search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஜாதகத்தைக் கொண்டு குல தெய்வத்தை கண்டுபிடிக்கலாம்...
    X

    ஜாதகத்தைக் கொண்டு குல தெய்வத்தை கண்டுபிடிக்கலாம்...

    • சிலருக்கு பிறப்பிலே குலதெய்வ தோஷம் இருக்கும்.
    • குலதெய்வத்தை அந்தெந்த பங்காளி வகையறாக்களுக்கு ஏற்றபடி வணங்குவார்கள்.

    ஜோதிடத்தில் லக்கினத்திற்கு ஐந்தாம் இடம் பூர்வ,புண்ணிய ஸ்தானம். இதை வைத்துதான் ஓருவரின் தந்தை வழி பாட்டனார், தாய்மாமன், புத்திர பாக்கியம், கர்ம வினை, புகழ், இப்பிறவியில் அனுபவிக்கப்போகும் நன்மைகள் என அனைத்தையும் தெரிந்துக்கொள்ள முடியும். இந்த இடத்தை வைத்து ஓரளவு நம்முடைய குல தெய்வத்தை அறியலாம்.இந்த இடங்கள் ஆண் ராசியா, பெண் ராசியா எனக் கண்டுபிடித்து, அந்த தெய்வங்கள் ஆண் தெய்வங்களா, பெண் தெய்வங்களா எனத் தெரிந்து கொள்ளலாம்.

    மேலும் அது நில ராசியில் (ரிஷபம், கன்னி, மகரம்) உள்ளதா, நீர் ராசியில் (கடகம், விருச்சிகம், மீனம்) உள்ளதா, என்பதைத் தெரிந்துகொண்டு, அந்த தெய்வம் இருக்குமிடத்தைக் கண்டுபிடிக்கலாம். நீர் ராசி என்றால், ஊரின் எல்லையில் உள்ள நீர் சார்ந்த இடங்களுக்கு அருகில் குலதெய்வம் இருக்கும். நில ராசியில் வந்தால், வயல்வெளி சார்ந்த இடங்களில் இருக்கும். நெருப்பு ராசியில் (மேஷம், சிம்மம், தனுசு) நின்றால், அவர்களின் குலதெய்வம் மலை மேல் இருக்கும்.

    இவ்வாறு குலதெய்வம் பற்றி வீட்டின் மூத்த பிள்ளையின் ஜாதகத்தைக் கொண்டு கண்டுபிடிக்கலாம். சிலருக்கு பிறப்பிலே குலதெய்வ தோஷம் இருக்கும். இதை பூர்வ புண்ணிய தோஷம் என்பார்கள். அதாவது ஐந்தாமிடத்தில் ராகு அல்லது கேது இருந்தாலும் லக்கினத்திற்கு தீய கிரகங்கள் இருந்தாலும் அது குலதெய்வ தோசத்தை கொடுக்கும்.மேலும் இது புத்திர தோசத்தையும் கொடுக்கும்.

    ஐந்தாமிடம் என்பது நம்முடைய முற்பிறவியை குறிக்கக்கூடிய இடம்! யார் ஒருவர் இப்பிறவியில் தாய்,தந்தையற்கு உரிய மரியாதை அளிக்காமல் அவர்களை மனம் நோக செய்தாலும், அதே போல் குல தெய்வத்தை வணங்காமல் இருந்தாலும் மறு பிறவியில் அவர்கள் குல தெய்வ தோசத்துடன் பிறப்பார்கள். இதுதான் புத்திர தோசத்தையும் கொடுக்கும். அதாவது போன பிறவியில் செய்யும் கர்ம வினைகளே நமக்கு வரக்கூடிய தோசங்கள்.

    இந்த மாதிரி குலதெய்வ தோசம் இருப்பவர்கள் கண்டிப்பாக தனக்குரிய குலதெய்வத்தை கெட்டியாக பிடித்து கொண்டால் அனைத்து தோசங்களும் நிவர்த்தியாகும். குலதெய்வத்தை அந்தெந்த பங்காளி வகையறாக்களுக்கு ஏற்றபடி வணங்குவார்கள். அதை அறிந்து கொண்டு அதற்குரிய வழிமுறைகளில் வணங்குவது சிறப்பாகும்.

    "சார் எனக்கு ஜாதகமே இல்லை!எங்க வீட்டுல எழுதி வைக்கல அல்லது தொலைந்துவிட்டது"என சிலர் சொல்வார்கள்.

    அவர்கள் எப்படி குலதெய்வ வழிபாடு செய்வது?

    இவர்கள் திருச்செந்துர் முருகனை குலதெய்வமாக வணங்கலாம்! அதாவது புத்திரக்காரகன் குரு பகவான். இந்த குரு பகவானின் ஸ்தலம்தான் திருச்செந்தூர்! எனவே குல தெய்வம் தெரியாதவர் திருச்செந்தூர் முருகனை அன்றைய நாளில் குலதெய்வமாக வணங்க ஆரம்பிக்கலாம். அதேபோல் குலதெய்வ வழிபாடு,பெண் திருமணம் செய்து சென்றால் கணவனின் குலதெய்வத்தையே தன் குலதெய்வமாக ஏற்றுக்கொண்டார்கள்.

    ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional

    Next Story
    ×