என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
300 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த கும்பகோணம் உமாமகேஸ்வரர் கோவில் குடமுழுக்கு
Byமாலை மலர்29 March 2022 7:38 AM GMT
காவிரி ஆற்றில் புனித நீராடிவிட்டு இக்கோவிலில் சாமி தரிசனம் செய்தால் திருமணத்தடை நீங்கும் என்பதும், நினைத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும் என்பதும் ஐதீகம்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் சாரங்கபாணி பிள்ளையாம் பேட்டை பகுதியில் உமாதேவி உடனாகிய உமாமகேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் 500 ஆண்டுகள் பழமையானதாகும். காவிரி ஆற்றில் புனித நீராடிவிட்டு இக்கோவிலில் சாமி தரிசனம் செய்தால் திருமணத்தடை நீங்கும் என்பதும், நினைத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும் என்பதும் ஐதீகம்.
இந்த கோவிலில் 300 ஆண்டுகளுக்கு முன்பு குடமுழுக்கு நடந்தது. இந்த நிலையில் மீண்டும் குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் நடந்தன. திருப்பணிகள் முடிவடைந்த நிலையில் கடந்த 26-ந் தேதி முதல் கால யாகசாலை பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், வாஸ்து சாந்தி உள்ளிட்ட பூஜைகள் நடந்தன.
இதனை தொடர்ந்து 27-ந் தேதி யாகசாலை பூஜைகள் நடந்தன. நேற்று 4-ம் கால யாகசாலை பூஜைகள் நடந்தன. இதன் முடிவில் புனித நீர் அடங்கிய கடங்கள் புறப்பாடு நடைபெற்றது. பின்னர் காலை 10 மணிக்கு கோவில் விமானத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது. 300 ஆண்டுகளுக்கு பிறகு இக்கோவிலில் நடந்த குடமுழுக்கு விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இந்த கோவிலில் 300 ஆண்டுகளுக்கு முன்பு குடமுழுக்கு நடந்தது. இந்த நிலையில் மீண்டும் குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் நடந்தன. திருப்பணிகள் முடிவடைந்த நிலையில் கடந்த 26-ந் தேதி முதல் கால யாகசாலை பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், வாஸ்து சாந்தி உள்ளிட்ட பூஜைகள் நடந்தன.
இதனை தொடர்ந்து 27-ந் தேதி யாகசாலை பூஜைகள் நடந்தன. நேற்று 4-ம் கால யாகசாலை பூஜைகள் நடந்தன. இதன் முடிவில் புனித நீர் அடங்கிய கடங்கள் புறப்பாடு நடைபெற்றது. பின்னர் காலை 10 மணிக்கு கோவில் விமானத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது. 300 ஆண்டுகளுக்கு பிறகு இக்கோவிலில் நடந்த குடமுழுக்கு விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X