search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவில் தேரோட்டம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
    X

    திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவில் தேரோட்டம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

    • திருத்தேரின் சக்கரத்தில் உப்பு, மிளகு போட்டு கோவிந்தா... கோவிந்தா... என்று பக்தி கோஷமிட்டு வழிபட்டனர்.
    • வருகிற 4-ந் தேதி தீர்த்தவாரி நடைபெற உள்ளது.

    திருவள்ளூரில் உள்ள வைத்திய ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக உள்ளது. இந்த கோவிலில் சித்திரை மாத பிரம்மோற்சவ விழா கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதையொட்டி தினந்தோறும் காலையும், மாலையும் பல்வேறு வாகனங்களில் உற்சவர் நகரின் முக்கிய வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை விமரிசையாக நடைபெற்றது. 60 அடி உயரமும், 21 அடி அகலமும் கொண்ட திருத்தேரில் காலை 5 மணிக்கு உற்சவர் ஸ்ரீ வீரராகவர் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் எழுந்தருளினார்.

    இதனைத்தொடர்ந்து 7.30 மணிக்கு திருத்தேர் ஜே.சி.பி. எந்திரம் மூலம் தேரடியில் இருந்து புறப்பட்டு பனகல் தெரு, குளக்கரை சாலை, பஜார் வீதி, வடக்கு ராஜவீதி, மோதிலால் தெரு வழியாக தேர் மீண்டும் தேரடியை வந்தடைந்தது.

    இதில் திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் வேண்டுதலை நிறைவேற்ற திருத்தேரின் சக்கரத்தில் உப்பு, மிளகு போட்டு கோவிந்தா... கோவிந்தா... என்று பக்தி கோஷமிட்டு வழிபட்டனர். வருகிற 4-ந் தேதி காலை 10 மணிக்கு கோவில் திருகுளத்தில் தீர்த்தவாரி நடைபெற உள்ளது.

    தேரோட்ட விழாவையொட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு அனுமந்தன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் கமலஹாசன், அந்தோணி ஸ்டாலின் மற்றும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    Next Story
    ×