search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருப்பதியில் கோவிலில் செப்டம்பர் மாத ஆர்ஜித சேவா டிக்கெட் 21-ந் தேதி ஆன்லைனில் வெளியீடு
    X

    திருப்பதியில் கோவிலில் செப்டம்பர் மாத ஆர்ஜித சேவா டிக்கெட் 21-ந் தேதி ஆன்லைனில் வெளியீடு

    • ஆகஸ்ட் 27-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை பவித்ர உற்சவம் நடைபெற உள்ளது.
    • நேரடி இலவச தரிசனத்தில் 24 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் செப்டம்பர் 1-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை நடைபெறக்கூடிய சுப்ரபாதம், அர்ச்சனை, தோமாலை, உள்ளிட்ட கட்டண சேவைகளுக்கான குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கும் பதிவுக்கு ஆன்லைனில் டிக்கெட் வெளியிடப்படுகிறது.

    வருகிற 19-ந் தேதி காலை 10 மணி முதல் 21-ந் தேதி காலை 10 மணி வரை பக்தர்கள் பதிவு செய்து கொள்ளலாம்.

    21-ந் தேதி காலை 12 மணிக்கு எலக்ட்ரானிக் குலுக்கல் தேர்ந்தெடுக்கப்பட்ட பக்தர்களுக்கு செல்போன் அல்லது இமெயிலுக்கு தகவல் அனுப்பப்படும்.

    அதனை வைத்துக் கொண்டு பணம் செலுத்தி டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம்.

    இதேபோன்று ஆகஸ்ட் மாதம் 27-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை வருடாந்திர பவித்ர உற்சவம் ஏழுமலையான் கோவிலில் நடைபெற உள்ளது.

    இதில் பங்கேற்பதற்கான டிக்கெட்டுகள் இந்த மாதம் 22-ந் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.

    செப்டம்பர் 1-ந்தேதி முதல் 30-ந் தேதி வரையில் நடைபெறக்கூடிய கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரமோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவைக்கான டிக்கெட்டுகள் இந்த மாதம் 22-ந் தேதி காலை 10 மணி முதல் தங்களுக்கு வேண்டிய சேவைகளை பக்தர்கள் முன்பதிவு செய்து டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம்.

    செப்டம்பர் மாதம் அங்க பிரதட்சணம் செய்வதற்கான டிக்கெட்டுகள் இந்த மாதம் 23-ந் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தேவஸ்தானம் அதிகாரி தெரிவித்துள்ளார்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று 70 ஆயிரத்து 896 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 37,546 பேர் முடிக்காணிக்கை செலுத்தினர். ரூ.4.07 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    நேரடி இலவச தரிசனத்தில் 24 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×