search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ராமேசுவரம் கோவிலில் குவிந்த பக்தர்கள்
    X
    ராமேசுவரம் கோவிலில் குவிந்த பக்தர்கள்

    ராமேசுவரம் கோவிலில் குவிந்த பக்தர்கள்

    கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் ராமேசுவரம் கோவிலில் விடுமுறை நாளான நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகமாகவே இருந்தது.
    ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் கடந்த சில மாதங்களாகவே கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டு வந்தது. இந்த நிலையில் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் ராமேசுவரம் கோவிலில் விடுமுறை நாளான நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகமாகவே இருந்தது. அக்னி தீர்த்த கடலில் புனித நீராட மற்றும் கோவிலில் உள்ள தீர்த்த கிணறுகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இவ்வாறு தீர்த்த கிணறுகளில் நீராடிய பக்தர்கள் கோவிலில் சாமி மற்றும் அம்பாளை தரிசனம் செய்வதற்கு பிரகாரத்தில் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்து சென்றனர். அதுபோல் தனுஷ்கோடி அரிச்சல்முனை சாலை மற்றும் கடற்கரை பகுதியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாகவே இருந்தது.

    பல மாதங்களுக்குப் பிறகு ராமேசுவரம் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் கோவிலில் ரத வீதி மற்றும் அனைத்து கடற்கரை பகுதிகளில் உள்ள ஓட்டல், டீக்கடை மற்றும் சங்கு சிப்பி மாலை உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளிலும் கூட்டம் காணப்பட்டது. இதனால் வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.
    Next Story
    ×