search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருமருகல் மகாமாரியம்மன் கோவிலில் வைகாசி திருவிழா பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது
    X

    திருமருகல் மகாமாரியம்மன் கோவிலில் வைகாசி திருவிழா பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது

    • 12-ந் தேதி தீமிதி உற்சவம் நடக்கிறது.
    • 14-ந் தேதி விடையாற்றி விழா நடைபெறுகிறது.

    திருமருகலில் பிரசித்தி பெற்ற மகாமாரியம்மன் கோவில் உள்ளது.இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு விழா நேற்று கஞ்சி வார்த்தல், பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. முன்னதாக திரளான பக்தர்கள் பூக்களை தட்டுகளில் எடுத்து கொண்டு முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்று கோவிலை அடைந்தனர்.

    பின்னர் அம்மன் பாதத்தில் பூக்களைகொட்டி பூச்சொரிதல் செய்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வருகிற 12-ந் தேதி தீமிதி உற்சவமும், 14-ந் தேதி விடையாற்றி விழாவும் நடைபெறுகிறது.இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர், கிராம மக்கள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×