என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
பழனி முருகன் கோவிலில் அலைமோதிய பக்தர்கள்நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம்
- பொது, கட்டண, கட்டளை தரிசன வழிகளில் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர்.
- கேரளாவை சேர்ந்த பக்தர்கள் அதிக அளவில் வந்திருந்தனர்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். வாரவிடுமுறை, முகூர்த்தம், கிருத்திகை, சஷ்டி உள்ளிட்ட விசேஷ நாட்களில் பக்தர்கள் வருகை அதிகரித்து காணப்படுவது வழக்கம். அந்த வகையில், நேற்று வாரவிடுமுறை என்பதால் பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
மேலும் இன்று (திங்கட்கிழமை) ஆடி மாதப்பிறப்பு என்பதால் நேற்றே பக்தர்கள் பலர் தங்களது குடும்பத்துடன் வந்து தரிசனம் செய்தனர். குறிப்பாக கேரளாவை சேர்ந்த பக்தர்கள் அதிக அளவில் வந்திருந்தனர். பழனியில் அதிகாலை முதலே அடிவாரம், கோவில் வெளிப்பிரகாரம், சன்னதி ஆகிய பகுதிகளில் பக்தர்கள் குவிந்தனர். இதனால் பொது, கட்டண, கட்டளை தரிசன வழிகளில் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர்.
அதேபோல் அடிவாரத்தில் இருந்து மலைக்கோவில் செல்வதற்கான ரோப்கார், மின்இழுவை ரெயில் ஆகிய நிலையங்களிலும் கவுன்ட்டரை கடந்தும் பக்தர்கள் வரிசை காணப்பட்டது. அலைமோதிய கூட்டத்தால் சுமார் 1½ மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்