என் மலர்
வழிபாடு

ஸ்ரீகாளஹஸ்தி சிவனுக்கு விஜயவாடா துர்கையம்மன் வழங்கிய சீர்வரிசை பொருட்கள்
ஸ்ரீகாளஹஸ்தி சிவனுக்கு விஜயவாடா துர்கையம்மன் வழங்கிய சீர்வரிசை பொருட்கள்
ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரருக்கும், ஞானப்பிரசுனாம்பிகை தாயாருக்கும் பட்டு வஸ்திரங்கள், சீர்வரிசை பொருட்கள் ஊர்வலமாக சென்று, கோவில் வளாகத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் அர்ச்சகர்களிடம் சமர்ப்பணம் செய்தனர்.
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. சிவனுக்கு, ஆந்திர மாநிலம் விஜயவாடா துர்கையம்மன் கோவில் சார்பில் சீர்வரிசை பொருட்கள் சமர்ப்பணம் செய்வதற்காக அக்கோவிலின் நிர்வாக அதிகாரி பிரம்மராம்பா தலைமையில் அதிகாரிகள், வேத பண்டிதர்கள் நேற்று ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலுக்கு வந்தனர்.
அவர்கள், ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரருக்கும், ஞானப்பிரசுனாம்பிகை தாயாருக்கும் பட்டு வஸ்திரங்கள், சீர்வரிசை பொருட்களை தட்டுகளில் வைத்து, ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் நிர்வாக அலுவலகம் அருகில் இருந்து தலையில் சுமந்தபடி ஊர்வலமாக சென்று, கோவில் வளாகத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் அர்ச்சகர்களிடம் சமர்ப்பணம் செய்தனர்.
நிகழ்ச்சியில் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜு மற்றும் அதிகாரிகள், அர்ச்சகர்கள், பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
அவர்கள், ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரருக்கும், ஞானப்பிரசுனாம்பிகை தாயாருக்கும் பட்டு வஸ்திரங்கள், சீர்வரிசை பொருட்களை தட்டுகளில் வைத்து, ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் நிர்வாக அலுவலகம் அருகில் இருந்து தலையில் சுமந்தபடி ஊர்வலமாக சென்று, கோவில் வளாகத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் அர்ச்சகர்களிடம் சமர்ப்பணம் செய்தனர்.
நிகழ்ச்சியில் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜு மற்றும் அதிகாரிகள், அர்ச்சகர்கள், பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story






