search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    மீனாட்சி அம்மன் கோவில்
    X
    மீனாட்சி அம்மன் கோவில்

    மீனாட்சி அம்மன் கோவில் பற்றிய 50 அரிய தகவல்கள்

    மீனாட்சி அம்மன் சிலை மரகதகல்லால் ஆனது. மீனாட்சி சொக்கநாதரை தரிசித்தால் மோட்சம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த தலம் பூலோக கைலாசம் என்று அழைக்கப்படுகிறது.
    1. திருநாவுக்கரசரின் 2 பதிகங்களும், திருஞான சம்பந்தரின் 9 பதிகங்களும் இத்தலத்திற்கு பெருமை சேர்க்கிறது.

    2. அஷ்ட சத்தி மண்டபத்தின் மேல் மாடத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள சிற்பங்கள் மீனாட்சியின் திருவிளையாடல்களை நினைவுபடுத்துவதாக உள்ளது.

    இந்த மண்டப வாயிலின் மையத்தில் நின்று அம்மன் சன்னதியை நோக்கினால் உள்ளே நடக்கும் கற்பூர ஆரத்தியை பார்க்கலாம்.

    3. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு கோவிலில் உள்ள பொற்றாமரை குளத்தில்கிடைத்த ஸ்படிக லிங்கம் மதுரை ஆதீனத்தில் வழிபாட்டில் உள்ளது.

    4. கோவிலில் உள்ள கொலு மண்டபத்தில் நவராத்தியின்போது கொலு பொம்மைகள் வைக்கப் பட்டு சிறப்பு வழிபாடு கள் நடக்கும்.

    5. கோவிலின் 2-ம் பிரகாரத்தில் நூற்றுக்கால் மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தின் உயர்ந்த பீடத்தில் நடராஜர் சிலை உள்ளது.

    6. பக்தர்கள் மனம் குளிரும் வகையில் ஆலயம் எப்போதும் சுத்தமாக பராமரிக்கப்படுகிறது.

    7. ஊஞ்சல் மண்டபம் அருகே மேற்கூரையில் விநாயகர் உள்பட பல்வேறு தெய்வங்களின் உருவங்கள் கண்ணை கவரும் வகையில் வரையப்பட்டுள்ளன.

    8. சுவாமி சன்னதி கருவறையில் சுந்தரேசுவரர் சிவலிங்க திருமேனியாக காட்சி தருகிறார். இது கடம்ப மரத்தடியில் தோன்றிய ஒரு சுயம்பு லிங்கம் ஆகும்.
    இந்த சிவலிங்கம் மேருமலை, வெள்ளிமலை, திருகேதாரம், வாரனாசி போன்ற பகுதிகளில் உள்ள சிவலிங்கங்கள் எல்லாவற்றுக்கும் முன்னதாக தோன்றியதாகும். எனவே இதற்கு மூல லிங்கம் என்ற பெயரும் உண்டு.

    9. மதுரையில் உள்ள புகழ்பெற்ற கோவில்களில் முதன்மையானது மதுரை மீனாட்சியம்மன் ஆலயமாகும். வருடம் முழுவதும் மீனாட்சியம்மனுக்கு திருவிழாக்காலம் தான் என்றாலும், சித்திரைத் திருவிழாவுக்கு மட்டும் தனிச்சிறப்பு உண்டு.

     10. மீனாட்சியம்மனுக்கு ஒருவருடத்தில் கிட்டத்தட்ட 274 நாள்கள் திருவிழா நடைபெறும்.

    11. ரிஷப வாகனத்தில் எழுந்தருளும் சிவபெரு மானை தரிசனம் செய்வது மிகவும் விசேஷமானது. ஆண்டுமுழுவதும் நடைபெறும் வீதிஉலாக் களில் மொத்தம் 16 முறை மட்டுமே சிவபெருமான் ரிஷப வாகனத்தில் எழுந் தருளுகிறார். அந்த வகையில் சித்திரைத் திருவிழாவின் 2 மற்றும் 12-ம் திருநாள்களில் ரிஷபவாகனத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.

