என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
பிரம்மோற்சவம்: ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரா், ஞானப்பிரசுனாம்பிகை, கங்காதேவி தேர்களில் பவனி
Byமாலை மலர்3 March 2022 4:48 AM GMT (Updated: 3 March 2022 4:48 AM GMT)
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழாவையொட்டி 7-வது நாளில் தேரோட்டமும், இரவு தெப்போற்சவமும் நடந்தது.
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 7-வது நாளான நேற்று காலை 11 மணியில் இருந்து மாலை 3.30 மணிவரை தேரோட்டம் நடந்தது. அதில் ஸ்ரீகாளஹஸ்தி தொகுதி எம்.எல்.ஏ. பியப்பு.மதுசூதன்ரெட்டி, கோவில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு.தாரக சீனிவாசுலு ஆகியோர் பங்கேற்று தேரோட்டத்தைத் தொடங்கி வைத்தனர்.
அதைத்தொடர்ந்து ஸ்ரீகாளஹஸ்தி நகரம் மற்றும் கிராமங்களில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் ஓம் நமசிவாய.. ஹர ஹர மகாதேவா சம்போ சங்கரா.. ஜெய் ஜெய் மாதா ஜெகன்மாதா.. எனப் பக்தி கோஷம் எழுப்பி, வடம் பிடித்து தேர்களை இழுத்தனர். சிறிய தேரில் கங்காதேவி, பெரிய தேரில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரா், ஞானப்பிரசுனாம்பிகை தாயார் எழுந்தருளி மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
தேர்கள் மீது பக்தர்கள் உப்பு, மிளகுகளை வீசி நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். பலர் உப்பு, மிளகுகளை வீசி தங்களுக்கு நோய் நொடி வராமல் இருக்க வேண்டும் என வேண்டி கொண்டனர். ஆயிரக்கணக்கான பக்தர்களால் கோவிலின் மாடவீதிகள் நிரம்பின. பலர் தங்களின் வீட்டின் மேல்மாடியில் அமர்ந்து தேரோட்டத்தை கண்டு ரசித்தனர்.
தேரோட்டத்தின்போது பக்தர்களிடையே தள்ளு முள்ளு மற்றும் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க போலீசார் தீவிர பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டனர். பல்வேறு இடங்களில் பக்தர்களுக்கு அன்னதானம், மோர், குளிர்பானம், பானகம் ஆகியவை வழங்கப்பட்டது. அதன் பிறகு நேற்று இரவு 9 மணியளவில் கோவில் அருகில் உள்ள நாரத புஷ்கரணியில் தெப்போற்சவம் நடந்தது.
அதைத்தொடர்ந்து ஸ்ரீகாளஹஸ்தி நகரம் மற்றும் கிராமங்களில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் ஓம் நமசிவாய.. ஹர ஹர மகாதேவா சம்போ சங்கரா.. ஜெய் ஜெய் மாதா ஜெகன்மாதா.. எனப் பக்தி கோஷம் எழுப்பி, வடம் பிடித்து தேர்களை இழுத்தனர். சிறிய தேரில் கங்காதேவி, பெரிய தேரில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரா், ஞானப்பிரசுனாம்பிகை தாயார் எழுந்தருளி மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
தேர்கள் மீது பக்தர்கள் உப்பு, மிளகுகளை வீசி நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். பலர் உப்பு, மிளகுகளை வீசி தங்களுக்கு நோய் நொடி வராமல் இருக்க வேண்டும் என வேண்டி கொண்டனர். ஆயிரக்கணக்கான பக்தர்களால் கோவிலின் மாடவீதிகள் நிரம்பின. பலர் தங்களின் வீட்டின் மேல்மாடியில் அமர்ந்து தேரோட்டத்தை கண்டு ரசித்தனர்.
தேரோட்டத்தின்போது பக்தர்களிடையே தள்ளு முள்ளு மற்றும் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க போலீசார் தீவிர பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டனர். பல்வேறு இடங்களில் பக்தர்களுக்கு அன்னதானம், மோர், குளிர்பானம், பானகம் ஆகியவை வழங்கப்பட்டது. அதன் பிறகு நேற்று இரவு 9 மணியளவில் கோவில் அருகில் உள்ள நாரத புஷ்கரணியில் தெப்போற்சவம் நடந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X