என் மலர்
வழிபாடு

அட்சய திருதியை லட்சுமி வழிபாடு
அட்சய திருதியை: எப்படி பிரார்த்திப்பது?
அட்சய திருதியை நாளில் குபேரர் கூட விஷ்ணுவின் மனைவியும், செல்வத்திற்கான தெய்வமான லட்சுமியை வணங்குவார் என லட்சுமி தந்தரம் கூறுகிறது.
அட்சய திருதியை நாளில் கோவிலுக்குச் சென்று லட்சுமிதேவியை மனம் உருக வழிபட வேண்டும். “தாயே நீ தரும் செல்வத்தில் ஒரு பகுதியை நிச்சயம் நல்ல காரியங்களுக்குப் பயன்படுத்துவேன். ஏழை எளியவர்களுக்குத் தானம் செய்வேன். நோயாளிகளுக்கு உதவுவேன்”என வேண்டிக் கொள்ளுங்கள். மனதார தானம் செய்யுங்கள். நிச்சயம் உங்களுக்கு லட்சுமி கடாட்சம் உண்டாகும்.
குபேர லட்சுமி பூஜை
செல்வத்திற்கு அதிபதியான கடவுள் குபேரர் ஆவார். அட்சய திருதியை நாளில் குபேரர் கூட விஷ்ணுவின் மனைவியும், செல்வத்திற்கான தெய்வமான லட்சுமியை வணங்குவார் என லட்சுமி தந்தரம் கூறுகிறது. இந்த நாளில் குபேர லட்சுமி பூஜை நடத்தப்படுகிறது. அதில் லட்சுமி உருவப்படத்துடன் குபேரரின் அடையாளமான சுதர்ஷன குபேர யந்தரமும் ஒன்றாக வைக்கப்பட்டு வணங் கப்படுகிறது.
பவானியில் புனித நீராடல்
அட்சய திருதியை தினத்தன்று பவானி சங்க மேஸ்வரர் ஆலயத்தில் உள்ள முக்கூடல் புண் ணியத் தீர்த்தத்தில் நீராடி னால் நமது எல்லா பாவங்களும் விலகிவிடும் என்பது ஐதீகம்.
இந்த வருட அட்சய திருதியையின் சிறப்பு
அட்சய திருதியை நாள் ரோகிணி நட்சத்திர நாளில் வரும்போது பல லட்சம் மடங்கு நற்பலன் தரும் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது. இந்த வருடம் இன்று திரிதியை திதி அமைவதோடு அன்றைய தினம் ரோகிணி நட்சத்திரமும் வருகிறது. எனவே இந்த வருடம் அட்சய திருதியை தினம் மிகச் சிறப்பானதாக சொல்லப்பட்டுள்ளது.
அட்சய திருதியை அமையும் தினம் புதன்கிழமையாக இருந்தால், அதுவே கோடி மடங்கு நற்பலன் தரும் என்றும் சாஸ்திரம் சொல்கிறது. இந்த ஆண்டு ஜோதிட சாஸ்திரப்படி 2.5.2022 அன்று 58 நாழிகையிலேயே, அதாவது மறுநாள் அதிகாலை 5.10 மணிக்கே திரிதியை திதி வந்துவிடுகிறது. சூரிய உதயத்துக்கு முன்பு என்பதால் முதல் நாள் கணக்கில் வருகிறது. எனவே 2.5.2022 அன்றும் திரிதியை உள்ளதாகக் கொள்ளலாம். மேலும், 3.5.2022 அன்று அதிகாலையில் தொடங்கி மறுநாள் (4.5.2022) காலை 6.59 வரை திரிதியை திதி தொடர்வதால் அன்றும் காலை வரை அட்சய திருதியை தொடர்வதாகவே சொல்லலாம்.
16 கருட சேவை
கும்பகோணம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள 16 பெருமாள் கோவில்களில் இருந்து 16 பெருமாள்கள் அட்சய திருதியை தினத்தன்று கருட வாகனத்தில் புறப்பட்டு வருவார்கள். கும்பகோணம் பெரிய தெருவில் 16 பெருமாள்களும் ஒரு சேர அணிவகுத்து பக்தர்களுக்கு தரிசனம் தருவார்கள். இந்த அற்புத தரிசனம் ஆண்டுக்கு ஒரு தடவையே நடைபெறும். அன்று 16 பெருமாள்களையும் வழிபட்டால் வாழ்வில் வளம் பெருகும் என்பது நம்பிக்கை.
செல்வம் அளித்த பெருமாள்
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி அருகே உள்ள திருக்கோளூரில் நவதிருப்பதி கோவில்களில் ஒரு ஆலயம் உள்ளது. இங்கு பெருமாள் சயன கோலத்தில் உள்ளார். இந்த பெருமாள்தான் குபேரனுக்கு மரக்கால் என்ற அளவை பாத்திரம் கொண்டு செல்வத்தை அளந்து கொடுத்தார். அந்த மரக்காலை தன் தலைக்கு அடியில் வைத்தபடி படுத்திருப்பார். இவருக்கு ‘வைத்தமாநிதி’ என்றும் செல்வம் அளித்த பெருமாள் என்றும் நாமம் சூட்டப்பட்டுள்ளது. அட்சய திருதியை நாளில் இவரைத் தரிசித்தால் வாழ்வில் வளம் சேரும்.
என்னென்ன செய்யலாம்?