    12.சித்திரைத் திருவிழா வின் 4-ம் நாளில், சுவாமி, அம்பாளுடன் வில்லாபுரம் பாவக்காய் மண்டபத்தில் எழுந்தருள்வார். பாவக்காய் மண்டபத்தில் எழுந்தருளும் பெருமான், பக்தர்களின் பாவங்களைக் காய்ந்துபோகச் செய்து நிவாரணம் அளிப்ப தால் இது பாவக்காய் மண்டபம் எனப் பெயர் பெற்றது.

    13. மதுரையில் ஈசன் நிகழ்த் திய திருவிளை யாடல் களான, வேடர்பறி லீலை, வளையல் விற்றது, நரியைப் பரியாக்கியது, பிட்டுக்கு மண் சுமந்தது உள்ளிட்ட திருவிளையாடல்கள் ஆவணி மூலத் திருவிழாவின்போது கொண்டாடப்படும்.

    14. முன்பு திருச்சியைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்த, திருமலை நாயக்கருக்கு, மண்டைச்சளி என்னும் நோய் வந்து அவரை மிகவும் வருத்தியது. ஒருநாள் அவரின் கனவில் ஒலித்த அசரீரி ஒன்று ‘மதுரைக்குப் போய் திருப்பணிகள் செய்’ என கூறியது. அதன்படி அவர் மதுரையில் திருப்பணி செய்தார். இதனால் அவரை பிடித்திருந்த நோய் நீங்கியது. அதன்பிறகு அவர், மதுரையைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்தார். திருமலை நாயக்க மன்னரின் ஆட்சியில் தான் கோயில் விரிவாக்கம் பெற்று, பொலிவுபெற்றது என, அங்குள்ள ஓலைசுவடிகள் தெரிவிக்கின்றன.

    15. திருமலை நாயக்கர் காலத்துக்கு முன்புவரை, மீனாட்சி சுந்தரேசுவரருக்குத் தைப்பூசத்தில் திருக்கல்யாண உற்சவமும் மாசிமாதத்தில் தேரோட்டமும், மாசிமகத்தன்று ‘மீனாட்சி பட்டாபிஷேகமும்’ நடைபெறும் வழக்கம் இருந்ததாம்.

    16. மீனாட்சியம்மன், மதுரையை ஆண்ட பாண்டிய மன்னர்களின் குலதெய்வம் என்பதால், பாண்டிய மன்னர்களின் பூவான ‘வேப்பம்பூ’ மாலையானது பட்டாபிஷே கத்தின் போது சூட்டப்படுகிறது.

    17. மீனாட்சி அம்மன் கோவில் வடக்கு ஆடி வீதியில் கல்லில் இசை வெளியிடும் 5 இசை தூண்களும், ஆயிரங் கால் மண்டபத்தில்2 இசை தூண்களும் உள்ளன.

    18. மதுரை மாநகரின் அடையாளமாக ராஜகோபுரங்கள் விளங்கி வருகின்றன. தூரத்தில் நின்று பார்த்தால் கூட கம்பீரமாக காட்சி அளிக்கும் இந்த கோபுரங்களை பக்தர்கள் தொலைவில் நின்று வணங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

    19. மீனாட்சி அம்மன் சிலை மரகதகல்லால் ஆனது. மீனாட்சி சொக்கநாதரை தரிசித்தால் மோட்சம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த தலம் பூலோக கைலாசம் என்று அழைக்கப்படுகிறது.

    20. சுவாமி சன்னதியில் நுழையும்போது வலது புரத்தில் இருக்கும் நடராஜர் மற்ற கோவில்களில் இருப்பதுபோல் இல்லாமல் இடது காலுக்கு பதில் வலது கால் தூக்கி நடனம் ஆடுவதுபோல் உள்ளது.

