
இதை முன்னிட்டு கோவில் வளாகத்தில் உள்ள அனைத்து கோபுரங்களும் புதுப்பித்தும், சிற்பங்கள் சீரமைத்தும் வர்ணம் பூசப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குடமுழுக்கை பக்தர்கள் பார்க்கும் வகையில் கோவில் வாசல் முன்பு பிரமாண்டமான பந்தல் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இதனை தொடர்ந்து கோவில் வளாகத்தில் சிறப்பு மருத்துவ முகாமை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கார்த்திக் சந்திரகுமார் தொடங்கி வைத்தார். இதில் செவிலியர்கள், மருத்துவ மேற்பார்வையாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.