search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    பூதப்பாண்டி பூதலிங்கசாமி கோவிலில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது
    X

    யாகசாலை பூஜை நடைபெற்ற போது எடுத்த படம்.

    பூதப்பாண்டி பூதலிங்கசாமி கோவிலில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது

    • இன்று இரவு பரதநாட்டியம், நாட்டியாஞ்சலி நடக்கிறது.
    • நாளை இரவு பஞ்சமூர்த்தி தரிசனம் உலா நடக்கிறது.

    பூதப்பாண்டி பூதலிங்கசாமி, சிவகாமி அம்பாள் கோவிலில் கும்பாபிஷேக விழா கடந்த 22-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் நேற்று காலையில் பழையாற்றில் இருந்து யானை மீது புனிதநீர் எடுத்த வரும் நிகழ்ச்சி நடந்தது. புனிதநீர் நான்கு ரதவீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோவிலுக்குள் கொண்டுவரப்பட்டது. பின்னர் பல ஆறுகளில் இருந்து எடுத்து வரப்பட்ட புனித நீர்களுடன் கும்பங்களில் புனித நீர் வைக்கப்பட்டது. நேற்று இரவு முதல் கால யாக வேள்வி தொடங்கியது.

    விழாவின் 4-ம் நாளான இன்று (புதன்கிழமை) காலை 7.30 மணிக்கு பாவனாபிஷேகம், தொடர்ந்து 2-ம் யாகசாலை பூஜை, 10 மணிக்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதல், சமய சொற்பொழிவு, மாலை 6.30 மணிக்கு மேல் 3-ம் கால யாகசாலை பூஜை, இரவு 7 மணிக்கு பரதநாட்டியம், நாட்டியாஞ்சலி ஆகியவை நடக்கிறது.

    விழாவின் முக்கிய நிகழ்வான கும்பாபிஷேகம் நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு 4-ம் கால யாகசாலை பூஜை, தொடர்ந்து பூர்ணகுதி, தீபாராதனை, காலை 6.30 மணிக்கு யாத்ராதானம், 7.30 மணிக்கு யாகசாலையில் இருந்து கடம் எடுத்து வருதல், 7.35 மணிக்கு மேல் 8.15 மணிக்குள் மூலஸ்தானம் மற்றும் பரிவார விமான ராஜகோபுரம் மகா கும்பாபிஷேகம், தீபாராதனை போன்றவை நடக்கிறது.

    தொடர்ந்து மூலஸ்தான மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம், தீபாராதனை, 10.30 மணிக்கு மூலஸ்தான மூர்த்திக்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனை, அன்னதானம், மாலை 5 மணிக்கு திருக்கல்யாண வைபோக மூகூர்த்தம், இரவு 7 மணிக்கு பஞ்சமூர்த்தி தரிசனம் உலா ஆகியவை நடக்கிறது.

    Next Story
    ×