
இந்த ஆலயத்தின் மேற்கூரையில் முப்பரிமாண தோற்றத்திலான கிருஷ்ணர் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இது வியப்பை மேலிடச் செய்யும் ஒரு சிலை என்றால் அது மிகையல்ல.
ஏனெனில் இந்த சிலை, 5 உடல்கள் கொண்டது. ஆனால் அந்த ஐந்து உடல்களுக்கும் கச்சிதமாக பொருந்தும் வகையில் இரண்டு கரங்களும், ஒற்றை தலையும் கொண்டதாக இந்த சிலையை செதுக்கியிருக்கிறார்கள். இது 11-12-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது.