என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பங்குனி பெருவிழா 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
- 26-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 10-ந்தேதி வரை 15 நாட்கள் நடக்கிறது.
- 9-ந்தேதி மகா தேரோட்டம் நடக்கிறது.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பங்குனி பெருவிழா வருகின்ற 26-ந்தேதி தொடங்கி அடுத்த (ஏப்ரல்) மாதம் 10-ந்தேதி வரை 15 நாட்கள் நடக்கிறது. திருவிழா முதல் நாளான 26-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 8.15 மணிக்கு மேல் 8.45 மணிக்குள் கொடியேற்றம் நடக்கிறது. 27-ந்தேதி விநாயகர் திருநாளாக போற்றப்படுகிறது. அன்று இரவு 7 மணியளவில் விநாயகர் சப்பரம் வலம் வருதல் நடக்கிறது
திருவிழாவையொட்டி தினமும் காலை 10 மணியளவில் தங்கப்பல்லக்கில் தெய்வானையுடன் முருகப்பெருமான் எழுந்தருளி நகர் வீதிகளில் வலம் வருதல் நடக்கிறது. 28-ந்தேதி இரவு 7 மணிக்கு தங்ககுதிரை வாகனத்திலும், 29-ந்தேதி வெள்ளி பூத வாகனத்திலும், 30-ந்தேதி அன்ன வாகனத்திலும், 31-ந்தேதி சேஷ வாகனத்திலும், ஏப்ரல் 1-ந்தேதி வெள்ளி யானை வாகனத்திலும், 2-ந்தேதி தங்க மயில் வாகனத்திலும், 3-ந்தேதி வெள்ளி ஆட்டுக்கிடாய் வாகனத்திலும், 4-ந்தேதி பச்சைக் குதிரை வாகனத்திலும், 5-ந்தேதி தங்க குதிரை வாகனத்திலும், 6-ந்தேதி தங்கமயில், குதிரை வாகனத்திலும், 7-ந்தேதி பச்சை குதிரை வாகனத்திலும், 8-ந்தேதி வெள்ளி யானை வாகனத்திலும்,9-ந்தேதி திருத்தேரிலும், 10-ந்தேதி தங்கமயில் வாகனத்திலும் சுவாமி அம்பாளுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஏப்ரல் 1-ந்தேதி (சனிக்கிழமை) கைப்பாரம், 5-ந்தேதி பங்குனி உத்திரம், 6-ந்தேதி சூரசம்கார லீலை, 7-ந்தேதி பட்டாபிஷேகம், 8-ந்தேதி பகல் 12.20 மணிக்கு மேல் 12.40மணிக்குள் திருக்கல்யாணம், 9-ந்தேதி காலை 6 மணிக்கு மேல் 6.15 மணிக்குள் கிரிவலப் பாதையில் மகா தேரோட்டம் நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் துணைகமிஷனர் நா.சுரேஷ் தலைமையில் கோவில் சிவாச்சாரியார்கள், கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்