என் மலர்
வழிபாடு

ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
- திருவலஞ்சுழி சுவேத விநாயகப் பெருமான் ரதோற்சவம்.
- பிள்ளையார்பட்டி கற்பக விநாயகருக்கு கணபதி ஹோமம், அபிஷேகம், அலங்காரம்.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, புரட்டாசி 1 (திங்கட்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: திருதியை காலை 11.38 மணி வரை பிறகு சதுர்த்தி
நட்சத்திரம்: சித்திரை காலை 11.57 மணி வரை பிறகு சுவாதி
யோகம்: சித்த, அமிர்தயோகம்
ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
சூலம்: கிழக்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை
இன்று ஸ்ரீ விநாயக சதுர்த்தி. திருவலஞ்சுழி சுவேத விநாயகப் பெருமான் ரதோற்சவம். பிள்ளையார்பட்டி கற்பக விநாயகருக்கு கணபதி ஹோமம், அபிஷேகம், அலங்காரம். திண்டுக்கல், தேவக்கோட்டை, மிலட்டூர் கோவில்களில் விநாயகப் பெருமான் தீர்த்தவாரி, மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் 18 படி பச்சரிசி மாவால் ஆன கொழுக்கட்டை படைத்து வழிபடல். திருமயிலை கற்பகாம்பாள் சமேத கபாலீசுவரர், திருவான்மியூர் திரிபுரசுந்தரியம்பாள் சமேத மருந்தீசுவரர், பெசன்ட் நகர் அராளகேசியம்பாள் சமேத ரத்தினகிரீசுவரர் கோவில்களில் சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-சுகம்
ரிஷபம்-முயற்சி
மிதுனம்-சாதனை
கடகம்-செலவு
சிம்மம்-பெருமை
கன்னி-பரிசு
துலாம்- தடை
விருச்சிகம்-நன்மை
தனுசு- தனம்
மகரம்-மகிழ்ச்சி
கும்பம்-உழைப்பு
மீனம்-கடமை