search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    வடசேரி கிருஷ்ணசாமி கோவிலில் சித்திரை திருவிழா
    X
    வடசேரி கிருஷ்ணசாமி கோவிலில் சித்திரை திருவிழா

    வடசேரி கிருஷ்ணசாமி கோவிலில் சித்திரை திருவிழா

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    வடசேரி கிருஷ்ணசாமி கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வருகிற 15-ந்தேதி நடக்கிறது.
    நாகர்கோவில் வடசேரி கிருஷ்ணன் கோவிலில் உள்ள கிருஷ்ண சாமி கோவிலில் சித்திரை திருவிழா நேற்று தொடங்கியது. இதையொட்டி காலை 8 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. அப்போது கொடி மரத்திற்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதைத் தொடர்ந்து இரவு 9 மணிக்கு புஷ்ப வாகனத்தில் சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது. 2-ம் நாள் திருவிழாவான நாளை காலை 6 மணிக்கு சுவாமி எழுந்தருளல், காலை 11 மணிக்கு அன்னதானம், இரவு இன்னிசை பட்டிமன்றம், மங்கள இசை ஆகியவை நடக்கிறது. திருவிழா நாட்களில் தினமும் சுவாமி எழுந்தருளும் நிகழ்ச்சியும், மங்கள இசை மற்றும் சிறப்பு தீபாராதனையும் நடக்கிறது.

    விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வருகிற 15-ந் தேதி காலை 8 மணிக்கு நடக்கிறது. தேரோட்டத்தை அமைச்சர் மனோ தங்கராஜ், கலெக்டர் அரவிந்த், மாநகராட்சி மேயர் மகேஷ், எம்.ஆர். காந்தி எம்.எல்.ஏ. ஆகியோர் வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைக்கிறார்கள்.

    அதன்பிறகு இரவு 7 மணிக்கு வெள்ளி கருட வாகனத்தில் சாமி வேட்டைக்கு எழுந்தருள், 9 மணிக்கு சப்தாவர்ணம் போன்றவை நடக்க உள்ளது. விழாவின் இறுதி நாளான 16-ந் தேதி காலை 11 மணிக்கு அன்னதானமும், மாலை 5 மணிக்கு அலங்கார குதிரை பவனியும், முத்து குடையுடன் யானை பவனியும் சிங்காரி மேளத்துடன் நடக்கிறது.

    பின்னர் ஆராட்டு பூஜை, மெல்லிசை மற்றும் இரவு 9 மணிக்கு தெப்பத் திருவிழா ஆகியவை நடக்க இருக்கிறது.
    Next Story
    ×