search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ராமேசுவரம் ராமநாதசாமி கோவில்
    X
    ராமேசுவரம் ராமநாதசாமி கோவில்

    மகா சிவராத்திரி: ராமேசுவரத்தில் நாளை விடிய விடிய சிறப்பு பூஜை

    மகா சிவராத்திரி விழாவையொட்டி ராமேசுவரத்தில் நாளை(1-ந்தேதி) விடிய விடிய சிறப்பு பூஜை நடைபெறுகிறது. சிவராத்திரி அன்று இரவு முழுவதும் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
    ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் இந்த ஆண்டின் மாசி மகா சிவராத்திரி திருவிழா கடந்த 21-ந்தேதி தொடங்கியது. இதை தொடர்ந்து தினமும் காலை, மாலை சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

    இந்தநிலையில் திருவிழாவின் 7-வது நாளான நேற்று காலை சுவாமி-அம்பாள் தங்க கேடயத்தில் பஞ்ச மூர்த்திகளுடன் ரத வீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தொடர்ந்து மாலை 5 மணிக்கு சுவாமி - அம்பாள் முத்தங்கி சேவை அலங்காரத்தில் தங்க கேடயத்தில் எழுந்தருளி ரத வீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    திருவிழாவின் 8-வது நாளான இன்று(திங்கட்கிழமை) காலை சாமி-அம்பாள் தங்க கேடயத்திலும், மாலை தங்க குதிரை வாகனத்தில் மேலத்தெரு மண்டக படிக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மாசி மகா சிவராத்திரியை முன்னிட்டு நாளை (1-ந்தேதி) காலை 8.40 மணிக்கு சுவாமி-அம்பாள் தேரோட்ட நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன. அதுபோல் மாசி மகா சிவராத்திரி அன்று நாளை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்படும் கோவில் நடையானது பகல் ஒரு மணி மற்றும் இரவு 8 மணிக்கும் மூடப்படாமல் பகல் மற்றும் இரவு முழுவதும் கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் மகா சிவராத்திரி அபிஷேகம் மற்றும் தரிசனத்தையும் காண அனுமதிக்கப்படுவார்கள். இந்த தகவலை கோவில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
    Next Story
    ×