என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
காளஹஸ்தி கோவிலில் மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா இன்று தொடங்குகிறது
Byமாலை மலர்24 Feb 2022 7:52 AM GMT (Updated: 24 Feb 2022 7:52 AM GMT)
ஸ்ரீகாளஹஸ்தியில் பிரம்மோற்சவ விழா தொடங்குவதால் பக்தர்களுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக, அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இதனால் கோவில் வளாகம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.வரவேற்பு தோரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கோவில் கோபுரங்கள் மற்றும் சிவன் அம்பாள் உலாவரும் மாடவீதிகளில் மின் விளக்குகள் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. வீதி உலாவிற்கு பயன் படுத்தப்படும் வாகனங்கள் அனைத்தும் சீரமைப்பு செய்து வண்ணம் பூசப்பட்டு உள்ளன. கலை நிகழ்ச்சிகள் நடத்தும் கலை அரங்கம் சீரமைக்கப்பட்டுள்ளது. கோவில் அருகில் கூடுதல் கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
சொர்ணமுகி ஆற்றில் பக்தர்கள் புனித நீராடுவதற்காக கரைகளில் தற்காலிக குளியலறைகள், உடை மாற்றும் அறைகள் கட்டப்பட்டுள்ளன.இதுதவிர பக்தர்களுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
வருகிற 1-ந் தேதி மகா சிவராத்திரியையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள் என்பதால் விரைவு தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மகா சிவராத்திரி அன்று காலை முதல் இரவு வரை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம், குடிநீர் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
இதனால் கோவில் வளாகம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.வரவேற்பு தோரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கோவில் கோபுரங்கள் மற்றும் சிவன் அம்பாள் உலாவரும் மாடவீதிகளில் மின் விளக்குகள் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. வீதி உலாவிற்கு பயன் படுத்தப்படும் வாகனங்கள் அனைத்தும் சீரமைப்பு செய்து வண்ணம் பூசப்பட்டு உள்ளன. கலை நிகழ்ச்சிகள் நடத்தும் கலை அரங்கம் சீரமைக்கப்பட்டுள்ளது. கோவில் அருகில் கூடுதல் கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
சொர்ணமுகி ஆற்றில் பக்தர்கள் புனித நீராடுவதற்காக கரைகளில் தற்காலிக குளியலறைகள், உடை மாற்றும் அறைகள் கட்டப்பட்டுள்ளன.இதுதவிர பக்தர்களுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
வருகிற 1-ந் தேதி மகா சிவராத்திரியையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள் என்பதால் விரைவு தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மகா சிவராத்திரி அன்று காலை முதல் இரவு வரை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம், குடிநீர் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X