என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோவில் சித்திரை திருவிழா 7-ந்தேதி தொடங்குகிறது
Byமாலை மலர்4 April 2022 9:01 AM GMT (Updated: 4 April 2022 9:01 AM GMT)
திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோவில் சித்திரை திருவிழா வருகிற 7-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது. 15-ம் தேதி தேரோட்டமும், 16-ம்தேதி தீர்த்தவாரி உற்சவமும் நடைபெறுகிறது.
திருவாடானை தாலுகா திருவெற்றியூரில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தான ராணி மதுராந்தகி நாச்சியார் நிர்வாகத்திற்கு உட்பட்டதும் தமிழகத்தின் பிரசித்தி பெற்ற கோவிலில் ஒன்றான பாகம்பிரியாள் சமேத வல்மீகநாதசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்திரை திருவிழா வருகிற 7-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
10 நாட்கள் நடைபெறும் இந்த கோவில் திருவிழாவில் தினமும் பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு நடக்கிறது. 11-ந் தேதி இரவு சுவாமி, அம்பாள் திருக்கல்யாணம் வைபவம் நடைபெறுகிறது. திருவிழாவையொட்டி சுவாமி, அம்மன் புஷ்ப பல்லக்கு, வெள்ளி ரிஷப வாகனம், பூதம், காமதேனு, அன்ன வாகனங்களில் வீதி உலா நிகழ்ச்சிகளும் நடக்கிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 9-ம் நாள் திருவிழாவையொட்டி 15-ம் தேதியன்று தேரோட்டமும் 10-ம் திருநாளன்று 16-ம் தேதி தீர்த்தவாரி உற்சவமும் நடைபெறுகிறது. இதனையொட்டி பட்டிமன்றம், சிறப்பு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.விழாவில் திருவெற்றியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்களின் மண்டகப்படி மற்றும் அன்னதானம் நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தான மேலாளர் இளங்கோ, திருவெற்றியூர் சரக தேவஸ்தான கண்காணிப்பாளர் செந்தில்குமார், திருவெற்றியூர் பாகம்பிரியாள்கோவில் கவுரவ கண்காணிப்பாளர் சுந்தரராஜன், கோவில் ஸ்தானிகம் மணிகண்ட குருக்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
10 நாட்கள் நடைபெறும் இந்த கோவில் திருவிழாவில் தினமும் பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு நடக்கிறது. 11-ந் தேதி இரவு சுவாமி, அம்பாள் திருக்கல்யாணம் வைபவம் நடைபெறுகிறது. திருவிழாவையொட்டி சுவாமி, அம்மன் புஷ்ப பல்லக்கு, வெள்ளி ரிஷப வாகனம், பூதம், காமதேனு, அன்ன வாகனங்களில் வீதி உலா நிகழ்ச்சிகளும் நடக்கிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 9-ம் நாள் திருவிழாவையொட்டி 15-ம் தேதியன்று தேரோட்டமும் 10-ம் திருநாளன்று 16-ம் தேதி தீர்த்தவாரி உற்சவமும் நடைபெறுகிறது. இதனையொட்டி பட்டிமன்றம், சிறப்பு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.விழாவில் திருவெற்றியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்களின் மண்டகப்படி மற்றும் அன்னதானம் நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தான மேலாளர் இளங்கோ, திருவெற்றியூர் சரக தேவஸ்தான கண்காணிப்பாளர் செந்தில்குமார், திருவெற்றியூர் பாகம்பிரியாள்கோவில் கவுரவ கண்காணிப்பாளர் சுந்தரராஜன், கோவில் ஸ்தானிகம் மணிகண்ட குருக்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X