search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனத்துக்கு 24 மணி நேரமாகிறது
    X

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனத்துக்கு 24 மணி நேரமாகிறது

    • 10 நாட்களுக்கு மேலாக திருப்பதி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.
    • ரூ.300 கட்டண டிக்கெட் மூலம் தரிசனம் செய்வதற்கு 4 மணி நேரம் ஆனது.

    கோடை விடுமுறையால் 10 நாட்களுக்கு மேலாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.

    தேதி, நேரம் குறிப்பி டப்பட்ட தரிசன டோக்கன் இல்லாமல் நேரடியாக இலவச செய்து செல்லும் பக்தர்கள் வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள அனைத்து அறைகளும் நிரம்பி 5 கிலோமீட்டர் தூரத்திற்கு தரிசன வரிசையில் காத்திருந்தனர்.

    இன்று நேரடி இலவச தரிசனத்திற்கு 24 மணி நேரம் ஆனது. ரூ.300 கட்டண டிக்கெட் மூலம் தரிசனம் செய்வதற்கு 4 மணி நேரம் ஆனது.

    நேற்று அதிகாலை 3 மணியிலிருந்து இரவு 7 மணி வரை 79,486 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 40,250 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.72 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    Next Story
    ×