என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு

X
திருவெள்ளறை கோவில் தேரோட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.
திருவெள்ளறை பெருமாள் கோவில் தேரோட்டம்
By
மாலை மலர்29 March 2022 3:43 AM GMT (Updated: 29 March 2022 3:43 AM GMT)

திருவெள்ளறை பெருமாள் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தொடர்ந்து தேர் ரதவீதிகளில் இழுத்து வரப்பட்டு நிலையை அடைந்தது.
மண்ணச்சநல்லூர் அருகே திருவெள்ளறையில் புண்டரீகாட்ச பெருமாள் கோவில் உள்ளது. ஸ்ரீரங்கம் ெரங்கநாதர் கோவிலின் உபகோவிலான இங்கு ஒவ்வொரு ஆண்டும் தேரோட்டம் நடைபெறும், இந்த ஆண்டுக்கான தேரோட்ட நிகழ்ச்சி கடந்த 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி சுவாமி தினமும் பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. பெருமாள்-தாயார் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினர்.
காலை 6.30 மணிக்கு மேல் 7.15 மணிக்கு தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.இதனிடையே தேருக்குப் பின் பக்கம் சன்ன கட்டை போடுவதில் இரு கிராமத்திற்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் தேரை இழுப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, ஜீயபுரம் போலீஸ் துணை சூப்பிரண்டு செந்தில்குமார் விசாரணை செய்தார். அனைவரும் ஒற்றுமையாக இருந்து தேரை குறிப்பிட்ட நேரத்திற்குள் நிலைக்கு வந்தடைய உதவ வேண்டும், சீருடை அணிந்தவர்கள் மட்டும் அங்கே இருக்கும் படியும், அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் மது அருந்தியவர்கள் அங்கே நிற்க வேண்டாம் என்று அறிவுறுத்தினார்.
அப்போது மது போதையில் இருந்த இளைஞர்கள் சிலர் அவரது சட்டையை பிடித்து இழுத்து கீழே தள்ளியதாக தெரிகிறது. இதை அறிந்த கிராம பட்டயதாரர்கள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் துணை சூப்பிரண்டிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத்தொடர்ந்து திருவிழா அமைதியாக நடப்பதற்கும், தேர் நிலையை அடையவும் ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும் என்று மீண்டும் போலீசார் அவர்களிடம் கேட்டுக் கொண்டனர். அதை தொடர்ந்து காலை 11 மணிக்கு தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தொடர்ந்து தேர் ரதவீதிகளில் இழுத்து வரப்பட்டு நிலையை அடைந்தது.
காலை 6.30 மணிக்கு மேல் 7.15 மணிக்கு தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.இதனிடையே தேருக்குப் பின் பக்கம் சன்ன கட்டை போடுவதில் இரு கிராமத்திற்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் தேரை இழுப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, ஜீயபுரம் போலீஸ் துணை சூப்பிரண்டு செந்தில்குமார் விசாரணை செய்தார். அனைவரும் ஒற்றுமையாக இருந்து தேரை குறிப்பிட்ட நேரத்திற்குள் நிலைக்கு வந்தடைய உதவ வேண்டும், சீருடை அணிந்தவர்கள் மட்டும் அங்கே இருக்கும் படியும், அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் மது அருந்தியவர்கள் அங்கே நிற்க வேண்டாம் என்று அறிவுறுத்தினார்.
அப்போது மது போதையில் இருந்த இளைஞர்கள் சிலர் அவரது சட்டையை பிடித்து இழுத்து கீழே தள்ளியதாக தெரிகிறது. இதை அறிந்த கிராம பட்டயதாரர்கள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் துணை சூப்பிரண்டிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத்தொடர்ந்து திருவிழா அமைதியாக நடப்பதற்கும், தேர் நிலையை அடையவும் ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும் என்று மீண்டும் போலீசார் அவர்களிடம் கேட்டுக் கொண்டனர். அதை தொடர்ந்து காலை 11 மணிக்கு தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தொடர்ந்து தேர் ரதவீதிகளில் இழுத்து வரப்பட்டு நிலையை அடைந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
