என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
கள்ளழகர் கோவிலில் நெல், தானியங்களை காணிக்கையாக செலுத்திய பக்தர்கள்
Byமாலை மலர்20 May 2022 7:04 AM GMT (Updated: 20 May 2022 7:04 AM GMT)
அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் பணம், வெள்ளி, தங்கம், நெல், தானிய வகைகளை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி வருகின்றனர்.
தென்திருப்பதி, திருமாலிருஞ்சோலை என்றும் போற்றி புகழ்ந்து அழைக்கப்படும் புனித தலமானது மதுரையை அடுத்த அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலாகும். இக்கோவிலுக்கு மதுரை மாவட்டம் மட்டுமின்றி வெளிமாவட்டங்களில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து செல்வது வழக்கமாக உள்ளது. இதில் பணம், வெள்ளி, தங்கம், நெல், தானிய வகைகளை, பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி வருகின்றனர்.
மேலும் விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் கடந்த ஆண்டு விளைந்த நெல், தானிய வகைகளை அலங்காநல்லூரை அடுத்த கோட்டை மேடு விவசாயிகள், கள்ளழகர் பெருமாளுக்கு கொண்டு வந்து காணிக்கையாக செலுத்தினர். இதுதவிர வருகிற ஜூன் மாதம் முல்லை பெரியாறு-வைகை பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தினமும் பாசன விவசாயி விதைப்பு என்று சொல்லக் கூடிய நெல்லைகொண்டு வந்து காணிக்கையாக செலுத்தி வருகிறார்கள்.
பக்தர்கள் செலுத்தும் நெல் காணிக்கைகளை சரியாக தானிய கிடங்கில் சேர்க்கப்படுகிறதா என்று தக்கார் வெங்கடாசலம் ஆலோசனையின் பேரில் துணை ஆணையர் ராமசாமி நேரில் ஆய்வு செய்தார். அப்போது தக்கார் பிரதிநிதி நல்லதம்பி, கண்காணிப்பாளர்கள் உடன் இருந்தனர்.
மேலும் விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் கடந்த ஆண்டு விளைந்த நெல், தானிய வகைகளை அலங்காநல்லூரை அடுத்த கோட்டை மேடு விவசாயிகள், கள்ளழகர் பெருமாளுக்கு கொண்டு வந்து காணிக்கையாக செலுத்தினர். இதுதவிர வருகிற ஜூன் மாதம் முல்லை பெரியாறு-வைகை பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தினமும் பாசன விவசாயி விதைப்பு என்று சொல்லக் கூடிய நெல்லைகொண்டு வந்து காணிக்கையாக செலுத்தி வருகிறார்கள்.
பக்தர்கள் செலுத்தும் நெல் காணிக்கைகளை சரியாக தானிய கிடங்கில் சேர்க்கப்படுகிறதா என்று தக்கார் வெங்கடாசலம் ஆலோசனையின் பேரில் துணை ஆணையர் ராமசாமி நேரில் ஆய்வு செய்தார். அப்போது தக்கார் பிரதிநிதி நல்லதம்பி, கண்காணிப்பாளர்கள் உடன் இருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X