    21. இந்த கோவிலில் உள்ள சிலைகள் அமைப்பு இயல், இசை, நாடகம் என்ற மூன்றை யும் விவரிக்கும் வகையில் உள்ளது. இங்குள்ள பல்வேறு சிலைகள், ஓவியங்கள் பல இலக்கியங்களை எடுத்துரைக்கும் விதமாக உள்ளது. பல தூண்களும் இசைபாடக்கூடியது. பல நடன சிற்பங்கள், நாடக சிற்பங்கள் அமைந்து முத்தமிழை முழுவதுமாக உணர்த்துகிறது.

    22. இந்த கோவிலின் சித்திரை வீதியில் பக்தர்கள் கோவிலை சுற்றி வருவதற்குபேட்டரி வாகனங்கள் இயக்கப்படுகின்றன.

    23. நவக்கிரகங்களில் புதனுக்குரியவராக கூறப்படுகிறார் சொக்கநாதர். புதனுக்குரிய பரிகாரங்களை இந்த கோவிலில் உள்ள சிவபெருமானுக்கு செய்வது வழக்கம்.

    24. தல மரமான கடம்ப மரத்தின் நினைவாக கடம்பமரம் ஒன்று கம்பி வேலிக்குள் பாதுகாக்கப்படுகிறது.

    25. மதுரை ரெயில் நிலையம், பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து நடந்து செல்லும் தூரத்தில் இக்கோவில் அமைந்துள்ளது.

    26. மற்ற கோவில்களை போல இங்கு இறைவனுக்கு முடி காணிக்கை செய்வது வழக்கத்தில் இல்லை. காரணம் இந்த கோவிலுக்கு வந்து இறைவனை வழிபட்டாலே நாம் செய்த பாவங்கள் நீங்கி அம்மை, அப்பனின் அருளை பெறுவது திண்ணம்.

    27. தனியாக மீனாட்சி அம்மனுக்கு மட்டும் திருவிழா நடைபெறும் மாதங்கள் நான்கு. (புரட்டாசி, ஐப்பசி, மார்கழி, ஆடி).

    28. இந்த கோவில் ஓவியங்கள் மற்றும் சிற்பங்கள் அனைவரும் கண்டு வியக்கும் வண்ணம் பேரழகு படைத்தவையாகும். கலைநயம் கொண்டவையாக அமைந்துள்ளன. மீனாட்சி அம்மன் கோவில் ஓவியங்கள் அனைத்தும் நாயக்கர் காலத்தை சேர்ந்தவை.

    29. பொற்றாமரை குளத்தின் வடக்கு, கிழக்கு சுவர்களில் நாயக்கர் கால ஓவியங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த ஓவியங்கள் மூலம் புராண கதைகளை அறிவதோடு, அந்த கால மக்களின் ஆடை வகைகள், அணிகலன்கள் போன்றவை பற்றி அறிய முடிகிறது.

    30. மீனாட்சி அம்மன் சன்னதி முன்பாக 8 சக்தி (அஷ்டசக்தி) மண்டபம் அமைந்துள்ளது. வாயிலில் விநாயகர், முருகன் உருவங்களுக்கு இடையே மீனாட்சி திருக்கல்யாணம் சுதை வடிவில் சித்தரிக்கப்பட்டுள்ளன. மண்டபத்தில் அமைந்துள்ள தூண்களில் 8 சக்திவடிவங் கள் அழகுற அமைந்துள்ளன.

    31. முக்குறுணி விநாயகர் ஒரே கல்லிலான அற்புத சிற்பமாகும்.

    32. கம்பத்தடி மண்டபம் சிற்பங் கள் சிறப்பு பெற்றவை. சிவபெருமானது 25 மூர்த்தங்கள் சிற்பங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

    33. கொடி கம்பத்தின் முன் மண்டபத்தில் அமைந்துள்ளநந்தியின் சிலை ஒரே கல்லில் ஆனது.

