
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 22ந்தேதி காலை 7 மணிக்கு நடக்கிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுக்கிறார்கள். தேர் 4 மாட வீதிகளில் வலம் வந்து 9 மணிக்கு நிலையை வந்தடையும்.
23-ந்தேதி வெண்ணை தாழி கண்ணன் கோலத்தில் பல்லக்கு சேவை, 24-ந்தேதி காலை 11 மணிக்கு தீர்த்தவாரி உற்சவம், இரவு 7.30 மணிக்கு கண்ணாடி பல்லக்கு சேவை நடக்கிறது. 25-ந்தேதி கொடி இறக்கத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவு பெறும்.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்து வருகிறார்கள்.