என் மலர்tooltip icon

    வழிபாடு

    பிரசன்ன வெங்கடேசப்பெருமாள்
    X
    பிரசன்ன வெங்கடேசப்பெருமாள்

    பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோவிலில் சித்திரை திருவிழா தொடக்கம்

    தஞ்சை மகர்நோன்பு சாவடியில் உள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் சித்திரை சிறப்பு திருவிழா தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    தஞ்சை மகர்நோன்பு சாவடியில் உள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் 96-ம் ஆண்டு சித்திரை சிறப்பு திருவிழா நேற்று தொடங்கியது. விழாவை முன்னிட்டு பெருமாள் கருட சேவை புறப்பாடு நடைபெற்றது. பல்வேறு வீதிகள் வழியாக வலம் வந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    விழாவில் 5-ந் தேதி வெண்ணைத்தாழி புறப்பாடு, 8-ந் தேதி திருக்கல்யாண வைபவம், இரவு சுவாமி புறப்பாடு நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து 9 ஆம் தேதி வசந்த உற்சவம் இரவு புறப்பாடு, 11-ந் தேதி ராஜகோபால சுவாமி புறப்பாடு, 13-ந் தேதி அனுமந்த வாகனம் இரவு புறப்பாடு, 15-ந் தேதி குதிரை வாகனம் இரவு புறப்பாடு நடைபெற உள்ளது. 18-ந் தேதி விடையாற்றி விழாவுடன் விழா நிறைவடைய உள்ளது.
    Next Story
    ×