அட்சய திருதியை அன்று குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பற்கான ஏற்பாடுகளை செய்யலாம். அல்லது பாட புத்தகங்கள் வாங்கலாம். புத்தகம் வெளியிடுதல், புண்ணியத்தலங்களுக்குச் செல்லுதல், வீடு, மனை, கிணறு சீர்திருத்தம் செய்தல், இடம் மாறிய அதிகாரிகள் பொறுப்பேற்றல் குழந்தைகளுக்குப் பெயர் சூட்டுதல், புதிய ஒப்பந்தங்களை செய்தல், நெல், மஞ்சள், கரும்பு பயிரிடுதல் ஆகியவற்றை செய்யலாம். துர்க்கா,கவுரி, லட்சுமி, சிவ பூஜை நடத்தலாம்.
குபேர லட்சுமி பூஜை
செல்வத்திற்கு அதிபதியான கடவுள் குபேரர் ஆவார். அட்சய திருதியை நாளில் குபேரர் கூட விஷ்ணுவின் மனைவியும், செல்வத்திற்கான தெய்வமான லட்சுமியை வணங்குவார் என லட்சுமி தந்தரம் கூறுகிறது. இந்த நாளில் குபேர லட்சுமி பூஜை நடத்தப்படுகிறது. அதில் லட்சுமி உருவப்படத்துடன் குபேரரின் அடையாளமான சுதர்ஷன குபேர யந்தரமும் ஒன்றாக வைக்கப்பட்டு வணங் கப்படுகிறது.
பவானியில் புனித நீராடல்
அட்சய திருதியை தினத்தன்று பவானி சங்க மேஸ்வரர் ஆலயத்தில் உள்ள முக்கூடல் புண் ணியத் தீர்த்தத்தில் நீராடி னால் நமது எல்லா பாவங்களும் விலகிவிடும் என்பது ஐதீகம்.
இந்த வருட அட்சய திருதியையின் சிறப்பு
அட்சய திருதியை நாள் ரோகிணி நட்சத்திர நாளில் வரும்போது பல லட்சம் மடங்கு நற்பலன் தரும் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது. இந்த வருடம் இன்று திரிதியை திதி அமைவதோடு அன்றைய தினம் ரோகிணி நட்சத்திரமும் வருகிறது. எனவே இந்த வருடம் அட்சய திருதியை தினம் மிகச் சிறப்பானதாக சொல்லப்பட்டுள்ளது.
அட்சய திருதியை அமையும் தினம் புதன்கிழமையாக இருந்தால், அதுவே கோடி மடங்கு நற்பலன் தரும் என்றும் சாஸ்திரம் சொல்கிறது. இந்த ஆண்டு ஜோதிட சாஸ்திரப்படி 2.5.2022 அன்று 58 நாழிகையிலேயே, அதாவது மறுநாள் அதிகாலை 5.10 மணிக்கே திரிதியை திதி வந்துவிடுகிறது. சூரிய உதயத்துக்கு முன்பு என்பதால் முதல் நாள் கணக்கில் வருகிறது. எனவே 2.5.2022 அன்றும் திரிதியை உள்ளதாகக் கொள்ளலாம். மேலும், 3.5.2022 அன்று அதிகாலையில் தொடங்கி மறுநாள் (4.5.2022) காலை 6.59 வரை திரிதியை திதி தொடர்வதால் அன்றும் காலை வரை அட்சய திருதியை தொடர்வதாகவே சொல்லலாம்.
16 கருட சேவை
கும்பகோணம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள 16 பெருமாள் கோவில்களில் இருந்து 16 பெருமாள்கள் அட்சய திருதியை தினத்தன்று கருட வாகனத்தில் புறப்பட்டு வருவார்கள். கும்பகோணம் பெரிய தெருவில் 16 பெருமாள்களும் ஒரு சேர அணிவகுத்து பக்தர்களுக்கு தரிசனம் தருவார்கள். இந்த அற்புத தரிசனம் ஆண்டுக்கு ஒரு தடவையே நடைபெறும். அன்று 16 பெருமாள்களையும் வழிபட்டால் வாழ்வில் வளம் பெருகும் என்பது நம்பிக்கை.
செல்வம் அளித்த பெருமாள்
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி அருகே உள்ள திருக்கோளூரில் நவதிருப்பதி கோவில்களில் ஒரு ஆலயம் உள்ளது. இங்கு பெருமாள் சயன கோலத்தில் உள்ளார். இந்த பெருமாள்தான் குபேரனுக்கு மரக்கால் என்ற அளவை பாத்திரம் கொண்டு செல்வத்தை அளந்து கொடுத்தார். அந்த மரக்காலை தன் தலைக்கு அடியில் வைத்தபடி படுத்திருப்பார். இவருக்கு ‘வைத்தமாநிதி’ என்றும் செல்வம் அளித்த பெருமாள் என்றும் நாமம் சூட்டப்பட்டுள்ளது. அட்சய திருதியை நாளில் இவரைத் தரிசித்தால் வாழ்வில் வளம் சேரும்.
என்னென்ன செய்யலாம்?
அட்சய திருதியை அன்று குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பற்கான ஏற்பாடுகளை செய்யலாம். அல்லது பாட புத்தகங்கள் வாங்கலாம். புத்தகம் வெளியிடுதல், புண்ணியத்தலங்களுக்குச் செல்லுதல், வீடு, மனை, கிணறு சீர்திருத்தம் செய்தல், இடம் மாறிய அதிகாரிகள் பொறுப்பேற்றல் குழந்தைகளுக்குப் பெயர் சூட்டுதல், புதிய ஒப்பந்தங்களை செய்தல், நெல், மஞ்சள், கரும்பு பயிரிடுதல் ஆகியவற்றை செய்யலாம். துர்க்கா,கவுரி, லட்சுமி, சிவ பூஜை நடத்தலாம்.
Next Story






