search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    சிவாலய ஓட்டம்
    X
    சிவாலய ஓட்டம்

    சிவாலய ஓட்டம் தொடர்பான புராண கதை

    பல நூற்றாண்டுகளாக நடைபெறும் சிவாலய ஓட்டம் ஆன்மிகம் மற்றும் வரலாற்று சிறப்பு மிக்க ஒரு முக்கிய நிகழ்வாகும். சிவாலய ஓட்டம் தொடர்பாக மக்கள் மத்தியில் பலவிதமாக புராண கதைகள் நிலவி வருகின்றன.
    சிவாலய ஓட்டம் தொடர்பாக மக்கள் மத்தியில் பலவிதமாக புராண கதைகள் நிலவி வருகின்றன. சூண்டோதரன் என்ற அரக்கன் தவம் செய்து சிவபெருமானிடம் வரம் பெற்று பின்னர், அந்த வரத்தை சிவபெருமானிடமே சோதித்து பார்க்க முயலும் போது சிவபெருமான் ‘கோபாலா... கோவிந்தா...’ என்று அழைத்தவாறு ஓடியதாகவும், இறுதியில் விஷ்ணு மோகினி அவதாரமெடுத்து சூண்டோதரனை அழித்ததாக சொல்லப்படுவது உண்டு.

    இதுதவிர திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோவில் தல புராணம் சிவாலய ஓட்டத்துடன் தொடர்புடையதாக உள்ளது. அரக்கனான கேசனை மகாவிஷ்ணு ஆதிசேடனால் சுற்றி வளைத்து வீழ்த்திய போது கேசன் தனது நெடிய 12 கைகளினால் மனித உயிர்களை வதம் செய்ய முயற்சித்தான். அப்போது அதனைத் தடுக்கும் வகையில் சிவ பக்தனான கேசனின் 12 கைகளிலும் 12 சிவலிங்கங்களைக் கொடுத்தாகவும், அதனால் கேசன் அடங்கியதாகவும் கூறப்படுகிறது.

    புராணத்தின் படியே திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலை மையமாகக் கொண்டு 12 சிவாலயத் திருத்தலங்களும் உள்ளதாகவும் நம்பப்படுகிறது.
    Next Story
    ×