search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    தொடக்கம் விநாயகர்.. முடிவு ஆஞ்சநேயர்
    X

    ஆதியந்த பிரபு

    தொடக்கம் விநாயகர்.. முடிவு ஆஞ்சநேயர்

    • அனுமன், சிவபெருமானின் அம்சம்.
    • சக்தியிடம் இருந்து உருவானவர் விநாயகர்.

    விநாயகரும், அனுமனும் இணைந்த வடிவத்தை 'ஆதியந்த பிரபு' என்பார்கள். ஒரு புறம் விநாயகரின் தும்பிக்கையும், மறுபுறம் வானர முகமும் கொண்டது இந்த வடிவம். `ஆதி' என்பது `முதல்' என்றும், `அந்தம்' என்பது `முடிவு' என்றும் பொருள்படும்.

    அந்த வகையில் முதல் கடவுளான விநாயகரை வணங்கி ஒரு காரியத்தை தொடங்கினால், அதை அனுமன் வெற்றிகரமாக முடித்துக் கொடுப்பார். பிரம்மச்சரிய விரதம் மேற்கொள்பவர்கள், இரண்டு பிரம்மச்சாரிகள் இணைந்த இந்த வடிவத்தை தங்கள் இஷ்டதெய்வமாக வழிபடுவார்கள்.

    அனுமன், சிவபெருமானின் அம்சம். அதே போல் சக்தியிடம் இருந்து உருவானவர் விநாயகர். இதனால் இவர்களை வழிபடுவது பரம்பொருளான ஈசனையும், அம்பாளையும் வணங்குவதற்கு சமமானது.

    Next Story
    ×