பிட்டதும் காசநோய் குணமாகியதாம்.

    தேவர்களை சிறை பிடித்து கொடுமைப்படுத்திய சூரபத்மனிடம் தேவர்களை விடுவித்து முருகப் பெருமானிடம் சரணடையுமாறு வீரபாகு தேவன் கேட்டபோது சூரன் மறுத்தான். முருகப் பெருமானிடம போர் புரிய தயாரானான். போர் தொடங்கியது போரில் முருகப் பெருமான் படை சார்பில் இருந்த வீரர்கள் சிலர் காயமடைந்தனர்.

    அந்த காயத்திற்கு மருந்தாக இலை விபூதி கொடுத்து குணமாக்கியுள்ளனர். பின்னாளில் அதன் மகத்துவத்தை அறிந்து கோவிலை கட்டிய சாதுக்கள் பணியாற்றிய ஊழியருக்கு ஊதியமாக இலை விபூதியை கொடுத்துள்ளனர். பெற்றுக் கொண்ட ஊழியர்கள் விடலை கோவில் பிள்ளையார் அருகே வந்து அதைத் திறந்து பார்த்த போது ஊதியத்திற்கு ஏற்ப பொற்காசுகள் ஆக மாறியிருந்ததாம். வேலை செய்யாதவர்களுக்கு வெறும் விபூதி மட்டுமே இருக்குமாம். அதனுடைய தத்துவத்தை உணர்த்தும் வகையில் இன்றும் திருச்செந்தூர் முருகன் கோவிலில் இலை விபூதி பிரசாதம் வழங்கப்படுகிறது.

    Next Story
    ×