search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    சீனிவாச திருக்கல்யாணம்
    X
    சீனிவாச திருக்கல்யாணம்

    திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கரூரில் சீனிவாச திருக்கல்யாணம் வருகிற 11-ந்தேதி நடக்கிறது

    தமிழகத்தில் கரூரில் உள்ள அட்லஸ் கலையரங்கம் ஸ்டேடியத்தில் வருகிற 11-ந் தேதி மாலை 5.30 மணி அளவில் சீனிவாச திருக்கல்யாணம் நடைபெற உள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் மதியம் 12.30 மணியிலிருந்து 1.30 மணிவரை ஸ்ரீதேவி பூதேவி மலையப்ப சாமிக்கு சீனிவாச கல்யாணம் நடக்கிறது.

    அதில் பக்தர்கள் பங்கேற்று வழிபட ரூ.ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில் 2 பக்தர்கள் பங்கேற்று வழிபடலாம்

    எனினும் ஏழை எளிய பக்தர்கள் பங்கேற்று வழிபட முடியாததால் கோவிலுக்கு வெளியே வெளிநாடு, வெளி மாநிலம், வெளி மாவட்டங்களில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பாக சீனிவாச திருக்கல்யாணம் நடத்தப்படுகிறது. இதற்காக திருமலை திருப்பதி தேவஸ்தானம் சீனிவாச கல்யாண உற்சவம் என்ற ஒரு திட்டத்தை தொடங்கி உள்ளது.

    அந்த திட்டத்தின் கீழ் தமிழகத்தில் கரூரில் உள்ள அட்லஸ் கலையரங்கம் ஸ்டேடியத்தில் வருகிற 11-ந் தேதி மாலை 5.30 மணி அளவில் சீனிவாச திருக்கல்யாணம் நடைபெற உள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×