search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    அம்பை வாகைக்குளம் வாகைபதியில் 13-ந்தேதி தைத்தேரோட்டம்
    X

    அம்பை வாகைக்குளம் வாகைபதியில் 13-ந்தேதி தைத்தேரோட்டம்

    • தைத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • விழாவில் 11 நாட்களும் அன்னதர்மம் நடைபெறும்.

    அம்பை வாகைக்குளம் வாகைபதியில் தை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் கருடன், தண்டிகை, சிங்கம், அன்னம், சூரியன், நாகம், பூ பல்லக்கு, குதிரை, அனுமன், இந்திரன், ரிஷப வாகனத்தில் பவனி நடைபெறும். விழாவில் 11 நாட்களும் தினமும் மதியம் உச்சிப்படிப்பு மற்றும் உச்சிப்பால் தர்மமும், இரவு 7 மணிக்கு அன்னதர்மமும் நடைபெறும். சிறப்பு நிகழ்ச்சியாக 8-ம் திருநாளான 10-ந் தேதி காலை 11 மணிக்கு வாகைபதி பால் கிணற்றில் இருந்து பால் குடம் எடுத்தல் நிகழ்ச்சியும், இரவு 8 மணிக்கு அன்னதர்மமும் நடைபெறும். பின்னர் 3 மணிக்கு அய்யா ஆதிநாராயண வைகுண்டர் குதிரை வாகனத்தில் எழுந்தருளி கலி வேட்டையாடுதல் நிகழ்ச்சி நடைபெறும்.

    12-ந் தேதி காலை 11 மணிக்கு வாகைபதி பால் கிணற்றில் இருந்து கிணற்று பால் குடம் மற்றும் ஆண்கள் மற்றும் பெண்கள் சந்தனக்குடம் எடுத்தல் மற்றும் கும்பிடு நமஸ்கார நிகழ்ச்சி, அதிகாலை 3 மணிக்கு அய்யா ஆதிநாராயண வைகுண்டர் இந்திரன் வாகனத்தில் பவனி வருதல் நடைபெறும். விழாவின் சிகர நிகழ்ச்சியாக 13-ந் தேதி மாலை 4 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. ஏற்பாடுகளை வாகைகுளம் வாகைப்பதி அய்யாவழி தொண்டர்களும், அன்பு கொடி மக்களும் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×