search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருக்கோஷ்டியூர் சவுமியநாராயண பெருமாள் கோவிலில் ஆடிப்பூர விழா தொடங்கியது
    X

    சிறப்பு அலங்காரத்தில் ஆண்டாளுடன், சவுமிய நாராயண பெருமாள்.

    திருக்கோஷ்டியூர் சவுமியநாராயண பெருமாள் கோவிலில் ஆடிப்பூர விழா தொடங்கியது

    • 22-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.
    • 23-ந்தேதி தீர்த்தவாரி நடக்கிறது.

    திருப்பத்தூர் அருகே திருக்கோஷ்டியூரில் சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்திற்குட்பட்ட பிரசித்தி பெற்ற சவுமிய நாராயண பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் பிறப்பை முன்னிட்டு ஆடி பிரமோற்சவ விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டிற்கான விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் ஆண்டாளுடன் பெருமாள் கல்யாண மண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    தொடர்ந்து கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு விழா தொடங்கியது. கொடிமரத்திற்கு பல்வேறு திரவிய பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தினந்தோறும் காலையில் திருவீதி உலா புறப்பாடு நிகழ்ச்சியும், இரவு ஆண்டாளுடன் பெருமாள் பல்வேறு வாகனங்களில் புறப்பாடு நிகழ்ச்சி நடக்கிறது.

    19-ந் தேதி ஆண்டாளுடன் தங்க பல்லக்கு பாவை மற்றும் சூர்ணாபிஷேகம் திருவீதி புறப்பாடு நிகழ்ச்சியும், 20-ந் தேதி ஆண்டாளுடன் குதிரை வாகனத்தில் புறப்பாடு நிகழ்ச்சியும் நடக்கிறது. 21-ந் தேதி அன்னவாகன புறப்பாடு நிகழ்ச்சியும் நடக்கிறது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 22-ந் தேதி தேரில் ஆண்டாளுடன் பெருமாள் எழுந்தருளல் நிகழ்ச்சியும், மாலை தேரோட்டம் நிகழ்ச்சியும் நடக்கிறது. 23-ந்தேதி காலை தீர்த்தவாரி நிகழ்ச்சியும், இரவு தங்கதோளுக்கினியானில் ஆஸ்தானத்திற்கு எழுந்தருளல் மற்றும் ஆசிர்வாதம் நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.

    விழா ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் ராணிமதுராந்தகிநாச்சியார் உத்தரவின் பேரில் தேவஸ்தான மேலாளர் இளங்கோ, திருக்கோஷ்டியூர் சரக தேவஸ்தான கண்காணிப்பாளர் சேவற்கொடியான் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×