    34. கருவறை சுவர்களில் உள்ள 32 சிற்பங்கள் கலை நேர்த்தி உடையவை. சுவாமி சன்னதி முன் வெள்ளி யம்பலத்தில் நடராஜர் பெருமானின் உருவம் கல்லிலும், செம்பிலும் அமைந்துள்ளது.

    35. புதுமண்டபம், கம்பத்தடி மண்டபம், ஆயிரங் கால் மண் டபம் ஆகிய 3 மண்டபங்களில் உன்னதமான சிற்பங்கள் உள்ளன. புதுமண்டபத்தில் பிரமாண்டமான கலைநயம் மிக்க வியக்கத்தக்க சிற்பங்கள் அதிகம் உள்ளன.

    36. இந்த கோவில் பாண்டிய மன்னர் காலத்தில் கட்டப்பட்டிருந்தாலும் பெரும்பான்மையான சிற்பங்கள் நாயக்கர் கால பாணியிலேயே அமைந்துள்ளன.
    சிற்ப அமைப்பை கொண்டு நாம் அவற்றின் காலத்தை அறிய முடியும்.

    37. மீனாட்சி அம்மன் கோவில் சங்க காலத்திற்கு முன்பே கட்டப்பட்டது. சுமார் 2300 முதல் 3600 ஆண்டுகளுக்கு முன்னர் இருக்கலாம் என கூறப்படுகிறது.

    38. மீனாட்சி அம்மன் கோவில் வாசலின் இருபுறமும் விநாயகர், சுப்பிரமணியர் காட்சி தருகின்றனர்.

    39. இங்குள்ள ஆறுகால் மண்டபத்தில் தான் பரஞ்ஜோதி முனிவரின் திருவிளையாடல் புராணம் அரங்கேற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

    40. இந்த கோவிலுக்கு சொந்தமாக ஏராளமான அசையா சொத்துக்கள் உள்ளன.

    41. மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி 4 மாடங்கள் அமைந்துள்ளதால் “நான்மாடக்கூடல்” என்ற பெயரும் மதுரைக்கு உண்டு.

    42. இந்த கோவில் அருகே பிரசித்தி பெற்ற கூடலழகர் பெருமாள் கோவில், இம்மையிலும் நன்மை தருவார், மதனகோபாலசுவாமி கோவில்கள் உள்ளன.

    43. அதிக கோவில்கள் நிறைந்த நகரமாக மதுரை உள்ளதால் “கோவில் மாநகரம்” என்று அழைக்கப்படுகிறது.

    44. இத்தலத்தின் வரலாறு தனிபெருமை வாய்ந்ததாகும். தெய்வ மனம் கமழும் தேவார திருப்பதிகங்களில் இடம் பெற்றுள்ள 274 தலங்களில் இதுவும் ஒன்று.

    45. இத்தலத்தின் பெயரை கேட்டதுமே பேரின்ப நிலை கிடைக்கும். இதனால் சிவபெருமானுடைய முக்தி தலங்களுள் ஒன்றாகவும் இத்தலம் கருதப்படுகிறது. இத்தலத்தினை சிவன் முக்திபுரம் என்றும் அழைக்கின்றனர்.

    46. கோவிலுக்குள் செல்ல5 நுழைவு வாயில்கள்உள்ளன. கிழக்கு 2 வாயில்கள் மற்றும் வடக்கு, மேற்கு, தெற்கு கோபுர வாயில்களும் உள்ளன.

    47. மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயதான முதியவர்களுக்கான பேட்டரி கார் (தொடர்புக்கு-83009 56820) வீல் சேர்கள் ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

    48. தினமும் 500 பேருக்குபகல் 12.15 மணிக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

    49. மற்ற அம்மன் கோவில்களை போல இங்கு பக்தர்கள் ஆடு, கோழிகள் பலியிடுவது இல்லை.

    50. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சித்திரை வீதி முழுவதும் கருங்கற்களால் ஆனஅழகிய பாதை அமைக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×