என் மலர்tooltip icon

    வழிபாடு

    கல்பாத்தியில் 3 கோவில்களின் தேரோட்டம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
    X

    தேரோட்டம் நடந்ததையும், திரளான பக்தர்கள் கலந்துகொண்டதையும் படத்தில் காணலாம்.

    கல்பாத்தியில் 3 கோவில்களின் தேரோட்டம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

    • கடந்த 14-ந்தேதி முதல் நாள் தேரோட்டம் நடந்தது
    • தினமும் சிறப்பு பூஜைகள், அபிஷேகம் நடைபெற்று வந்தது.

    பாலக்காடு அருகே கல்பாத்தி கிராமத்தில் விசாலாட்சி சமேத விஸ்வநாதர் சுவாமி கோவில், கணபதி கோவில், சாந்தபுரம் பிரசன்ன விநாயகர் கோவில் ஆகிய 3 கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களின் தேர்த்திருவிழா கடந்த 8-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் சிறப்பு பூஜைகள், அபிஷேக, அலங்கார பூஜை நடைபெற்று வந்தது.

    இந்தநிலையில் கடந்த 14-ந் தேதி முதல் நாள் தேரோட்டம் நடந்தது. நேற்று முன்தினம் 2-வது நாள் நாள் தேரோட்டம் நடைபெற்றது. இந்தநிலையில் நேற்று 3-து நாள் தேரோட்டம் நடந்தது. இதையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் மாலையில் அலங்கரிக்கப்பட்ட தேர்களில் உற்சவ மூர்த்திகள் எழுந்தருளினர்.

    தொடர்ந்து மாலை 6 மணிக்கு தேரோட்டம் நடந்தது. விசாலாட்சி சமேத விஸ்வநாதர் சுவாமி கோவில், கணபதி கோவில், சாந்தபுரம் பிரசன்ன விநாயகர் கோவில் மற்றும் 2 கோவில்களை சேர்ந்த தேர்கள் பக்தர்கள் வெள்ளத்தில் அணிவகுத்து வந்தன. கோவிலை ஊற்றி தேரோட்டம் நடந்து, பின்னர் கல்பாத்தி கிராமத்தில் ஒரே இடத்தில் சங்கமம் ஆனது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    Next Story
    ×